அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/7/13

பதஞ்சலி மகரிஷி


சுனாபன் வரலாறு

நான் கின்னரரின் அரசன். ஒரு நாள் நான் என் மனைவியோடு கயிலைக்குச் சென்றேன். அம்மை அப்பர் தங்கியிருந்த புனிதமான அழகிய சோலைக்குள் மயக்க உணர்வோடு போனேன். அதன் புனிதத்தைக் கெடுத்தேன். இதை உணர்ந்த சிவபெருமான் சினங்கொண்டு என்னை நிலவுலகில் மனிதனாகப் பிறந்து பிறவிக் கடலில் வீழ்ந்து துன்புறுமாறு சபித்தார். சாபம் பெற்ற நான் சாப நீக்கம் வேண்டிப் பெருமானைப் பணிந்தேன். சிவபெருமானும் கருணை கூர்ந்து 'என்னுடைய மானதபுத்திரன் தேவல முனிவன் உலகநலங்கருதி அவதாரம் செய்கிறான். அவன் ஆமோத நகருக்கு வருவான். அவனை வரவேற்று அவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடு. அப்போது உன் சாபமும் நீங்கும்' என்று அருள் செய்தார். சாபத்தின்படி நான் இந்நிலவுலகில் பிறந்து இந்நாட்டைப் புரக்கும் மன்னனாக இதுவரை வாழ்ந்து வந்தேன். தங்கள் வரவால் என் சாபம் நீங்கியது. இறைவன் ஆணைப்படி ஆட்சியைத் தங்களிடம் ஒப்படைத்து விட்டேன். இனி நான் என்னுடய நாட்டுக்குப் போகிறேன் என்று சொல்லி முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு மானிட உடம்பை அங்கேயே கிடத்திவிட்டு, தேவவடிவம் பெற்று அப்போது அங்கு வந்த விமானத்தின் மீது தன் மனைவியோடு வித்தியாதர உலகம் சேர்ந்தான். சுனாப மன்னனும் அவன் மனிவியும் விட்டுச் சென்ற பூத உடம்புகளுக்கு தேவலமுனிவர் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தார். பின் ஆமோத நகரை செங்கோன் முறைப்படி நீதி வழுவாது நல்லாட்சி செய்து வந்தார்.

தேவலர் மணிமுடி சூடியது

ஆமோத நகரம் சகர நாட்டின் தலைநகரம்.அதைச்சுனாபன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவன், தேவல முனிவர் தன்னாட்டை நோக்கி வருவதை இறைவன் உணர்த்த உணர்ந்தான். முனிவரை வரவேற்க மந்திரி பிரதானிகளுடன் நர்ப்புறம் போய் நின்றான். முனிவரும் வந்தார். வந்தவரை மன்னன் வரவேற்று 'இந்த நாட்டைத் தாங்களே ஏற்று ஆட்சி செய்ய வேண்டும். இறைவன் திருக்குறிப்பும் அதுவே' என்று வணங்கினான். முனிவரும் இறைவன் திருக்குறிப்பு என்பதை ஓர்ந்து இசைந்தார். ஊர் மக்களும் பிறரும் நல்வரவு கூர மேளவாத்தியம் முழங்க ஆடல் பாடல்கள் நிகழ முனிவரை யானைமீது அமர்த்தி ஆமோத நகரருக்குள் ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. மன்னன் முனிவரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று அரியாசனத்தமர்த்தி உபசரித்தான். இரண்டொரு நாட்கள் விருந்து உபசாரங்கள் நடந்தன. பின் மன்னன் தேவலரை மணிமுடி சூடி நாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். முனிவரும் இசைந்தார். சுனாபமன்னன் ஒரு நல்ல நாளில் நாட்டை அலங்கரிக்கச் செய்து வாத்தியங்களும் வேத கீதங்களும் முழங்க தேவல முனிவரை அரசுக்கட்டிலில் அமர்த்தி முடி சூட்டி அரசுரிமையை அளித்தான். பின் நாட்டை விட்டுச் செல்ல தேவலரிடம் விடை கேட்டான். அதைக் கேட்ட தேவலர் ' தாங்கள் ஏன் செல்ல வேண்டும்? என்னோடேயே இருக்கலாமே ' என்றார். அதற்குச் சுனாபன் ' நான் பிரிந்து செல்லக் காரணம் உளது ' என்று கூறித் தன் வரலாற்றைக் கூறினான்.

25.காத்ய காத்யாயன காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம்

குறிப்பு : இம்மூன்று பெயர்களும் ஒரே மகரிஷியைக் குறிக்கலாம்.
1). காத்ய மகரிஷி கோத்ரத்தில் ஸ்தம்பதனவரு என ஒரேயொரு வங்குசம் காணப்படுகின்றது. இவ்வங்குசம் மீண்டும் காத்யாயன மகரிஷி கோத்ரத்திலும் வருகின்றது.
2). காத்யாயன என்னும் பெயர் தவறுதலாக காத்ய என்று அச்சாகி இருக்கலாம்.
3). காத்யாயனரையே காத்யாயனதேவர் என்று மதித்து அழைத்து இருக்கலாம்.
4.) இம்மூன்றும் ஒரே கோத்ரம் எனக் கருதுவதட்கு வங்குசப் பெயர்கள் அனைத்தும் ஒன்றாக இருக்கின்றன.
மகரிஷி வரலாறு ;- காத்யாயன மகரிஷியின் பெயரால் ஒரு ச்ரெளத சூத்திரமும், உபஸ்மிருதியும் விளங்குகின்றன. இவர் மிகச் சிறந்த தவசி. தம் தவவன்மையால் பார்வதி தேவியைத் தம் மகளாகப் பெற்றார். காத்யாயனர் செய்த தவத்தால் அவர் மகளாகப் பிரந்தமையின் தேவி காத்யாயனி என்று திருநாமம் பெற்றாள்.
ஓம்: காத்யாயனய வித்மஹே
      கன்யாகுமாரி தீமஹி
      தன்னோ துர்கிப்ரசோதயாத்
- என்னும் துர்க்கா காயத்ரி மந்திரம் இதற்குச் சான்றாக அமைகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காட்னம் வாரு :- இப்பெயர் காஷ்டம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவர் மசானத்தில் பெரிய நாயகி அம்மையை வழிபாடு செய்பவர்.
கோணங்கிவாரு :- கோணங்கித்தனம் மிக்கவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
நம்பியவரு :- புரோஷத்தம நம்பியான திருமாலை அவன்றன் திவ்ய தேசங்களில் வழிபாடு செய்பவர்.
பாணதவரு :- வன்னி மரத்தின் மீது பாணம் எய்பவர்கள். இச்செயல் விஜயதசமி அன்று அம்மன் ஆலயங்களில் இன்றும் நடைபெறுகின்றது.
மாசரளதவரு :- ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் மாசரளா என்னும் ஊர் உள்ளது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மூங்கினதவரு :- மூங்கில் குத்துக்களடியில் வழிபாடு நிகழ்த்துபவர். சிவபிரான் மூங்கிலில் பிறந்தார். முருகன் நாணலில் பிறந்தார். என வரலாறுகள் உண்டு. எனவே இவர்கள் மூங்கிலில் சிவபிரானும் முருகனும் இருப்பதாகப் பாவித்து வழிபாடு செய்கின்றனர் என்பது தாத்பர்யம்.
முகதலதவரு :- காரியத்தைப் பொறுப்பாக ஒரே முகமாகச் செய்யக் கூடியவர். விடா முயற்சி உடையவர்.
அரவிந்ததவரு :- அரவிந்தம் - தாமரை. தாமரை மலர்கள் கொண்டு வழிபாடு செய்பவர்.
வ்யசனமவாரு :- ஓயாது கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்.
ஸ்தம்பதவரு :- கொடி மரங்கள் செய்து ஆலயங்களுக்குத் தானம் வழங்கியவர். வெற்றிக் கம்பம் நாட்டியவர். தம் அறிவாற்றலால் அனைவரையும் வாதில் வென்று ஜெயஸ்தம்பம் நாட்டியவர். ஆலயங்களில் கம்பம் நாடும உரிமை, பெயர்க்கும் உரிமை பெற்றவர்.
ஸ்யாமளதவரு :- ஸ்யாமளா தேவியை வழிபட்டவர்.
ஹூகரியதவரு :- கர்நாடகாவில் உள்ள ஹூகரி என்னும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தொகரனவரு :- தொகர என்பது பருப்பைக் குறிக்கும் - துவரம் பருப்பு கன்னடத்தில் தொகரெபேளே என்று அழைக்கப்படுகின்றது. பருப்பு பற்றி வந்த ஒரு பெயர்.
ஜாஜியதவரு ; ஜாஜிபுஷ்பம் - ஜாதி மல்லிமலர். இதனால் வழிபாடு செய்பவர்.
கோமளதவரு :- சிருங்காரம் உடையவர். அழகு மிக்கவர். அழகை ரசிக்கும் இயல்புடையவர்.
கோடங்கியதவரு :- இவ்வங்குசமும் முன்கண்ட கோணங்கிவாரு என்பதும் ஒன்றே.
மசானதவரு :- மசானத்தில் மசானருத்திர வழிபாடும் பெரியநாயகி - தொட்டு தேவரு வழிபாடும் செய்பவர்.

24 . காங்கேய மகரிஷி கோத்ரம்

முருகக் கடவுள் கங்கையில் வளர்ந்ததால் காங்கேயன் என்று பெயர் பெற்றார்.கங்கையின் மகன் ஆதலின் பீஷ்மரும் காங்கேயன் என்று பெயர் பெற்றார். இப்பெயர் பெற்ற இம்மஹரிஷியின் பிற வரலாறுகள் புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கம்பலதவரு :- குலக் கூடங்களுக்குக் கம்பளம் விரிக்கும் திருத்தொண்டு புரிந்தவர்.கம்பள தானம் செய்தவர்.
பசுபுலதவரு:
முத்தினதவரு:

23 .கவுச மகரிஷி கோத்ரம்

தன் குருவிற்குப் பதினான்கு கோடி பொன்குருதட்சிணை கொடுக்க எண்ணிஅதனை இரகுவிடம் பெற்றுத் தந்தவர் இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மலிபெத்தவாரு :- குலக் கூட்டத்திற்குத் தலைவராக இருப்பவர். இன்று பெத்தர் என பங்களங்களில் இருப்பது போன்ற பதவி இது.