அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.
Showing posts with label 48 .சதுமுக மகரிஷி கோத்ரம். Show all posts
Showing posts with label 48 .சதுமுக மகரிஷி கோத்ரம். Show all posts

5/23/13

48 .சதுமுக மகரிஷி கோத்ரம்

இவர் சதுமுக மகரிஷி என்று அழைக்கப்படுகின்றார். பராசர மகரிஷியின் குமாரர்கள் அறுவருள் இவர் ஒருவர். இவருடைய மற்ற சகோதரர்கள் தத்தன், அநந்தன், நந்தி, பருதிபாணி, மாலி என்போராவார்.

சகோதரர்கள் அறுவரும் சிருபிராயத்தில் முதலை உருக்கொண்டு சரவணப் பொய்கையுள் புகுந்து விளையாடினர். பொய்கையில் இருந்த மீன்கள் சில இறந்து மிதந்தன. பொய்கைக்கு நீராட வந்தார் பராசரர். தம்மக்களின் விளையாட்டைக் கண்டு கோபம் கொண்டார்.

தகாதவை செய்து மீன்களைக் கொல்வித்தமையால் நீர் சரவணப் பொய்கையிலேயே மீன்களாக மாறுவீர் எனச் சபித்தார். தந்தையால் சாபம் பெற்ற அறுவரும் சாபவிமோசனம் வேண்ட, சரவணப் பொய்கையில் குமரக்கடவுள் அவதாரம் செய்வார். அவர் பொருட்டு உலக நாயகியாகிய உமையம்மை தரும் பால் இப்பொய்கையில் சிந்தும். அப்பாலை உண்ண உங்கட்குச் சாபம் விமோசனம் ஆகும் என அருள் செய்தார் பராசரர்.

குமரக் கடவுள் ஆறுதிருமேனிகளுடன் சரவணப் பொய்கையில் திருவிளையாடல் புரிந்தருளினான். மகனை அள்ளி அணைக்க ஆர்வம் கொண்ட பார்வதிதேவியார் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி, ஆறுதிருமேனிகளையும் அள்ளி அணைத்து ஒரு திருமேனி ஆக்கினாள். எனவே அன்று முதல் முருகனும் கந்தன் என்னும் திருநாமம் பெற்றனன். அன்னை அருளுடன் அவனுக்கு ஊட்டிய ஞானப்பால் பொய்கையில் சேர அதனை மீன் வடிவம் கொண்ட அறுவரும் உண்டு சாபம் நீங்கினர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கத்திதவரு :- கத்தி வழிபாடு செய்பவர். ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னைக்கு வீரகுமாரர்கள் கத்தி போட்டுக் கொண்டு அலகு சேவை செய்வது மரபு. இக்கத்திகள் புனிதம் வாய்ந்தவை ஆதலின், இன்றும் பலர் பூசனை அறையில் கத்திகளை வைத்து வழிபடுகின்றனர்.
குலபக்திதவரு :- தம்குல பக்தி மிக்கவர்.
புலிபாகலதவரு :- துர்க்கையின் வாகனமான புலி வழிபாடு செய்பவர்.
பூஷணந்தவரு :- ஆபரணம் அணிவதில் விருப்பம் மிக்கவர்.
போகதவரு :- சுகபோகமாக வாழ்பவர்.
முலிகினதவரு :- கோபம் மிக்கவர்.
பூசம்தவரு :- பூச நட்சத்திரத்தில் தவறாது விழா நடத்தி வழிபாடு செய்பவர்.
அட்யம்தவரு, அவன்டதவரு, ஆட்ரதவரு, ஆண்ட்ரதவரு, தும்மினிதவரு, பிசனதவரு, பிச்சினதவரு, புச்சகிஞ்சிதவரு, புச்சலதவரு, ரெட்ளதவரு.