அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/7/14

ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர் மலைக்கோவில் , போடி

ஸ்ரீ  மல்லிங்கேஸ்வரர் மலைக்கோவில் , போடி



இந்த கோவில் சிருங்கதேவ மகரிஷி கோத்ரம். முச்சளதவரு வம்சம் தாயாதிகளுக்கு பாத்தியப்பட்டது.தெய்வங்கள்-அருள்மிகு மல்லிங்கேஸ்வரர்,மனோன்மணி அம்மையார்,ராஜகொண்டம்மாள்,செல்வகொண்டம்மாள்.
அனைவராலும் மலை மீது சென்று வணங்க முடியாததால் அங்கிருந்து மண் எடுத்து வந்து தேவாரம் எனும் ஊரில்
  கோவில் கட்டி உள்ளார்கள் இந்த வம்சாவளிகள் பெரும்பாலும் தேனி மாவட்டத்தில் உள்ளனர்.மேலும் பொள்ளாச்சி தாலுகா குஞ்சிபாளையம் கிராமத்தில் உள்ளனர்.

புகைப்பட தொகுப்பு 

மலை உச்சியில் உள்ள வெள்ளை கட்டிடம் தான் கோவில் 

மலைக்கோவில் B.நாகலாபுரம் பகுதியில் அமைந்துள்ளது.







கன்னிமார் ஊற்று 




இந்த படங்கள் கீழே தேவாரம் பகுதியில் அமைந்துள்ள  கோவில் 






நன்றி திரு. ஜுபிட்டர் செல்வம், போடி 

No comments:

Post a Comment