அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/1/13

மகா லிங்கம் கோவில், சதுரகிரி


சுந்தர மகா லிங்கம்


சந்தன மாகா லிங்கம்


மாகா லிங்கம்


சதுரகிரி பயணம்



63 .சாங்கிய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஷ்டகுலதவரு :- எட்டாவது குலத்தைச் சார்ந்தவர்.
கொண்டவன்கதவரு :- இருமலைகளுக்கிடையே உள்ள வளைவுகள் சந்துகள் இவற்றிற்குக் கொண்டவன்க என்று பெயர். இவ்விடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தாளபத்ரதவரு :- தாளபத்ரம் = பனை ஓலை; இது பற்றி வந்தவொரு பெயர்.
நக்கலதவரு :- தந்திரம் மிக்கவர்.
பாபடதவரு :- வகிடுவைத்தவர். இப்பெயர்தான் இன்று பாப்டெ என்று அழைக்கப்படுகின்றது.

திருவண்ணாமலை சித்தர் தரிசனம்

அம்மன் படங்கள்,


வரமுனி அவதாரம்

உலகில் அறநெறி பிறழ்ந்தது. அன்பு பக்தி நல்லொழுக்கம் தெய்வவழிபாடு குன்றின. அதனால் அஞ்ஞான இருள் சூழ்ந்து வாழ்க்கை நிலைகுலைந்தது. துன்பமும் துயரமும் சூழ்ந்தன. பக்தியும் இறைவழிபாடும் குன்றினால் துன்பமும் துயரமும் சூழும் என்பது நியதி. உலகில் துன்பமும் துயரமும் இல்லா இன்ப வாழ்வு வாழ வேண்டுமானால் வேதாகம நெறிப்படி மக்கள் வாழ வேண்டும். வேதாகம நெறிகளே மயங்கின் மக்கள் வாழ்க்கை என்னாகும்? எனவே வேதங்கள் காலந்தோறும் மாறுபாடும் வேறுபாடும் உற்று அவற்றைப் பின்பற்றி நடப்போரிடம் குழப்பமும் ஒழுக்கக் குறைபாடுகளும் உண்டாயின. நெறிகளும் பலவாக விரிந்தன. யாவரும் தத்தம் கருத்துப்படி ஒழுகினர். அதனால் தீமைகள் மிகுந்தன. அன்பு பக்தி குல ஆசாரம் நன்னடத்தை குணம் தவம் தெய்வ வழிபாடு நல்லறிவு இன்றி, அறியாமை இருளில் மக்கள் மயங்கிக் கிடந்தனர். இத்துன்ப நிலையிலிருந்து உலகை மீட்க சிறந்த அருளாளர் தோன்ற வேண்டியிருந்தது. அதனால் தேவர்கள் அம்மை அப்பரை நாடிக் கயிலையை அடைந்தனர். அம்மை அப்பரை அணுகி அவர்கள் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி வேதங்களைத் திருத்தியும் ஆகமங்களை படைத்தும் உணர்த்தியும் உலகை நெறிப்படுத்த நன்மகன் ஒருவனை உலகுக்கு அளிக்குமாறு வேண்டினர். பெருமானும் கருணையோடு அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். எமது மானதபுத்திரனை உலகுக்கு அனுப்பி உலகில் நன்னெறியும் நல்லொழுக்கமும் நிலைபெறச் செய்வோம் ' என்று கூறி அனுப்பினார். பின் புட்பதந்தனை விளித்து நீ உன் பதினைந்தாம் தலைமுறையில் தோன்றிய கங்காதரனுக்கும் சுகுணவாணிக்கும் மகனாய்ப் பிறந்து வேதங்களைத் திருத்தி உலகில் நீதியும் ஒழுக்கமும் நிலைபெறுமாறு செய்து வருவாயாக ' என்று ஆணையிட்டார். இறைவன் ஆணைப்படி புட்பதந்தன் கங்காதரனுக்கு மகனாய்ப் பிறந்தார். வரமுனி என்று பெயரிடப் பெற்றார். எல்லா கலைகளையும் கற்று உணர்ந்தார். கல்வி கேள்விகளில் வல்லவராகவும் அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மெய்ஞ்ஞானியாகவும் திகழ்ந்தார். உற்ற பருவத்தில், சுசீலனின் மகளாய் அமிர்தசீலி என்னும் பெயரில் வளர்ந்த தேவதத்தையை மணந்தார். மகனின் தகுதியை அறிந்து அவனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டுக் கங்காதரன் தவம் மேற்கொண்டு மனைவியுடன் காட்டுக்கு ஏகினான். ஆட்சிபீடத்தில் அமர்ந்த வரமுனி நீதிநெறி வழுவாமல் ஆட்சியை நடத்தினான். மேலும் வேதங்களைத் திருத்தி ஒழுங்கு படுத்தி எல்லோரும் அதன்படி நடக்கும்படியாக உணர்த்தினான். மக்களும் நீதி குலவொழுக்கம் வேள்வி விரதம் வாய்மை நன்னடத்தை முதலிய நல்லொழுக்கங்களில் சிறந்து வாழ்ந்தனர். மேலும் இறைவனின் திருவருட்டுணை கொண்டு ஆகமங்கள் பலவற்றை இயற்றி உலகுக்கு அளித்தான். எனவே உலகியல் நெறிவிளங்க வேதங்களைத்திருத்திய வரமுனி, ஆகமத் துறைபற்றி யாவரும் சிவஞானம் பெற்றுமுத்திப்பேறு அடையவேண்டும் என்னும் கருணையினால் பல ஆகமங்களை இயற்றி உலகுக்கு உபகரித்தார். வேதாகம நெறிகள் இரண்டும் உலகில் பரவியதால் உலகியல் ஒழுக்கமும் சிவநெறியும் தெய்வபக்தியும் வழிபாடும் நிலைபெற்றன. எங்கும் அமைதியும் சாந்தியும் நிலவியது. மக்கள் மன அமைதியுற்று இன்பமாக வாழ்ந்தனர். வரமுனிக்கு அமிர்தசீலிபால் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு வீரருத்திரன் என்று பெயரிட்டு கல்வி ஒழுக்கங்களில் சிறந்தவனாக வளர்த்தார். திருமணப்பருவம் வந்தடைந்ததும் அவந்தி மன்னன் கோமளையை மணஞ்செய்வித்து ஆட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டுத் தன் மனைவியுடன் கயிலையை அடைந்து சிவபெருமான் திருவடி நிழலில் தங்கினார். வரமுனி இயற்றிய நூல்கள் 1. சாத்திர சூத்திர நிகண்டு 2. கணித சாஸ்திரம் 3. சந்திர சித்தாந்தம் 4. பிண்டோற்பத்தி சாஸ்திரம் 5. சந்தி சூத்திரம் 6. நர பிங்கல சாஸ்திரம் 7. சூரிய சித்தாந்தம் 8. சுத்த மீமாம்சம் 9. கௌமுதி வியாகரணம் 10. திரிலிங்க நிகண்டு 11. வஸ்து ஆயுள் நிர்ணயம் 12. பாக சாஸ்திரம் 13. யோனி நிகண்டு 14. ஞாய போதினி 15. சாந்தோக் ஞானம் 16. இலட்சண சாஸ்திரம் 17. ஸ்வர சூத்திரம் 18. பஞ்ச சூத்திர நிகண்டு 19. வேதாங்க மாலை 20. ஆயுள் வேதம்