அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/17/13

33 .கிந்தம மகரிஷி கோத்ரம்

இப்பெயருடைய ஒரு மகரிஷியைப் பற்றி மஹாபாரதம் தம் ஆதி பருவத்தில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. அதனைத் தவிர வேறு செய்திகள் ஏதும் புலப்படவில்லை.

நல்ல நேரம் ஒன்றில், சந்ததி விருத்தி பொருட்டுத் தன் மனைவியை நாடினர் மகரிஷி. காலம் பகற்காலம். நேரமே நல்ல நேரம். எனவே முனிவரும் அவர் முனிவரும் மான்வடிவம் கொண்டனர். காட்டில் வேட்டையாடிவந்த பாண்டு மன்னன் அறியாது இம்மான்களின் மீது பாணங்கள் ஏய்தான். அம்பு பட்ட மான்கள் முனிவராகவும் முனிபத்தினியுமாக மாறி கிழே விழுந்தனர்.

பாண்டுவே! சேர்க்கையில் இருக்கும் மிருகங்களை வேட்டையாடக் கூடாது என்பது விதி. வேட்டை விதியை மீறினாய், தர்மம் தவறி எம் மீது பாணம் ஏவிய நீ; உன் மனைவியைச் சேர்ந்தால் உனக்கு மரணம் சம்பவிக்கும் எனச் சாபம் இட்டார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஞ்சலியதவரு :- கூப்பிய கரங்களுடன் எப்போதும் இருப்பவர். ஓயாது இறைவனை அஞ்சலித்தே காலம் கழிந்தவர். சிறந்த பக்திமான்.
சஜ்ஜனதவரு :- சத்சங்கத் தொடர்பு உடையவர். உத்தமர்களோடு மட்டும் தொடர்பு கொள்பவர்.
குத்தாலதவரு :- குத்தாலரிஷியை வீட்டுத் தெய்வமாகக் கொண்டவர்.
தஞ்சை மாவட்டம் திருமயிலாடுதுறைக்கு அருகே உள்ள குத்தாலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கல்லனதவரு :-

No comments:

Post a Comment