அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/20/13

82 .சோமகுல மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அக்நிஸ்தம்பதவரு :- அக்நியைக் கட்டுபவர்கள். பஞ்சாக்னிகளுக்கு நடுவே தவம் செய்பவர்.
அநந்தபட்டணதவரு :- ஆந்திராவில் உள்ள அநந்தபட்டணம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அம்மணசெட்டிதவரு :- இப்பெயர் கொண்டோர் வம்சாவளியினர்.
அல்லம்தவரு :- அல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அவுலபல்லதவரு :- அவுலபல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கங்காதவரு :- கங்காதேவியைப் பூசிப்பவர்.
காமிசெட்டிதவரு :- காமிசெட்டி என்பவரின் வம்சாவளியினர்.
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கின்னிசெட்டிதவரு :- கின்னிசெட்டி என்போர் வம்சாவளியினர்.
குடரேதவரு :- ரிஷிகள் வசிக்கும் பர்னகசாலை. இச்சாலைகளில் வசித்த தவசிகள்.
குருபத்திதவரு :- குருபக்தி கொண்டவர்.
கொண்டவீடுதவரு :- கொண்ட- மலை. மலைகளில் வீடுகட்டி வசித்தவர்.
சக்ரராஜூதவரு :- ஸ்ரீ சக்கரம் அமைத்துப் பூசித்தவர். உடம்பில் சக்கரமுத்திரை தரித்தவர். இவர்களின் சமாதியிலும் சக்கரம் ஸ்தாபிக்கப்பெரும்.
சங்கனதவரு :- சங்கஞ் செடிக்கீழ் வீட்டுத் தெய்வத்தை வழிபாடு செய்பவர்கள்.
தடாகதவரு :- பல்வேறு வகைப்பட்ட அறங்களில் குடிதண்ணீர்க் குளம் வெட்டுதல் ஒரு அறம். இதனைச் செய்தவர்.
தின்னிசெட்டிதவரு :- தின்னிசெட்டி என்பவரின் வம்சாவளியினர்.
துஸ்ஸாதவரு :- துஸ்ஸா-கட்டுக்கொடி. தண்ணீரைக் கட்டியாக மாற்றும் ஒருவகைக் கொடி மூலிகை. வேலிகளில் படர்ந்து இருக்கும். சிறுகட்டுக்கொடி, பெருங்கட்டுக்கொடி என இதனுள் இருவகை உண்டு. இது உஷ்ணத்தை நீக்கும். இதைக் கொண்டு வைத்தியம் செய்தவர்.
நாடுகொண்டதவரு :- நாடுகொண்ட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பர்ணதவரு :- பரண்கட்டி ஜபதபங்கள் செய்தவர்.
பெகடதவரு :- ஆந்திராவில் உள்ள பெகட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
போகனதவரு :- வைபோகமாக வாழ்ந்தவர்.
மங்களகிரிதவரு :- ஆந்திராவில் உள்ள மங்களகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மசானதவரு :- மசான ருத்திரனை மயானத்தில் வழிபடுபவர். பெரிய நாயகியம்மனை வழிபடுபவர்.
முத்துதவரு :- முத்தணிந்தவர். முத்து வணிகம் செய்தவர்.
இந்தனதவரு :- இந்தனம் - சமித்து விறகு. இதனைத் தருமமாகக் கொடுப்பவர்.
ஏந்தேலாரு :- அந்தலம் என்னும் சிலம்பு போன்ற ஒரு வகைக் கழலைக் காலில் வீரத்தின் சின்னமாக அணிபவர். இது ஒற்றைக் காலில் அணியப்படும்.
ராமாயணதவரு :- ராமாயணப் பிரசங்கம் செய்பவர்.
வன்னிகுலதவரு :- அக்நிஹோத்ரம் செய்பவர்.
ஜலஸ்தம்பதவரு :- நீருள் மூழ்கித் தவம் செய்பவர். நீரைக் கட்டி அதன் மீது நடப்பவர்.
ஸ்தம்பதவரு :- வெற்றிக் கொடி நாட்டியவர். கொடிக்கம்பங்களை ஆலயங்களுக்குத் தானம் செய்தவர். கொடியேற்றத்திற்குக் கொடித் துணி தருபவர்.
ஸ்தலனதவரு :- ஸ்தலத்தைச் சேர்ந்தவர். பட்டகாரருக்கு ஸ்தலனதவரு என்று பெயர்.
அண்டிண்டிதவரு,
குண்டோடிதவரு,
 புக்கராஜீதவரு,
 குசயாவிதவரு,
 கொத்தியிண்டிதவரு,
ஜலுகுதவரு,
குடிரிதவரு,
 சாமந்திதவரு,
ஜீனிகிதவரு,
சூர்யகுலதவரு,
ஹொபயணதவரு.

சிவவாக்கியர்


குரு:-

காலம்:-

சீடர்கள்:-

சமாதி:கும்பகோணம்

சிவ சிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்பட்டார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது.