அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/5/13

ஸ்ரீ வீரமல்லம்மாள் துணை

ஸ்ரீ வீரமல்லம்மாள் துணை
சக்தி அழைத்தோம் அம்மா வீரமல்லமா ...
சித்திரையில் நோன்பிருந்து
வளர்பிறை புதனில்
அழகிய திருவளர் திம்மராயம்பதியிலே ....
பவானி ஆற்றின் கரையிலே ...
ஒய்யாரமாய் உனக்கு பந்தலிட்டோம் கரும்பிலே .....
வெல்லத்தில் கோட்டை கட்டி !
வெற்றிலையில் தோரணம் அமைத்து !!
பலவித கரகம் ஜோடித்து .....
பேழையிலே உன்னை கொலுஅமர்தி ...
அலகு வீரர்கள் தெண்டகங்கள் சொல்ல ....
பெண்மக்கள் எல்லாம் உன்னை வேண்டி தொழ ......

வீரர்கள் உன்னை சக்தியாய் பேழையிலே ஏந்தி ...
குழந்தையாக நீ அடம்பிடிக்க !
உதிரம் சொட்ட கத்தி இட்டு
ஊரெல்லாம் உன்னை சுற்றி ...
கோவில் அடைந்து .... மகா பூசனைகள் செய்து
இருமனேர் குலம் தழைக்க...
எண்ணுமக்கள் எல்லாம் வளம் பெற .....
மகா ஜோதியை ராகு தீபமாய் எடுத்து
உனக்கு சீராக படைத்து உன்னை வேண்ட!!!
சகல குலங்களையும் வாழவைக்கும் சௌடேஸ்வரி நீ !
பெரியவீட்டுகாரர் பட்டம் பெற்ற ...
இருமனேர் குல மகள் ஸ்ரீ வீரமல்லம்மாள் ஆக அருள் புரிவாயே !!!
- ர.பார்த்திபன்
பொள்ளாச்சி

மங்களப் பாடல் - 7

        சின்ன சின்ன சொம்புலு
 சிவகஞ்சி தீர்த்தமுலு
 அப்புரஞ்சி ஜமுக்காள அம்மனுக்கு
 செல்லின கந்தமுலு
 செமந்திய புஸ்மமுலு
 தல்லி சாமுண்டியே
 நீ கார்த்தியுலு
 சதிபதி கூடவே யித்து
 நீ நோடு பேக்கம்மா
 சௌடேஸ்வரிக்கு
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

பாடல் - 12

        சௌடேஸ்வரியை நாம் தொழுதால்
 சுகம் எல்லாமே தேடி வரும்
 அந்த நாயகியை நினைத்திருந்தால்
 நலம் யாவும் நாடி வரும் (சௌ)
 தேவாங்கர் குலம் விளங்க
 தேவியவள் அருள் தருவாள்
 தேடி தினம் துணை கொள்வோம்
 தேவியவள் திருப்பாதம் (சௌ)
 ஆலயம் பல இருந்தும் கோவில் செல்ல 
 மனம் இல்லையோ
 படைத்தவள் நினைவில்லையோ (சௌ)
 ஆதி சிவன் மேனியில் பாதிசக்தி
 ஆனவளாம் பாடி தினம் பணிந்திடுவோம்
 பாரினில் அவன் புகழை 
 சௌடேஸ்வரியை நாம்
 தொழுவோம்.

மங்களப் பாடல் - 11

        பேரூரு விளங்கவே
 பெரிய தேரோடவே
 தெப்பத்தேரோடவே
 திருநாட்டியம் ஆடவே
 ஜனங்கள் கூடவே
 திருவிழா கொண்டாடவே
 அருள்மிகுபட்டீஸ்வரருக்கு
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 10

        மங்கள மங்கள ஸ்ரீ சௌடேஸ்வரியெ
 சாந்த ரூபி சூடாம்பிகெயெ
 ஆதிவீர சாமுண்டீஸ்வரியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 9

        கைலாச வாசவியெ
 கையல்லி திரி சூல தவளியெ
 கேளிதவர கொடுவ அம்மனியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 8

        தேவாங்க குல தெய்வதாயியெ
 தேவல முனின காப்பாடிதவளியெ
 தேவாங்க குலன காப்பாடு பவளியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 6

        சரஸ்வதிக்கும் பார்வதிக்கும்
 சம பூமி லட்சுமிக்கும் அனுதினமும்
 துதி செய்ய அருள் ஜோதிக்கு
 மகாலட்சுமி வாரார்னு
 மங்களம் பாடவே சௌடேஸ்வரிக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 5

        அஞ்சு சீர் அருள் பெட்டி
 அரிய செம்பலு பெட்டி
 ஆளாத்தி கேசெம்பு சேத்தப் பெட்டி
 இந்திரண்டு செல்வேடு
 அந்திரெண்டு பொய்வேடு
 பந்த கஸ்தூரி பல பொட்டு பெட்டி
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 4

        அச்சுநா நத்தனுக்கு
 அமுத பார்வதி கௌரி
 கச்சத்துடன் நகையணிந்து
 கல்யாணக் கோலம் கொண்டு
 ரங்கனி துடாங்கனி ரதிசுவனக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 3

        அந்தி மல்லிகை மலர்
 அருளி செந்தா மலர்
 கொத்து மாமரிக் கொளுந்து
 குமு குமுகுமுங்கவே
 அந்த மலர் வாசங்கள்
 எங்கெங்கு மணக்குமோ
 தந்தையுடன் நடராஜன் தமயந்திக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 2

        அசுரன நரவெத்தி
 அலெயனு கூண்ட்டனு மாடி
 நிரவு மந்தாரா கிரியெல்லி
 நீண்ட்டு மக்கான ஊடி
 உலவு தேவாங்கனியே
 ஓப்பு சாமுண்டேஸ்வரி
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 1

        பாலிலே அபிஷேகம்
 பழத்திலே அபிஷேகம்
 தேனிலே அபிஷேகம்  தேவர்களுக்கு
 எள்ளிலே அபிஷேகம்
 எண்ணாயிரம்  காணிக்கை சௌடேஸ்வரிக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம் 

மாலிலார் குல தெய்வ கோவில் ( மூங்கிலணை காமாட்சி அம்மன்) {1}

பதஞ்சலி மகரிஷி கோத்ரம்

அத்திரி மகரிஷியின் பத்தினியாகிய அனசூயையிடம் அவதாரம் செய்தவர். இவர் ஆதிசேஷனின் அம்சம்.

தாருகவனத்தில் சிவபிரானின் ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்தார் மகாவிஷ்ணு. அதனால் அவர் திருமேனி புளகாங்கிதம் அடைந்தது. புளகாங்கிதத்திற்கு காரணம் கேட்டார் ஆதிசேஷன் . ஆனந்த தாண்டவ தரிசனம் காரணம் எனப்புகன்றார் மகாவிஷ்ணு. தானும்நடன தரிசனம் காண எண்ணித் தவம் புரிந்தார் ஆதிசேஷன். அவரைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான்.

பிரம்மதேவனின் வடிவம் கொண்டு ஆதிசேஷன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக்கேட்டார். அவரைப் பிரம்மதேவன் என எண்ணிய ஆதிசேஷன் உம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை எனக்கூறித் தவத்தில் கருத்தைச் செலுத்தினர். மகிழ்வடைந்த சிவபிரான் பின் தரிசனம் தந்தார். ஆனந்த தாண்டவம் தரிசனம் செய்யும் பாக்கியத்தை வரமாகப் பெற்றார்.

" அனசூயையிடம் குழந்தையையாய் வளர்ந்து சிதம்பரம் அடைவாயாக அங்கே என் நடன தரிசனம் காணத் தவம் செய்து கொண்டு இருக்கும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து இருந்தால் அங்கே யாம் எம் நடன தரிசனம் தருகின்றோம் " என்று இறைவன் அருள் செய்து மறைந்தனன்.

இவ்வரம் காரணமாக ஆதிசேஷன் ஒருநாள் சிவத்யானத்துடன் கையேந்தி இருந்த அனசூயையின் கைகளில் விழ, அம்மாதரசி பாம்பென்று கையை உதறிவிட அவள் பாதத்தில் விழுந்தான். பாதத்தில் விழுந்ததாலும் அஞ்சலித்த கரங்களில் விழுந்ததாலும் பதஞ்சலி எனக்காரணப்பெயர் பெற்றார்.

பின் சிதம்பரம் அடைந்தார் பதஞ்சலி. வியாக்கிர பாதருடன் சேர்ந்தார். திருநடனம் கண்டு மகிழ்ந்தார். இன்றும் தில்லைத்திருத்தலத்தினுள் காணப்படுகின்றார்.

இவர் பாணினி சூத்திரத்திற்குப் பாஷ்யம் - விளக்கவுரை எழுதினார். பதஞ்சலி யோகசூத்ரம் என்னும் நூல் இவர் பெயரால் விளங்குகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சித்துகொள்னேரு ;- சித்த புருஷர் ஒருவரைத் தம் வீட்டுத்தெய்வமாக வணங்குபவர்.

மாலிலாரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கும், அம்மன் திரு விழாவிற்கும் பூ மாலை தரும் திருத் தொண்டு செய்பவர்.

அங்கப்பதவரு :- அங்கப்பன் என்ற ஒருவரின் வம்சா வழியினர்.

கர்ணதவரு :- காது பற்றி வந்த ஒரு பெயர்.

கட்கதவரு :- கட்கம்=கத்தி. வாள், கத்தி வைத்து இருப்பவர். கத்தியை வழிபடுபவர்.

கடகதவரு :- ஒரிஸாவில் உள்ள கடக் என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

குசுமசித்லூவாரு :- மலர்கள் மொட்டுக்களாய் இருக்கும் போதே; அம்மொட்டுக்களைச் சேகரித்து அவற்றை மாலையாய்க் கட்டித் தெய்வத்திற்குச் சூட்டி மகிழ்பவர்.

குடாரம்தவரு :- துணிக் கூடாரம் பற்றி வந்த ஒரு பெயர்.

கோடூரிதவரு :- ஆந்திராவில் உள்ள கோடூர் என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கோரண்டதவரு :- நாகார்ஜூன மலையை அடுத்துள்ள கோரண்டமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கோவூருதவரு :- நெல்லூரை அடுத்து பெண்ணை நதிக்கு வடக்கில் உள்ளது கோவூர். இக்கோவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

சங்குதவரு :- சங்க முழக்கத்துடன் வழிபாடு நிகழ்த்துபவர்.

சந்தாவாரு :- சந்திரனை வீட்டு தெய்வமாக வணங்குபவர். ஆந்திராவில் இவர்களை சந்திராலுவாள்ளு என்று அழைக்கின்றனர்.

சிருங்காரதவரு :- அழகாகத் தோற்றமளிப்பவர்.

சிந்தனதவரு :- சிந்தனையில் சிறந்தவர்.

தாள்ளதவரு :- கயிறு திரித்தவர். கயிறு விற்றவர்.

தேவனதவரு :- தேவாலய காரியங்கள் நடத்துவதிலும் ஆலய வழிபாட்டிலும் சிறந்தவர்.

நாரிகேளம்தவரு :- தேங்காய் பற்றி வந்தவொரு பெயர்

பதிபக்தினவரு :- பதிபக்தி மிக்க பெண்களை உடைய வம்சமிது.

பாண்யாதவரு :- ஆந்திராவில் உள்ள பாணியம் என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பிசனதவரு :- சிக்கனம் மிக்கவர்.

பிச்சுதவரு :- பக்தி வெறிகொண்டவர்.

பிட்சாவதினதவரு :- பிட்சையிட்டு வாழ்ந்தவர்.

புச்சகிஞ்சலதவரு :- புச்சக்காய் என்னும் வரிக்குருமத்தங்காய் கொண்டு பலவகை வைத்தியம் செய்தவர்.

ராகதவரு :- ராகதீபம் எனப்படும் ஜோதி எடுப்பவர்.

மாசிப்பத்ரியவரு :- மாசிப்பத்ரி இலை பற்றி வந்த ஒரு பெயர்.

ஜாஜினவரு ;- வழிபாட்டிற்கு ஜாதிமல்லி மலரைப் பயன்படுத்துபவர்.

இருமனெவாரு :- பெரிய வீட்டுக்காரர்.

காடனதவரு :- தெலுங்கில் ஏர் உழுதலுக்குக் காடன என்பது பெயர். எனவே இவர்கள் உழுது பயிறிட்டு வாழ்ந்தவர்.

ஹொன்னுபுட்டியதவரு :- பெட்டி பெட்டியாகத் தங்கத்தை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.

காரணதவரு :- எதற்கும் காரணம் கேட்பவர்.

தாராபுரதவரு :- தாராபுரம் தலத்தைச் சார்ந்தவர்.

மல்லதவரு :- மற்போரில் வல்ல மல்லர்கள்.

சின்னதவரு :- கன்னட மொழியில் சின்னம் என்றால் தங்கம். தங்கமான குணம் கொண்டவர். தங்கம் மிகுதியாகக் கொண்டு வாழ்ந்தவர்.

அன்காபத்திதவரு, அன்காபத்துனிதவரு, ஆகாசவத்துனதவரு, ஆட்ரதவரு, கோவரதவரு, சிச்சுதவரு, தோகுபர்த்திதவரு, தோனபாத்திதவரு, பதிம்தவரு, புசனதவரு, முலிகிதவரு, மோனிபத்ரிதவரு, யெண்டிதவரு, மல்கததவரு.