அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
5/18/13
34 .கிருது மகரிஷி கோத்ரம்
பிரம்மதேவனின் உடம்பிலிருந்து உதித்த ஒரு மகரிஷி. இம் மகரிஷிக்கு வாலகில்யர்
பிறந்தார் என்ற குறிப்புகள் மட்டும் தெரிகின்றன. வேறு வரலாறுகள் புலப்படவில்லை.
சிலகதவரு :- சிலகம்-கிளி; கிளிவடிவான சுகப்பிரம்மத்தை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்
வங்குசப் பெயர் விளக்கங்கள்
ஆரணியதவரு :- அரணி-நெருப்பு; தவறாது அக்நி ஹோத்ரம் செய்பவர். தினந்தோறும் யாகங்கள் செய்பவர். யாகாக்கினியில் வழிபாடு செய்பவர்.சிலகதவரு :- சிலகம்-கிளி; கிளிவடிவான சுகப்பிரம்மத்தை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்
பற்பல ஆடைகள் படைத்தது
நாடு திரும்பிய முனிவர் நெசவு நெய்வதற்கு மேலும் தேவைப்பட்ட வடம் கயிறு
அச்சு மற்ற உபகரணங்களைத் தாமே தயார் செய்து கொண்டார். இங்கு ஓர் ஐயம்
எழலாம்
நெசவுக் கருவிகளில் உபகரணங்களைத் தயார் செய்து கொள்ளும் ஆற்றலைப் பெற்ற
முனிவர் முதன்மையான கருவிகளையும் தாமே செய்து கொண்டு இருக்கலாமல்லவா?
கருவிகளுக்காக மேருமலையிலிருக்கும் மயனை நோக்கி ஏன் போக வேண்டும்?
தேவலமுனிவர் சிவபெருமானின் பக்தரும் மானத புத்திரருமாயிற்றே. அவரிடம்
கருவிகளைச்
செய்து கொள்ளும் ஆற்றல் இல்லாமலா இருக்கும் என்பது.
திருவருளும் நல்லொழுக்கமும் பெற்ற முனிவர், வேண்டும் கருவிகளைத் தாமே
செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றவரே. எனினும் ஐவர கருவிகள் வேண்டி
மேருமலைக்குப்
போகக் காரணம், போகும் வழியில் சாபம் பெற்றுத் துன்புற்றிருந்த
சிங்கத்திற்கும் அசுரனுக்கும் சாப நீக்கம் தரவும் மயனிடம் போர்க்கருவிகளைப்
பெறவும் ஆகும்.
சாதனம் பலவு மேற்பச் சமைத்திட வல்லோன் வேண்டிக்
கோதிலா மயன்பாற் சென்ற கொள்கையா தென்னிற் கேன்மின்
ஏதமார் சாபத்தாழ்வுற் றிருந்தூய் வில்லாத்
தீதுறு நிருதனுக்குந் திறலுரறு சீயத்திற்கும்
சொல்லுமச் சாப நீக்கந் தூயதே வாங்கன் றன்னாற்
புல்லுமென் றறவோர் மாற்றம் பொருந்திய வதனான் மேருக்
கல்லிடைக் கருவி பெற்று வந்திடும் கரும முன்னி
யொல்லையின் வழிக்கொண்டந்த வும்பர் கம்மியன் பாற் சென்றான்.
இனி முனிவர் ஆடைகளை நெய்வதற்காக் கருவிகளைப் பூட்டி தயார் செய்து
கொள்கின்றனர். தொழிலை ஆரம்பிக்குமுன் தமது குலதெய்வமான சவுடநாயகியை
மெய்யன்போடு நினைக்கின்றார்.
அம்மையும் முனிவர் முன் தோன்றி "என்னை நினைத்த காரணம் யாது? ' என்று வினவ,
முனிவரும் அம்மையை வணங்கி அம்மையே! தேவர் முதல் யாவருக்கும் அடியேன்
ஆடைகள்
வழங்க வேண்டியிருப்பதால் நான் நெய்யும் ஆடைகள் ஒன்று பலவாகப் பெருக
வேண்டும். ஆடைகள் பெறுகின்றவர் மனமகிழும்படி அந்த ஆடைகள் பன்னிறங்களில்
அமையவும் வேண்டும்.
என்று வேண்டிப் பணிந்து நின்றார்.
அம்மையும் பொன் வளையல் ஒன்றைக் கொடுத்து " இதை அணிந்து கொண்டு துணி
நெய்தால் நீ நினைத்தபடியெல்லாம் நிறத்தாலும் வடிவத்தாலும் ஆடைகள் அமையும்.
ஒன்று பலவாகவும்
பெருகும்.' என்று ஆசி கூறி மறைந்தருளினார். முனிவரும் நல்ல சுப
முகூர்த்தத்தில் அம்மை அளித்த பொன் வளையலைக் கையில் அணிந்தவாறு ஆடைகள்
நெய்யத் துவங்கினார்.
தேவல முனிவர் நெய்து தயாரித்த ஆடைகளின் பெயர்கள் வருமாறு:
1. நேத்திர பந்தர்
2. அமிர்த சந்திர பந்தர்
3. அன்ன பந்தர்
4. அன்ன புஞ்சர்
5. பலவகைத் தாராவளிகள்
6. மேகாவளிகள்
என்பன வாகும்.
உருத்திர தனுவன் தேவருலகம் சேர்தல்
அதன் பின் தேவல முனிவர் தமது பிரயாணத்தைத் தொடர்ந்தார். கங்கைக் கரையை
அடைந்தார். இது சூரிய குலத்து வந்த பகீரதன், தன் முன்னோர்களான சகர
மன்னர்கள் 100 பேர்
தாம் பெற்ற சாபம் நீங்கி நற்கதி அடையத் தவமியற்றி உலகுக்குக் கொணர்ந்த
புனற்கங்கையாகும். இது தன்னில் நீராடுவோரின் பாவங்களைப்போக்கி நற்கதி
அடையச் செய்யும்
புனிதமுடையது.
இப்பெரும் புனற்கங்கையில் தேவலர் நீராடி நாட்கடன்களை முடித்துக் கொண்டு
மூன்று நாட்கள் தங்கினார். பின் பிரயாணத்தை தொடங்கி வாலகில்லிய ஆசிரமத்தை
அடைந்தார்.
ஆசிரமம் எங்கனும் ஏராளமான நறுமணப்பூக்கள் பூக்கும் மரங்களும் செடிகளும்
நிரம்பி இருந்தன. மலர்ச்சோலையும் அழகிய வாவிகளும் நிரம்பிய அந்த ஆசிரமம்
அமைதிச் சின்னமாய்
இருந்தது. பகையே அங்கு இருக்கவில்லை. பாம்பும் மயிலும், சிங்கமும்
யானையும், கழுகும் புறாவும் பகையின்றி அருகருகு இருந்து வசித்தன. வேத ஒலி
ஒலித்தன.
நாகணவாய்ப் பறவைகளும் வேதம் ஓதின.
இவ்வாறு தெய்வமணம் கமழும் ஆசிரமத்துள் சென்ற தேவலர் வாலகில்லிய முனிவரை
அணுகி வணங்கி, அவரது ஆசி பெற்று அவரருகே அமர்ந்தார். ஆசிரமவாசிகளின் நலம்
பற்றி வினவினார்.
அதற்கு வாலகில்லிய முனிவர் எங்கள் யாக கர்மங்கள் சிவபெருமான் திருவருளால்
செவ்வனே நடைபெற்று வருகின்றன. எனினும் அண்மையில் ஒரு துன்பம்
நேர்ந்துள்ளது.
இந்த வனத்தில் இரண்டு காததூரத்தில் ஒரு மலைக்குகையில் குண்டிகன் என்னும்
அசுரன் வசிக்கின்றான்.
அவன், மலை போன்ற திரண்ட தோள்களும் கோரப்பற்களும் உடையவன். மூன்று
உலகங்களையும் அழிக்க வல்ல சூலம் ஒன்றையும் ஏந்தி உள்ளான். பாபமே வடிவான
அவன் அழிந்தாலன்றி
நாங்கள் இங்கு அமைதியாக வாழமுடியாது. அவன் தவ வலிமையாலும் அடக்க முடியா
வல்லமை உடையவனாயுள்ளான். முனிவர்களின் துன்பத்தைக் களைந்து காப்பது
மன்னனின் கடமை அல்லவா?
தாங்கள் தான் அந்த அசுரனை அழித்து இக்கானகத்தில் வாழும் எங்களுக்கு
அமைதியைத் தேடித் தரவேண்டும் என்றார்.
இதைக் கேட்ட தேவலர் ' உங்கள் துயர் தீர அந்த அசுரனைக் கொன்று வருவேன்'
என்று கூறி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு போர்க்கருவிகளை எந்தியவராய்
போர்க்கோலம பூண்டு
குண்டிகன் என்னும் அசுரன் இருக்கும் மலைக்குகையைத் தேடிச் சென்றார்.
குகையையும் அடைந்தார்.
அங்கு அசுரன் நாள் தோறும் பல உயிர்களைக்கொன்று தின்று எறிந்த பிணங்களும்
எலும்புகளும் மலை போல் குவிந்திருக்கக் கண்டார். பெரிதும் திடுக்கிட்டார்.
" இந்த அசுரனை இப்போதே அழிப்பேன் " அது என் கடமை " என்றவாறு வில்லெடுத்து
நாணேற்றி குணத்தொனி செய்தார்.
நாணொலி கேட்ட அசுரன் சினத்துடன் சூலபாணியாய் வெளியே வந்து தேவல முனிவரைக்
கண்டு கடுமையாக எதிர்த்தான். தேவலர் பலவித ஆயுதங்களைக் கொண்டு அரக்கனோடு
நீண்டநேரம் போரிட்டார். முடிவில் அர்த்தசந்திர பாணம் ஒன்றால் அரக்கனின்
தலையை அறுத்து வீழ்த்தினார். அப்போது இறந்த அரக்கனின் உடம்பிலிருந்து வீரன்
ஒருவன்
வெளிப்பட்டு விமானம் ஒன்றில் ஏறக்கண்டார்.அதிசயித்து அவனைப் பார்த்து " நீ
யார்? " என்று வினவினார். அவன் நான் விசாலமாபுரி மன்னன். உக்கிரதனுவன்
என்பது என் பெயர்.
என்னுடைய நாட்டைத் துன்புறுத்தி வந்த விகடன் என்ற அரக்கனைக் கொன்றேன்.
அவனுடைய அண்ணன் கற்கடன் என்பவன் என்னைப் பழி வாங்கும் எண்ணத்தில் என்னிடம்
கபடமாகச் சமையற்காரனாகச் சேர்ந்தான்.
ஒரு நாள் துர்வாச முனிவர் என்னைக் காண வந்தார். அவருக்கு அறுசுவை உண்டி
அளிக்குமாறு சமையற்காரனைப் பணித்தேன். தூர்வாச முனிவர் முன்கோபத்துக்குப்
பேர்போனவர்.
இதை அறிந்திருந்த கபட நாடக கற்கடன் அதுவே என்னைப் பழிவாங்குவதற்கு ஏற்ற
தருணம் என்பதை ஓர்ந்து நரமாமிசத்தைச் சமைத்து தூர்வாச முனிவருக்குப்
படைத்தான்.
இத்தீய செயலைக் கண்ட முனிவர் என்மீது சினங்கொண்டு நரமாமிசம் தேடி அலையும்
அரக்கன் ஆகும் படி சபித்தார்.
நான் பெரிதும் துன்புற்று அவரை வணங்கிச் சாப விமோசனம் வேண்டிப் பணிந்தேன்.
அவரும் இரங்கித் தங்களால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருள் செய்தார்.
சாபத்தின் காரணமாய் அரக்கனாகி இதுவரை பல உயிர்களைக் கொன்றும்
துன்புறுத்தியும் பாபச் சேற்றில் மூழ்கியிருந்தேன். கருணாமூர்த்தியாகிய
தங்களால் இன்று நான்
சாபவிமோசனம் பெற்றேன். விடை பெறுகிறேன் " என்று கூறி விமானமேறி விண்ணுலகம்
சென்றான்.
பின் தேவலமுனிவர் வாலகில்லிய முனிவரிடம் சென்று அரக்கனைக் கொன்ற செய்தியை
அறிவித்து அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வடக்கிருக்கும் மேருமலையை
நோக்கிச் சென்றார். பன்னாள் நடந்து சென்று மேருமலையை அடைந்தார்.
அங்கிருக்கும் தேவதச்சன் என்னும் மயனைச் சந்தித்தார். அவரிடம் தாம் துணி
நெய்வதற்கான
உபகரணங்களைப் பெற்றுப் போக வந்ததாகக் கூறினார். தேவதச்சனும்
மகிழ்ச்சியோடு துணி நெய்வதற்கு வேண்டிய படமரங்கள், பலகைகள், தோற்கேடயங்கள்,
பண்ணையங்கள்,
தண்டங்கள், நாடாக்கள், திரிகைகள், திருவட்டம், விடுவாய் முதலிய கருவிகளை
அளித்து அவற்றின் பெருமையையும் கூறினார்.
படமரம் முதலிய கருவிகள் தேவைக் கேற்றவாறு குறுகவும் நீளவும்
செய்யுமென்றும், நாடா, நூலை விரும்பிய நிறத்தில் அளிக்கும் என்றும் கூறி,
எப்பகையையும் வெல்ல
வல்ல வாளையும் எட்டு பாணங்களையும் அளித்தார். இவற்றை எல்லாம் நன்றிப்
பெருக்கோடு பெற்றுக் கொண்ட தேவலர் அங்கிருந்து இடுக்கண் இன்றி நாடு
திரும்பினார்.
Subscribe to:
Posts (Atom)