அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/30/13

கருங்கல்பட்டி நவராத்திரி விழா... அழைப்பிதழ்



நன்றி லோகேஷ் , கருங்கல்பட்டி  வீரகுமாரர்கள்  குழு

132 .பீமக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சிணிகியதவரு :- சிணுங்கல் குணம் கொண்டவர். 
குடகியதவரு :- குடகுப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
கொண்டீவரதவரு :- வடகர்நாடகாவில் உள்ள கொண்டீவர என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
ஜலஸ்தம்பதவரு :- தண்ணீரைக் கட்டி அதன் மீது நடப்பதும், உள்ளே மூழ்கி அகமருஷண ஜபம் செய்வதுமாகிய யோகவன்மை மிக்கவர்.

9/29/13

அம்மன் படங்கள்


பொள்ளாச்சி சௌண்டம்மன் திருவிழா அழைப்பிதழ்

ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் துணை 

            பொருளாட்சி செய்யும் பொள்ளாச்சி மாநகர் தனில் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருகோவிலில் 72ம் ஆண்டு நவராத்திரி கலை விழா  மற்றும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு சேவை மற்றும் அம்மன்  சிம்மவாகனத்தில் வீதி உலா 14-10-2013 திங்கட்கிழமை மாலை நடைபெறும். 

தினமும் மாலை 5.30- 7.30 மணி வரை ஹோமங்களும் கலைநிகழ்ச்சி களும் நடைபெறும் . 7.30-8.00 மணி வரை குலம் காக்க கொலுவிருக்கும் அம்பிகைக்கு சிறப்பு நவராத்திரி கொலு மஹா பூஜை நடைபெறும்.

அனைவரும் வருக பொள்ளாச்சி ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் அருள் பெருக!!










தேவாங்க ப்ளாக் மூலமாக அனைவருக்கும் விழா அழைபிதழ் அனுப்பிய செல்வி சுஷ்மிதா சந்திரசேகர், பொள்ளாச்சி  அவர்களுக்கு நன்றி...

131 .பிருகு மகரிஷி கோத்ரம்

பிரம்மதேவரின் மானச புத்திரரில் இவர் ஒருவர். பிருகு மகரிஷிக்குப் புலோமிசை, கியாதி என்போர் பத்தினிகள். ஒரு முறை இம் மாமுனிவர் தம்மனைவி புலோமிசையை யாகத்திற்காக அக்நியை வளர்க்கச் சொல்லி நீராடச் சென்றார். 

கர்ப்பிணியாய் இருந்த புலோமிசையை அரக்கன் ஒருவன் தூக்கிச் சென்றான். கர்ப்பத்தில் இருந்த குழந்தை நழுவி வெளிவந்தது. குழந்தை அரக்கனை எரித்தது. நழுவிப் பிறந்ததால் அக்குழந்தைக்கு சியவனன் என்ற காரணப்பெயர் பெற்றது. 

இதனை அறிந்த பிருகு மகரிஷி; அரக்கன் தன் மனைவியைத் தூக்கிச் செல்லும்போது அருகிலே இருந்தும் அவனைத் தடுக்காததால் அக்நி மீது கோபம் கொண்டார். இனி அக்நி சுத்த வஸ்த்துக்கள் அன்றி அசுத்த வஸ்த்துக்களையும் எரிக்கக் கடவன் என்று சபித்தார். 

மும்மூர்த்திகளில் சத்துவகுணம் கொண்ட மூர்த்தி யார் ? என்று அறிந்து கொள்ள மகரிஷிகள் ஒருமுறை விரும்பினார். மகரிஷிகள் பிருகு மகரிஷியைத் திரிமூர்த்திகளிடம் அனுப்பினர். 

கைலாயம் சென்ற பிறகு ருத்திரனை லிங்கவடிவமாக்கியும், சத்தியலோகம் சென்று பிரம்மனுக்குப் பூசனைகள் அற்றுப் போகும் படியும் சபித்து, வைகுண்டம் சென்றார். 

வைகுண்டநாதனை மார்பில் உதைத்தார். திருமால் அவர் கால்களைப் பிடித்து விட்டு அவரின் அகந்தையை அழித்தார். திரிமூர்த்திகளில் ஸ்ரீ மகாவிஷ்ணுவே சத்துவகுணம் கொண்ட மூர்த்தி என அறிந்து வந்து முனிவர்களுக்கு அறிவித்தார். 

வருணனுடைய சந்ததி இவர் என்று யஜூர் வேதம் முழங்கும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஜாலகல்லதவரு :- ஜாலகல்ல என்னும் ஊர்க்காரர். 

மாண்டெயதவரு :- மாண்டியா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

மாடதவரு :- மாடமாளிகை கட்டி வாழ்ந்தவர். ஆலயங்களுக்கு மாடங்கள் கட்டித் தந்தவர். 

கட்லாபுரியதவரு :- கட்லாபுரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

நாசிகதவரு :- மூக்குபற்றி வந்த ஒரு பெயர். 

கும்மனதவரு :-

9/28/13

130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம்

129ல் கண்ட பிருங்கி மகரிஷியும், இவரும் ஒருவராக இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கபிகேயதவரு :- கபி - குரங்கு, கேய - நடனம். குரங்கு போல நடனமிட்டவர். 
துளுவசேனதவரு :- துளுவதேசச் சேனைகளுக்குச் சேனைத் தலைவராக இருந்தவர். 
அடிக்யதவரு :-

9/27/13

வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் அழைப்பிதழ் (லத்தேகாரர் குலம்)


கன்னட மொழி

கர்நாடக மாநிலம், மராத்தி நாட்டின் தென் பகுதியில் பேசப்படும் மொழி கன்னட மொழி ஆகும். கருநாடகம் என்றும், கானரிஸ் என்றும் கூறுவர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் கன்னட மொழி பேசுகின்றனர். கர்நாடகம் என்னும் வடசொல் திரிந்து, கன்னடம் என்றானது என்பர் வடநூலார். ‘கன்னடம்’ என்பது ‘திராவிடச் சொல்’ என்பார் டாக்டர் குண்டர்ட். கன்னடத்தில், பழங்கன்னடம், புதுக் கன்னடம் என்னும் இரு வகை உள்ளன. புதுக் கன்னடத்தின் எழுத்து முறை தெலுங்கு மொழியின் எழுத்து முறையை ஒட்டி அமைந்துள்ளது என்பார் ஏ.எஸ். ஆச்சார்யா. அவர் பல ஆய்வுகள் செய்துள்ளார். எச்.எஸ். பிலிகிரி (H.S. Biligiri) கன்னட மொழியின் ஒலியன்களைப் பற்றி ஆராய்ந்துள்ளார். கன்னட மொழியின் வட்டார வழக்குகளில் ஒன்று தேவாங்கா கன்னடம் ஆகும். தமிழகத்தில் உள்ள சின்னாளப்பட்டி, அருப்புக்கோட்டை பகுதிகளில் வாழும் தேவாங்கா செட்டியார் தேவாங்கா கன்னடம் பேசுகின்றனர். தமிழ்ச் சொற்களை ஏற்று, தமிழுடன் நெருங்கிய தொடர்பு உடையதாக இம்மொழி உள்ளது. மைசூர்ப் பகுதியிலுள்ள கன்னட மொழியிலிருந்து தேவாங்கக் கன்னடம் வேறுபடுகிறது. கன்னடத்தின் மற்றொரு வட்டார வழக்கு கௌடா கன்னடம் ஆகும். இதில் 14 உயிரொலிகள் (9 குறில் 5 நெடில்) 22 மெய் ஒலிகள் உள்ளன என்று டாக்டர் கே. குசலப்பா கௌடா குறிப்பிடுவார். கர்நாடகத்தின் தென் பகுதியிலும், கூர்க் மாவட்டத்திலும் வாழும் கௌடர்கள் பேசும் மொழி கௌடா கன்னடம் ஆகும். 1968இல் கன்னட மொழியை ஆராய்ந்த போசிரியர் உபாத்தியாயா கன்னட மொழியின் நான்கு வட்டார வழக்குகளை ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார். கன்னட மொழியின் பேச்சு வடிவம் பற்றிப் பேராசிரியர் வில்லியம் பிரைட் (William Bright) விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
                                                                                                                                                         நன்றி,
                                                                                                                                                      திரு. A.தியாக ராஜன்

129 .பிருங்கி மகரிஷி கோத்ரம்

பிருங்கிமகரிஷி தேவதேவனான சிவபிரானை மட்டும் தரிசிப்பதில் பிரியம் கொண்டவர். மாம்சமில்லாத தேகம் கொண்டவர். வெண்ணிறச் சிகை கொண்டவர். தண்டம், ஜபமாலை இவற்றைத் தரித்தவர். மூன்று கண்கள் உடையவர். நிருத்தனம் செய்யும் தோற்றத்துடன் விளங்குபவர் இம் மகரிஷி. 

மோட்சத்தை விரும்பிய மகரிஷி இவர். சிவபெருமானே பரம்பொருள் என நம்பிய இம்முனிவர் சிவமூர்த்தியை மட்டுமே தரிசித்து வணங்கி வந்தார். அம்பிகையை வழிபட மறுத்தார். சக்தியின் சக்தியை முனிவருக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள் அம்மை. 

உடம்பில் சக்தியின் அம்சங்களான உதிரம், மாம்சம் இவற்றை முனிவரின் உடலில் வற்றச் செய்தாள். நிற்க இயலாத முனிவர் நிலைத்துநிற்க மூன்றாவது காலும், கையில் ஒரு தண்டத்தினையும் இறைவன் வழங்கினான். 

இதனால் அம்பிகைதவம் இயற்றி இறைவனின் இடப்புரத்தினையும், பக்தர் வழிபாட்டில் உரிமையும் பெற்றாள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காகண்டியதவரு :- ஆந்திராவில் உள்ள காகண்டி என்னும் ஊர்க்காரர். 

நிகுண்டியதவரு :- ஆந்திராவில் உள்ள நிகுண்டி என்னும் ஊர்க்காரர். 

கொஜ்ஜம்தவரு :- கர்நாடகாவில் உள்ள கொஜ்ஜம் என்னும் ஊர்க்காரர். 

மங்கலதவரு :- ஆந்திராவில் உள்ள மங்களபுரம் என்னும் ஊர்க்காரர். 

கர்ணதவரு :- கர்ணாசனம் செய்பவர். 

சிந்தனதவரு :- சிந்தனை மிக்கவர். சிந்தனையாளர்.

9/26/13

128 .பிரதாப மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பன்னிபத்ரியதவரு :- வன்னிமர இலைகளைக் கொண்டு வழிபாடு செய்பவர். 

குசுமபூவுலதவரு :- மலர் மொட்டுக்களைக் கொண்டு மாலைகட்டி; அம்மாலைகளைத் தெய்வத்திற்குச் சாத்தி வழிபடுபவர். 

தாரணதவரு :- லிங்கதாரணம் செய்து கொண்டவர்கள். 

நாரிகேளதவரு :- ஆலயங்களுக்குத் தேங்காய்களைத் தானமாக வழங்குவதைப் பழக்கமாகக் கொண்டவர். 

மான்யதவரு :- தம் கலைத்திறமைகளுக்காகவும் பிறவற்றிற்காகவும் அரசரிடம் மான்யம் பெற்றவர்கள். 

மதுரதவரு :- மதுராபுரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 

மீனாட்சியம்மனதவரு :- மதுரை மீனாட்சியம்மனை வழிபாடு செய்பவர். 

வீரண்ணதவரு :- வீரபத்திர சுவாமியை வழிபட்டு வருபவர்கள். மேலும் இவர்கள் ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருவிழாவில் வீரமுஷ்டிகன் வேடம் அணிவதை வழக்கமாகக் கொண்டவர்கள். 

சிந்தாலதவரு :-

9/25/13

மாஹாபாரதம் (எளிய தமிழில்)

நண்பர்களுக்கு வணக்கம் , நமது தேவாங்க புராணம் முடிந்தபிறகு புராண /இதிகாச கதைகள் நமது வலைபூவில் வரவில்லை . ஆகையால் புதிய தொடராக நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மாஹாபாரதம் நம் பிளக்கில் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் வெளிவர உள்ளது .தங்கள் ஆதரவை எப்போதும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் கருத்துக்கள் / ஆலோசனைகளை எதிர்பார்கிறோம்.

ஜெய் தேவாங்கா. ஜெய் ஜெய் தேவாங்கா

ஶ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் துணை .

ஜெய் தேவாங்கா. ஜெய் ஜெய் தேவாங்கா.

தேவாங்கர் குல மக்களுக்கு வணக்கம்.
நாங்கள் நம் தேவாங்கர் குல அன்னை ஶ்ரீசெளடேஸ்வரி அம்மனை அனைவரும் வீட்டில் வைத்து கும்பிடுவதற்கு முயற்சி எடுக்கலாம் என்று நினைத்து அதை பற்றி பேஸ் புக் மூலம் சர்வே எடுத்தோம். பலரும் பல விதமான கருத்துக்களை கூறியிருந்தீர்கள். அதை பற்றி நம் குல முக்கியஸ்தர்களிடம் கேட்கலாம் என்று முகவரி கேட்டிருந்தோம். அனைவரும் அளித்தீர்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று பெரியோர்களிடம் விசாரித்தோம். அதில் கிடைத்த தகவலை தங்களுக்கு தருகிறோம்.

தற்போது ஒவ்வொரு ஏரியாக்களிலும் வெவ்வேறான நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.
உதாரணமாக‌-  
                                                                                                                                                                             A மற்றும், B  என்பதை.இரு பகுதி மக்களாக எடுத்து கொண்டால்


               A 
                  B  
1
ஶ்ரீசெளடம்மன் வழிபாடு [அம்மனை ஏதோ ஒரு ரூபத்தில்]
வீட்டில் வைத்து கும்பிடுகிறார்கள்
வீட்டில் வைத்து கும்பிடுவது இல்லை
2
கோவிலில் பிரசாதமாக அணிய கொடுப்பது
பண்டாரம் என்கிற மஞ்சள் கலவை
திருநீறு, குங்குமம், சந்தனம்
3
ஜனிமாரா என்ற பூணூல்
வருடம் ஒரு முறை ஆவணி மாதத்தில் நோன்பு வைத்து போடுகிறார்கள்
பூணூல் போடுகிறார்கள் நோன்பு வைத்து போடும் பழக்கம் இல்லை
4
கோவில் அப்ப என்று சொல்லக்கூடிய வருட திருவிழா [சில இடங்களில் நவராத்ரி விழா]
சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, ஜோதி கொண்டு வருதல், மஞ்சள் மெரமனை, வீரமுட்டி வேஷம்
அப்ப என்ற வார்த்தையே தெரியாது. விழா என்பார்கள். கரகம் கொண்டு வருதல், முளைப்பாரி, ரதி சேர்த்தல் [அரிசிமாவு+ வெல்லம் சேர்த்தல்], அம்மன் வீதி உலா
5
கத்தி போடுதல்
சிரிய கத்தி போட்டு கொண்டு சலங்கை கட்டிக் கொண்டு வித,விதமாக நாட்டியம் போல் செய்கிறார்கள்
பெரிய கத்தி போடுகிறார்கள். இரத்தம் வழிய ஆக்ரோஷமாக போடுகிறார்கள். பத்தேவு என்கிற- வாளை வீசிக் கொண்டே அம்மன் கதை+ மக்களுக்கான வேண்டுதல்கள் சொல்கிறார்கள்
6
சக்தி நிலை நிறுத்துதல் [மண் சட்டியின் மேல் விழிம்பில் ஜம்முதாடு கத்தியை நிறுத்துவது]
இந்த வழக்கம் இல்லை
10 திலிருந்து 20 வருடத்திற்கு ஒரு முறை நிறுத்துகிறார்கள்
7
கத்தேவு பெட்டி [திரு நீறுபை, ஜம்முதாடு கத்தி என்ற சக்தியை வைத்திருப்பது]

இந்த முறை இல்லை
இதை முக்கியமாக கருதுகிறார்கள்
8
திருமணம்-- தாலி கட்டுவது
மணமகனின் வலது பக்கம் மணமகளை உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
மணமகனின் இடது பக்கம் மணமகளை உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
9
இறந்தவர்களுக்கு செய்யும் திவசம்
மூன்று படையல் வைத்து அரிசியை வைத்து முறை செய்கிறார்கள்
ஒரு படையல் மட்டும் வைத்து கும்பிடுகிறார்கள்

இன்னும் மற்ற பல சடங்கு முறைகளிலும், பழக்க வழக்கங்களிலும், கன்னடம் பேச்சு வழக்கும் அந்த, அந்த ஏரியா மக்களின் பழக்க வழகங்களோடு கலந்து இருப்பதால், இவற்றை யெல்லாம் மாற்றி ஒருமுக படுத்துவது சிரமம். ஆகவே அவரவர்கள் பிறந்ததிலிருந்தே இரத்திலேயே ஊறி போன பழக்க வழக்கங்களை மாற்ற முடியாது. தேவாங்க மக்கள் அந்த,அந்த ஏரியா வழக்கப்படி நடந்து கொள்ளட்டும். யாரும், யாருடையதையும் குறைத்து மதிப்பிடாமல் அனைவருடையதையும் மதித்து நடந்து கொள்வோம். இதை செய்தாலே போதும். நம் குலம் ஒற்றுமையுடன் இருக்கும். ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
ஜெய் தேவாங்கா. ஜெய் ஜெய் தேவாங்கா

                                   அன்புடன்
                                   S.V. ராஜ ரத்தினம்.
                                   ர. பார்த்திபன்

புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு

  

புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு 


நண்பர்களுக்கு வணக்கம், புரட்டாசியில் மட்டும் ஏன் பெருமாளுக்கு சிறப்பு. பூமி சூரியனின் சுற்று பாதையில் சூரியனின் வீரியத்தில் இருந்து மறைகிற காலம். புரட்டாசியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தை மாதம் மகர ராசியில் சஞ்சரிகிறவரை 4 மாதங்கள் பூமி சூரியனின் தென் கோட்டு பகுதியில் பயணிக்கிற காலம். தென் மேற்கு பருவ மழை முடிஞ்சு ஆடி காற்றை கடந்து அடை மழை பருவ காலத்தில் பூமி நுழைகிற மாதம் புரட்டாசி .அக்காலத்தில் மக்கள் ஆடியில் விதைத்து விட்டு மழைக்காக எதிர் பார்த்து கொண்டு இருக்கிற பருவமும் கூட.
இந்த பிரபஞ்ச பருவ நிலை மாற்றம் பூமியில் மனித உடம்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.பூமியின் ஜீவராசிகளின் இனபெருக்கத்திற்கான காலம்.மந்த மாருதம் என்று சொல்லுகிற ஊத காற்று வீசுகிற காலம்.
சரி இதற்கும் பெருமாள் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம். இதற்க்கு முன் ஒரு கேள்வி. ஏன் மற்ற தெய்வங்களை புரட்டாசிற்க்கு சொல்ல வில்லை? குறிப்பாக சிவ வழிபாட்டை ஏன் கூறவில்லை? ஏன் பெருமாளை மட்டும்
வழிபட சொன்னார்கள்.ஏனென்றால் ஈஸ்வர சக்தி குருதன்மை முக்தி,சந்நியாசி குணம்.பெருமாள் சுக்கிர தன்மை கல்யாண குணம் சம்சாரம்.களத்திரம்.இந்த இரண்டு கோவிலுக்கும் செல்கிறவர்கள் நிச்சயம் இந்த வேறுபாட்டை உணர்ந்து இருப்பார்கள்.ஈஸ்வர கோவிலில் ஒரு அமைதியையும் பெருமாள் கோவிலில் ஒரு உற்சாக உணர்வையும் உணர்ந்து இருப்பார்கள்.
இந்த இனபெருக்க பருவத்தில் பெருமாள்கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன் படுத்துகிற பச்சை கற்பூரம்,சந்தனம்,சம்பங்கி பூ,துளசி தீர்த்தம்.போன்றவை உதவும்.இது நம்முள் சுக்கிர தன்மையை தூண்டியும் சமன்படுத்தவும்(neutralizer ) செய்யும். மனதும் தெய்வீக தன்மையோடு இருக்கும்.இந்த பருவத்தில் உருவாகிற வாரிசுகள் நிலைதன்மைஉடனும்,புத்தி சாலிகளாகவும், தெய்வ பக்தி உடையவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் உடம்பில் அசுர தன்மையை தூண்ட கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் சம்சார வாழ்வில் ஈடுபட்டு நல் வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்றுதான் புரடசியில் பெருமாள் வழிபாடு.
மேலும் அடைமழை காலம் தொடங்குவதால் பருவ நிலை மாற்றத்தால் உண்டாகிற தொற்று நோய் கிருமிகள் உருவாகி நம் உடம்பை தாக்கும்.(சளி காய்ச்சல் போன்றவை ) இதிலிருந்து காக்கவும் பெருமாள் கோவில் பச்சை கற்பூரமும் துளசியும், நாம் இருக்கிற விரதமும் மனதையும் உடம்பையும் தகுடு போல வைக்க உதவும். ஐயப்பன் விரதம் இருப்பவர்களுக்கு தெரியும் 48 நாள் விரதம் உடம்பை எந்த அளவுக்கு சீராக்கும் என்று.அடை மழை காலம் என்பதால் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் ஆதலால் எளிதில் ஜீரணமாககூடிய சைவ உணவுகளை உட்கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு சிறிது நேரம் தங்கி இருந்து அச்சக்தியை புரடசியில் பெற்று வாருங்கள்.வயதில் இருப்பவர்கள் நல்ல வாரிசுகளை பெறுங்கள் வயது கடந்தவர்கள் நல்ல தேக ஆரோகியத்தை பெறுங்கள்.

127 .பிப்பல மகரிஷி கோத்ரம்

வேதாந்த விசாரங்களில் கருத்துன்றியிருந்த ஒரு மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சாத்வீகதவரு :- சாந்தகுணம் கொண்டவர். 
சிந்தனதவரு :- சிந்தனை மிக்கவர். சிந்தனையாளர். 
மனோமதம்தவரு :- மனத்திண்மை மிக்கவர். 
மாளகொண்டதவரு :- மாள என்னும் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
ரவலதவரு :- ரவ - வைரம்; வைராபரணம் அணிபவர். வைர வணிகம் செய்தவர். 
ராவுலதவரு :- நாரதர் போல நன்மையில் முடியும் கலகங்களைச் செய்பவர். கலகப்பிரியர். 
கணேவட்டாரதவரு :- கணேவட்டாரம் என்னும் ஊர்க்காரர். 
கல்லுகோட்டைதவரு :- கல்லுகோட்டை என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கற்கோட்டை கட்டி வாழ்ந்தவராக இருக்கலாம். 
மனெமன்மதவரு, மன்னேதவரு, மன்னேமந்தம்தவரு, மோகட்டியதவரு, பந்துமாத்திதவரு, பந்துமொத்ததவரு.

9/24/13

அம்மன் படங்கள்


126 .பிகி மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தும்மிதவரு :- தும்பைப் பூவால் சிவபிரானை வழிபடுபவர்.

125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம்

இரண்டு முகங்களும், நான்கு கைகளும் கொண்ட ஒரு மகரிஷி. இரண்டு கைகளால் சர்வநமஸ்காரம் செய்து கொண்டும். இரண்டு கைகளில் இரண்டு தாமரை மலர்களைப் பிடித்துக் கொண்டும் காட்சி தருவார். நீலரத்தின ஆபரணங்களையும், சிகப்பு வஸ்திரங்களையும் அணிந்து செந்நிறமாக இருப்பார். 

பயிலவ மகரிஷியிடம் ரிக்வேதம் ஓதியவராகவும் கூறப்படுகின்றார். 

பாஸ்கரன் - சூரியன்; எனவே சூரியனின் பெயரைத் தாங்கிய மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அங்கிதவரு :- அங்கிகள் தயாரிப்பவர்; அணிபவர். 
கச்சதவரு :- பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு வாழ்பவர். 
கந்ததவரு :- சந்தனம் அரைத்து ஆலயங்களுக்குத் தருவதைத் தொண்டாகக் கொண்டவர். 
காசிதவரு :- காசியைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
குட்டதவரு :- சிறு குன்றுகளில் வசித்தவர். 
கோரகதவரு :- கோரகம் என்னும் ஊர்க்காரர். 
கோரண்டிதவரு :- மைசூரில் உள்ள கோரண்டி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சிந்தகிஞ்சலதவரு :- புளியங்கொட்டை பற்றி வந்தவொரு பெயர். 
சிந்தனதவரு :- சிந்தனை மிக்கவர். 
தாசரிதவரு :- திருமால் அடியார்களான தாசர்களைப் பூசிப்பவர். இவர்கள் தாமும் தாசர்களாக விளங்குபவர்கள். 
நாரிகேளதவரு :- ஆலயங்களுக்குத் தேங்காய்களைத் தானமாக வழங்குவதைப் பழக்கமாகக் கொண்டவர். 
புனுகுதவரு :- வாசனைத் திரவியங்களுள் புனுகும் ஒன்று. இவர்கள் யாகாதி புனித காரியங்களுக்குப் புனுகு வழங்குவதைத் தொண்டாகக் கொண்டவர்கள். 
போடாதவரு :- ஆந்திராவில் உள்ள போடபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
முத்ரம்தவரு :- சங்கு, சக்கர முத்திரை தரித்துக் கொண்டவர். 
வார்த்தாதவரு :- அழகாக வார்த்தையாட வல்லவர். 
ஜாலததவரு :- மாயா ஜாலங்கள் கற்றவர். 
ஸ்ருங்கிதவரு :- கலைக்கோட்டு முனிவர் எனப்படும் ரிஷ்ய ஸ்ருங்க முனிவரை வழிபடுபவர். 
ஹாஸ்யதவரு :- நகைச்சுவையாகப் பேச வல்லவர். 
பவளதவரு :- பவளம் அணிவதில் விருப்பம் உள்ளவர். பவள வியாபாரம் செய்தவர். 
பாளதவரு :- தென்னம்பாளையை வழிபாட்டில் பயன்படுத்தியவர். 
கணிதவரு :- கணித சாஸ்திரத்தில் வல்லவர். 
குசுமசித்துலதவரு, கும்மனதவரு, சிச்சுதவரு, கரசத்துதவரு, கரவத்துதவரு, பசரிதவரு, பயள்ளதவரு, பஹரதவரு, போதாதவரு, முப்பனதவரு, முள்ளுதவரு, ரபம்தவரு, ரப்பம்தவரு.

9/23/13

124 .பாவஜ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பின்னலதவரு :- நின்னலதவரு.

9/22/13

சென்னை குன்றத்தூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா

சென்னை குன்றத்தூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா புகைப்படங்கள்.
இந்த புகைப்படங்களை நமக்கு அனுப்பிய திரு சிவச்சந்திரன் ரங்கநாதன் புஞ்சை புளியம்பட்டி, அவர்களுக்கு நன்றி.






















விழாவை சிறப்பாக நடத்திய சென்னை தேவாங்க மகாஜன சபை மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள்  அனைவருக்கும் நன்றிகள்.


123 .பாபால மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உள்ளினவரு :- வெங்காயம் பற்றி வந்தவொரு பெயர். 
கந்தனதவரு ;-

9/21/13

122 .பாக மகரிஷி கோத்ரம் :

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மஞ்சரியதவரு :- மஞ்சரி என்னும் வியாகரண சாஸ்திரத்தில் வல்லவர்கள். 
குத்தியதவரு :-

9/20/13

121 .பர்வத மகரிஷி கோத்ரம் :

பர்வத மகரிஷி தேவரிஷிகளுள் ஒருவர். நாரதரின் சகோதரியின் புத்திரர். இவர் நாரதமகரிஷியைத் தன் குருவாகக் கொண்டவர். இருவரும் மிக ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்ததால் பர்வத நாரதர் என்று அழைக்கப்பட்டார். 

தேவாங்க சம்பிரதாயத்தில் பர்வதம் என்றால் அது ஸ்ரீ சைலத்தைக் குறிக்கும் - எனவே இவர் ஸ்ரீ சைலத்தில் தவம் செய்தவர் என்றும் கூறப்படுகின்றது. நாரதர் ஒரு முறை பர்வதரைப் பூவுலகில் சுற்றி வரும்படி நியமித்தார். அப்போது பர்வதர் ஸ்ரீ சைலத்தில் தங்கித் தவம் செய்து இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கஞ்சலகுண்டதவரு :- கஞ்சம் = தாமரை. தாமரை வடிவமாக யாககுண்டம் அமைத்து யாகம் செய்வது என்பது ஒருமுறை. 

கோமயத்திற்கு - பசுவின் நீர்; கஞ்சல என்பது பெயர். சுத்திக் கிரமங்கள் செய்வதற்குக் கஞ்சலம் தெளிப்பது முறை. கஞ்சலம் தெளித்து தலசுத்தி முதலியன செய்து யாகம் வளர்த்து ஆசாரசீலர்களாக வாழ்ந்தவர்கள். 
சக்கரதவரு, சக்ராலதவரு :- சங்குசக்ர முத்திரை தரித்துக் கொண்டவர். சமஸ்காரம் செய்து கொண்டவர். இவர்களுடைய சமாதியிலும் சக்கரம் ஸ்தாபிக்கப் பெறும். 
சங்கரதவரு :- சங்கரனை வழிபடுபவர். 
சப்தகவியவரு :- ஏழுவிதமாகக் கவி பாடுபவர். 
சரபகவியவரு :- சிங்கத்தை வெல்லும் பறவை சரபம் என்பது. எனவே சரபத்தைப் போன்று யாராலும் வெல்ல முடியாத கவிஞர் இவர். 
சஜ்ஜாதவரு :- வெள்ளிப் பெட்டியில் சிவலிங்கம் வைத்துப் பூசிப்பவர். 
ரங்கதவரு :- ஸ்ரீ ரங்கநாதனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர். 
மாதனதவரு :- செல்வந்தர்கள். 
சாந்திதவரு :- அமைதியாக வாழ்பவர். 
பெக்லாலதவரு, முப்பனதவரு, முள்ளதவரு, யுர்மனதவரு, அங்கபுதவரு.

9/19/13

120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம்

ரிக்வேதத்தில் 9-67; 11-1-30; 37-43; 53-74 வது ரிக்குகளுக்குப் பரத்வாஜர் கர்த்தா. இம்முனிவர் நாள்தோறும்அக்நிஹோத்ரம் செய்வார். 

கங்கையில் இவர் நீராடச் செல்கையில் தம் வீரியத்தைத் துரோண கும்பத்தில் வைத்தார். இத்தேஜஸினால் துரோணர் பிறந்தார். துரோண கும்பத்திலிருந்து பிறந்தமையின் துரோணர் எனப்பட்டார். 

ரிக்வேதத்திலும், சாமவேதத்திலும் பல சூக்தங்களுக்குப் பரத்வாஜர் கர்த்தா. 

மிகவும் வயதானவர். நீண்ட காலம் வாழ்ந்தவர். முந்நூறு ஆண்டுக்காலம் பிரம்மச்சரியத்துடன் வேதங்களை ஓதியவர். அங்கங்கள் நொந்து முதிர்ந்து தளர்ந்து படுக்கையில் இருந்த இவரிடம் வந்த இந்திரன் இன்னும் நூறாண்டு காலம் ஆயுளை உமக்குத் தந்தால் என்ன செய்வீர் ? என்றான். அந்நூறாண்டு ஆயுளிலும் பிரம்மச்சரியத்தை மேற்கொள்வேன். வேதம் ஓதிக் காலம் கழிப்பேன் என்றார் பரத்வாஜர். 

வனவாசம் மேற்கொண்டு இராமபிரான் இவர் ஆசிரமத்திற்குச் சென்றான். மீண்டும் இராவணவதம் முடிந்து அயோத்தியைக்கு மீண்டு வருகையில் இவரது ஆசிரமம் வந்து விருந்து உண்டனன் எம்பிரான்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீகாகுளதவரு :- ஸ்ரீ காகுளம் என்னும் ஊர்க்காரர். 

கங்காளதவரு :- கங்காள ருத்திரனை வழிபடுபவர். 

கமலதவரு :- தாமரை மலர்களைக் கொண்டு வழிபாடு செய்பவர். 

குத்தாலதவரு :- குத்தால மகரிஷியை வணங்குபவர் குத்தாலம் என்னும் ஊர்க்காரர். 

கொசனதவரு :- 

சிகாகோலதவரு :- கூந்தலை மிக அழகாக அலங்கரித்துக் கொள்பவர். 

சிலுகதவரு :- கிளி வளர்த்தவர். 

சீலவந்துதவரு :- சீலத்துடன் விளங்குபவர். 

சென்னூறுதவரு :- சென்னூரு என்னும் ஊர்க்காரர். 

நிரஞ்சனதவரு :- மனநிறைவுடன் செல்வத்துடன் வாழ்பவர். 

நீகூரிதவரு :- நீகூரி என்னும் ஊர்க்காரர். 

பகடலதவரு :- பவள நகை அணிபவர். பவள வணிகர். 

பங்காருதவரு :- தங்க நகை அணிபவர். தங்கமானவர். 

பட்டதவரு :- அரசனிடம் பட்டயங்கள் பெற்றவர். 

பயிடிதவரு, பைடிதவரு :- பசுக்களை வளர்த்தவர். 

பாபகதவரு :- நேர் வகிடு எடுத்துக் கூந்தலை முடித்துக் கொள்பவர். 

மத்திகூடிதவரு :- மத்திகூடி என்னும் ஊர்க்காரர். 

மராபத்திரைதவரு :- மராபத்தினி என்னும் ஊர்க்காரர். 

முங்குரதவரு :- மூக்குத்தி அணிபவர். 

முத்யதவரு :- முத்துநகை அணிபவர். முத்து வணிகர். 

மதுரதவரு :- மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

கட்கதவரு :- அம்மனின் 32 விருதுகளில் கத்தியும் ஒன்று. கத்தியை வழிபாடு செய்து வணங்குபவர். 

முத்கரதவரு :- காயத்ரி மஹாமந்திரத்தின் 24 முத்திரைகளில் முத்கரம் ஒன்று. இம் முத்கா முத்திரையை உடம்பில் தரித்தவர்.

9/17/13

கல்யாணமாம் கல்யாணம்

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்

அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ.............

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்

அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்

அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்

அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அட அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அங்க கறந்து கறந்து போகுதய்யா, கந்தநூலு சிட்டையும்....
கந்தநூலு சிட்டையும்..

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்

கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ

பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ

அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..

பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா....
அந்த நாடக்கு அடில உருளக்கட்ட வழவழப்ப தருகுது..வழவழப்ப தருகுது.

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ

இந்த மணமக்களை வரவுவக்கிற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ....

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்