அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/13/13

108 .தைவராத மகரிஷி கோத்ரம்

106ல் கண்ட தேவராத மகரிஷியும் இவரும் ஒருவர் தான் விளக்கம் 106ல் காண்க. 

அஷ்டசித்திகளில் ஜயை என்பாள் ஒருத்தி. ஜயை பார்வதி தேவியின் தோழி. ஜயை ஒருமுறை பார்வதி தேவியிடம் இல்லற தருமம் பற்றி அறிய ஆசைப்பட்டு, அதனைப்பற்றித் தேவியிடம் கேட்டாள். 

ஜயையின் எண்ணத்தை உணர்ந்த எம்பிராட்டி; ஜயையே! உனக்கு மனிதப் பிறப்புத் தருகின்றேன். அப்பிறப்பில் நீ இல்லற தருமத்தைப் பற்றி அனுபவபூர்வமாக உணரலாம் என்றனள். 

அதன் படி ஜயை மானிடப் பெண் ஆனாள். தேவராத முனிவர் கற்பிற் சிறந்த கன்னி ஒருத்தியைத் தேடிக் கொண்டு இருந்தார். தாம் தேடிய உத்தமப் பெண் இச் ஜயை என முனிவர் உணர்ந்தார். அவளைச் சோதிக்க எண்ணினார். தாம் ஓர் அரக்க வடிவம் கொண்டார். ஜயையைத் தூக்கிக் கொண்டு சென்றார். ஜயையைக் கலக்க முனிவர் முனைந்தார். 

ஜயையோ தர்மதேவதையைச் சரண் புகுந்தாள். இவ்வரக்கனால் கற்பழியாது இருக்க என்னைக் கல்லாக மாற்றுக என வேண்டினாள். தர்மதேவதையின் அருளால் அவள் கல்லாக மாறினாள். அவள் மன உறுதிக்கு மகிழ்ந்த முனிவர் தம் தவ மகிமையால் அவள் கல்லுருவை மாற்றி மனிதப் பெண் ஆக்கினார். தம் வடிவையும் மாற்றிக் கொண்டார். அவளைச் சோதித்த உண்மையை உணர்த்தினார். ஜயையை மணந்து கொண்டார். இங்கனம் ஜயை இல்லற தருமம் கற்புடைமையே என்று அனுபவபூர்வமாக உணர்ந்தாள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குசதவரு :- தர்ப்பையைப் பயன்படுத்தி யாகாதி காரியங்கள் செய்பவர். வழிபாட்டில் தர்ப்பையைப் பயன்படுத்துபவர். தர்ப்பையும் கையுமாக எப்போதும் இருப்பவர். 

சந்திரகிரிதவரு :- ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

சரந்திதவரு :- உபகுருக்கள். குருவினிடமோ குருபீடாதிபதிகளிடமோ தீட்சை பெற்றுக் கொண்டு அவர்களைப் போல தேச சஞ்சாரம் செய்யும் உரிமை பெற்றவர். தட்சிணைகள் பெற்றுக் கொள்ளும் அதிகாரமும் பெற்றவர். 

சல்லாதவரு :- நீர்மோர் தானம் செய்பவர். 

குன்சதவரு :-