நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திடதமிழ் எழுதியைபயன்படுத்தவும்)
இந்த கோவில் சிருங்கதேவ மகரிஷி கோத்ரம். முச்சளதவரு வம்சம் தாயாதிகளுக்கு பாத்தியப்பட்டது.தெய்வங்கள்-அருள்மிகு மல்லிங்கேஸ்வரர்,மனோன்மணி அம்மையார்,ராஜகொண்டம்மாள்,செல்வகொண்டம்மாள். அனைவராலும் மலை மீது சென்று வணங்க முடியாததால் அங்கிருந்து மண் எடுத்து வந்து தேவாரம் எனும் ஊரில் கோவில் கட்டி உள்ளார்கள்
இந்த வம்சாவளிகள் பெரும்பாலும் தேனி மாவட்டத்தில் உள்ளனர்.மேலும் பொள்ளாச்சி தாலுகா குஞ்சிபாளையம் கிராமத்தில் உள்ளனர். புகைப்பட தொகுப்பு மலை உச்சியில் உள்ள வெள்ளை கட்டிடம் தான் கோவில்
மலைக்கோவில் B.நாகலாபுரம் பகுதியில் அமைந்துள்ளது.
கன்னிமார் ஊற்று
இந்த படங்கள் கீழே தேவாரம் பகுதியில் அமைந்துள்ள கோவில்
தாய் ஸ்தலம் தாராபுரம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் சங்கு அபிஷேகம். புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு
"சகர மொதனூரு
பெனுகொண்ட படவேடு
தாராபுரத்தில் தாய் ஸ்தலமாய்...."
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டாம் ஆண்டு விழாநடைபெற்றது. தமிழகத்தில் பருவமழை பெய்ய வேண்டும், வறட்சி நீங்கி விவசாயம் செழித்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக தாய் ஸ்தலப் பட்டக்காரர் கோவிந்தராஜ் தலைமையில் விக்னேஸ்வர பூஜை மற்றும் 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது . வீடியோ தொகுப்பு : பத்தேவு முழக்கத்துடன் அலகு வீரர்களின் அலகுசேவை video 1: ஆதி சவுண்டம்ம நீனு.....பத்தேவு
video 2:
video 3:
video 4:
video 5:
video 6:
நமது தேவாங்க குலத்தில் ஆண்கள் அலகுசேவை செய்து அழைத்து வந்த அன்னையை மிகவும் ஒய்யாரமாக கொலுவைத்து விட்டு நம் குல பெண்மக்கள் (எண்ணு மக்கள் ) எப்படி தங்கள் மகள் வீட்டிற்கு வந்தால் கொண்டாடுவார்களோ அதே உற்சாகத்தோடு தாய் ஸ்தல சவுண்டம்மன் வந்துவிட்டாள்.... என்ற மகிழ்ச்சியில் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.......