அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/23/13

87 .சௌநக மகரிஷி கோத்ரம்

நைமிஷ ஆரண்யத்தில் பன்னிரண்டு ஆண்டுக் காலம் மாபெரும் யாகம் ஒன்றினை நடத்திய மாமுனிவர் இவர். இவருக்குக் குலபதி மகரிஷி என்றும் பெயர். இவர் நைமிஷாரண்யத்தில் நடத்திய யாகத்திற்கு அநேக மகரிஷிகள் வந்தனர். யஜமானர்களே ரித்விக்குகளாக இருந்து நடத்திய சிறப்பான யாகம் அந்த யாகம் என்று வியாசபாரதம் கூறுகின்றது. 
இங்குதான் சௌநகர் முதலான மகரிஷிகள் அனைவருக்கும் சூதபௌராணிகர் மகாபாரதம் கூறினார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொண்டபள்ளிதவரு :- கொண்டபள்ளிதவரு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரை தீரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சபலதவரு :- மனக்கிலேசம் கொண்டவர். 
சேகத்திதவரு :- சே=கை; கையும் கத்தியுமாக இருப்பவர். ஸ்ரீ சௌடேஸ்வரியின் 32 விருதுகளில் கத்தியும் ஒன்று. அம்மனுக்குக் கத்திவிருது பிடிப்பவர். கத்தி வழிபாடு செய்பவர். 
தட்டிதவரு :- தட்டி நெய்பவர் 
சகடமூலதவரு :- சகடம்=வண்டி. தானியங்களையும் கிழங்கு வகைகளையும் வண்டி வண்டியாக உடையவர். அ - இவற்றை வண்டி கட்டிச் சென்று வியாபாரம் செய்தவர். 
பகடாலதவரு :- பகடாலம்=பவளம்; பவளம் அணிபவர். பவள வணிகம் செய்தவர். 
பெண்டம்தவரு :- இப்பெயர் பிண்டம்தவரு என்றும் அழைக்கப்படுகின்றது. அமாவாசை நாட்களில் பிதுர்களுக்குத் தவறாது பிண்டம் தருபவர்கள். 
பெத்தகுண்டதவரு :- ஆந்திராவில் உள்ள பெத்தகுண்ட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
கோகுலதவரு :- கோகுலக் கண்ணனை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர். 
பிருதிவிதவரு :- பூமியை - மண்ணை வழிபடுபவர். 
முலகதவரு :- முலைப்பாலிகை இட்டு வணங்குபவர். 
மோபூரிதவரு :- மோபூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
மந்த்ர சித்திதவரு :- மந்திரங்களில் சித்திபெற்றவர். 
லக்கினதவரு :- சிறந்த ஜோதிடராக இருந்து லக்கினம் குறித்து தருபவர்கள். 

குறிப்பு :- எத்தனையோ ஜோதிடர்கள் இருந்தும் இவர்களுக்கு மட்டும் லக்கினதவரு என்று பெயர் வரக் காரணங்கள். 
1. லக்கினத்தைப் பிழை இல்லாமல் குறிப்பவர். 
2. லக்கினம் குறிப்பதைத் தருமமாகக் கொண்டவர். இதற்குத் தட்சிணை பெறுவது இல்லை. 
இன்றும் தேவாங்கரில் சிலர் சிலவகை வைத்தியங்களை, குடும்ப பாரம்பரியமாக இலவச வைத்தியமாகச் செய்வதை காண்கின்றோம். 

கனகதவரு :- தங்கத்தை விரும்பி அணிபவர். தங்க வியாபாரம் செய்தவர். தங்கமான மனிதர். 
தம்மையதவரு :- தம்மைய்யா என்பவர் வம்சாவழியினர். 
துப்பரதவரு :- என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
நீடிநோருதவரு, மஞ்சிதவரு.