அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/3/13

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் குண்டம் திருவிழா, பூளவாடி ,1994

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் குண்டம் திருவிழா, பூளவாடி ,1994
நன்றி பார்தீபன்




இரண்டு அம்மன் சப்பரங்கள் நடனமாடும் அற்புதகாட்சிகள்



இந்த காட்சி எங்கள் ஊரான திருப்பூர் மாவட்டம் வெள்ளிவிழா காலனி மற்றும் அருகில் உள்ள   பொன் கோவில் நகர்  ஆகிய ஊர்களில் ஒரே சமயத்தில் செளடேஸ்வரி அம்மன் சப்பர மெரவனம் எடுத்து விடப்பட்டது .அப்போது வெள்ளி விழா காலனி சப்பரம் பொன் கோவில் நகர் சென்றபோது இரண்டு அம்மன் சப்பரங்களும் சேர்ந்து நடனம் ஆடிய கண்கொள்ளா காட்சி அனைவரும் காண்க.அம்மன் அருள் பெறுக.




இந்த காட்சி எங்கள் ஊரான திருப்பூர் மாவட்டம் வெள்ளிவிழா காலனி மற்றும் அருகில் உள்ள   பொன் கோவில் நகர்  ஆகிய ஊர்களில் ஒரே சமயத்தில் செளடேஸ்வரி அம்மன் சப்பர மெரவனம் எடுத்து விடப்பட்டது .அப்போது வெள்ளி விழா காலனி சப்பரம் பொன் கோவில் நகர் சென்றபோது இரண்டு அம்மன் சப்பரங்களும் சேர்ந்து நடனம் ஆடிய கண்கொள்ளா காட்சி அனைவரும் காண்க.அம்மன் அருள் பெறுக.

தேவாங்கர்களின் புத்தகங்கள்


















65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- மரீசி மகரிஷியின் புத்திரர் காசியபர். இக் காசியபருக்கு அக்நியிடமாகப் பிறந்த மகன் இவர். இவரால் செய்யப்பட்டது சாண்டில்ய ஸ்மிருதி ஆகும். தான்யமாலி என்பானை முதலையாகச் சபித்தார். அநுமனால் சாபம் விலகும் என அருள் செய்தார். சஞ்சீவிமலையின் பொருட்டு வந்த அநுமன் காலினை இவன் பற்றி இழுக்க அநுமனால் சாபவிமோசனம் பெற்றான்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தியகுலதவரு :- பத்தாயிரம் குலத்தாரில் கடைசிகுலத்தார் இவர்கள்.
அர்க்ககுலம்தவரு :- அர்க்கம் - சூரியன். சூரியனைக் குலதெய்வமாக இஷ்டதெய்வமாகக் கொண்டவர்.
கண்டதவரு :- கண்டம் - கழுத்து. கழுத்தில் ருத்திராட்சம் கட்டிக் கொள்பவர்.
குடகுதவரு, கெடகுதவரு, குடகுநாடுதவரு :- குடகுநாட்டுப் பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குண்டம்தவரு :- நாள்தோறும் அக்நிகுண்டம் வளர்த்து யாகம் செய்பவர். அம்மன் திருவிழாவில் அக்நிகுண்டத்தில் இறங்கும் உரிமை பெற்றவர்.
கூர்மாதவரு :- கூர்மாவதாரத்தை இஷ்டதெய்வமாக, வீட்டு தெய்வமாகக் கொண்டவர்.
கொணபுலதவரு :- கொணபுலம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொம்பதவரு :- மரக்கிளையை நட்டு அதன் அடியில் வழிபாடு செய்பவர்.
சகஸ்ரதவரு :- சகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர். ஆயிரத்தில் ஒருவர்.
திலகதவரு :- நெற்றியில் கஸ்தூரித்திலகம் இட்டுக் கொள்பவர்.
தொண்டதவரு :- கர்நாடகத்தில் உள்ள தொண்டபாலி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தோடாதவரு :- கைகளில் தங்கத் தோடா அணிந்தவர்.
மெட்ளதவரு :- கால்விரலில் மெட்டி அணிந்தவர்.
நெடுமாமடிதவரு :- கர்நாடகாவில் உள்ள நெடுமாமடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நிர்மலதவரு :- தூயமனம் கொண்டவர்.
பெஜவாடதவரு :- பெஜவாடா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மரகலபுரதவரு :- மரகலபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மிடதலதவரு :- மிடதலம் = பாச்சை - இதனைக் கன்னடத்தில் ஜிரளை என்று அழைப்பர். மிடதலத்தினைப் போன்ற உடல் நிறம் கொண்டவர்.
முரகலதவரு :- முரகலம் ஒருவகைக் காது அணி. அதனை அணிந்தவர்.
லலாடதவரு :- விசாலமான நெற்றியுடையவர்.
வும்மட்டிதவரு :- வரிக்குருமத்தங்காய் கொண்டு பல வைத்தியம் செய்பவர்.
ஜடாதவரு :- ஜடா ஒரு வகை மூலிகை - அதனைக் கொண்டு பலவகை வைத்தியம் செய்பவர்.
அஸ்வதவரு :- குதிரைச் செல்வம் மிக்கவர். அநேக குதிரைகளுடன் வாழ்ந்தவர். குதிரை வாகனம் கொண்டவர்.
பொங்கலதவரு :- ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனுக்குப் பொங்கலிட்டுப் பூசித்தவர்.
ஹொன்னுகளசதவரு :- தங்கக் கலசம் வைத்து பூசிப்பவர்.
காப்பூரதவரு, நிடிகோத்ரிம்தவரு, படுகுதவரு, தொந்தாதவரு, பகுதவரு, பரடிதவரு, பங்குலதவரு, பரமெட்டிதவரு, மடமிதவரு, பும்மடிதவரு.

தேவதாசமையன் அவதாரம்

இறைவன் கட்டளைக்கு இணங்க ஆமோத நகரை ஆட்சி செய்யும் வாமதேவ மன்னனின் மனைவி கமலலோசனையின் திருவயிற்றில் போய்ப் பிறந்தான். மகனைப் பெற்ற மன்னன் பெருமகிழ்ச்சி உற்றான். பிறந்த மைந்தனுக்கு தேவதாசமையன் எனப் பெயரிடுமாறு பலரும் வியந்து போற்ற வானொலி உண்டாயிற்று. அவ்வாறே பெற்றோர்கள் பெயர் சூட்ட தேவதாசமையன் தெய்வக் குழந்தையாக வளர்ந்து வந்தான். வேதம் முதலான எல்லா கலை ஞானங்களையும் கற்றுணர்ந்தான். வீராங்க மன்னனின் மகள் திலதாவதியை மணந்தான். மகனின் தகுதியை அறிந்து வாமதேவ மன்னன் ஆட்சியை மகனிடம் ஒப்படைத்து விட்டுத் தானும் தன்மனைவியுமாகத் தவம் செய்யக் காட்டுக்கு ஏகினான். ஆட்சியில் அமர்ந்த தேவதாசமையன் இறைவன் ஆணையை நினைவு கூர்ந்தான். நாட்டில் வீர சைவநெறியை நிலைநிறுத்த எண்ணினான். அப்போது நாட்டில் எங்கும் சின்னெறிப் பல் சமயங்கள் நிரம்பி அறியாமை இருள் பரவி இருந்தது. இதை மாற்றிச் சைவ நன்னெறியைப் பரப்பி நாட்டில் அன்பு அருள் அறங்கள் பரவும்படிச் செய்ய முற்பட்டான். மதத்தின் பெயரால் அழிவழுக்குப் பேசியவர்களின் மதத்தை அழித்தான். அறிவியல் வழி' மதவாதங்கள் புரிவதை விட்டு வெறும் அற்புதங்களின் வழி மதத்தை நிலைநாட்ட முற்பட்டனர் சில மதவாதிகள். அவர்களையும் ஏற்றவாறு தெருட்டினான். சைவ நன்னெறியின் மேலான கருத்துக்களை தேவதாசமையன் எங்கும் பரப்பினான். நெறியில்லா நெறிதன்னை நெறியாகக் கொண்டு ஒழுக்கமும் சீலமும் கெட்டு தடுமாற்றத்தில் வாழ்ந்த மக்களிடை அவர்களின் அன்றைய வாழ்க்கை முறைகளின் கேட்டையும் எடுத்துக் கூறினான். உய்யநெறி சைவமே என்பதைத் தெளிய உணர்த்தி அம்மக்களைத் தெருட்டினான். மக்களும் தவற்றை உணர்ந்து சைவநெறியை ஏற்று தேவதாசரை அண்டினர். திருந்திவந்த மக்களுக்குத் திருநீறும் கண்டிகையும் அணிவித்து இலிங்கதாரணம் செய்தான். சமணரும் பௌத்தரும் கூட தேவதாச மன்னரின் அருளுரைகளைக் கேட்டு அருட்பணியை உணர்ந்து திருந்தி சைவம் சார்ந்தனர். நெறியில்லா சமயங்கள் ஒழிந்தன. சைவப்பயிர் எங்கும் தழைத்தது. இவ்வாறு தேவதாச மன்னனின் அவதாரப்பணி நிறைவேறியது. இவருக்கு விருபாட்சன் என்ற மகன் பிறந்தான். உரியபருவத்தில் அவனுக்குக் காஞ்சனமாலை என்ற அரச கன்னியை மனம் செய்வித்து அவனுக்கு மணிமுடி சூட்டி ஆட்சியையும் ஒப்படைத்தார். வந்த பணி முடிந்துவிட்டதால் தெய்வ வழிபாட்டில் இறங்கினார்.