அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/26/13

128 .பிரதாப மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பன்னிபத்ரியதவரு :- வன்னிமர இலைகளைக் கொண்டு வழிபாடு செய்பவர். 

குசுமபூவுலதவரு :- மலர் மொட்டுக்களைக் கொண்டு மாலைகட்டி; அம்மாலைகளைத் தெய்வத்திற்குச் சாத்தி வழிபடுபவர். 

தாரணதவரு :- லிங்கதாரணம் செய்து கொண்டவர்கள். 

நாரிகேளதவரு :- ஆலயங்களுக்குத் தேங்காய்களைத் தானமாக வழங்குவதைப் பழக்கமாகக் கொண்டவர். 

மான்யதவரு :- தம் கலைத்திறமைகளுக்காகவும் பிறவற்றிற்காகவும் அரசரிடம் மான்யம் பெற்றவர்கள். 

மதுரதவரு :- மதுராபுரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 

மீனாட்சியம்மனதவரு :- மதுரை மீனாட்சியம்மனை வழிபாடு செய்பவர். 

வீரண்ணதவரு :- வீரபத்திர சுவாமியை வழிபட்டு வருபவர்கள். மேலும் இவர்கள் ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருவிழாவில் வீரமுஷ்டிகன் வேடம் அணிவதை வழக்கமாகக் கொண்டவர்கள். 

சிந்தாலதவரு :-