அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/18/13

பற்பல ஆடைகள் படைத்தது

நாடு திரும்பிய முனிவர் நெசவு நெய்வதற்கு மேலும் தேவைப்பட்ட வடம் கயிறு அச்சு மற்ற உபகரணங்களைத் தாமே தயார் செய்து கொண்டார். இங்கு ஓர் ஐயம் எழலாம் நெசவுக் கருவிகளில் உபகரணங்களைத் தயார் செய்து கொள்ளும் ஆற்றலைப் பெற்ற முனிவர் முதன்மையான கருவிகளையும் தாமே செய்து கொண்டு இருக்கலாமல்லவா? கருவிகளுக்காக மேருமலையிலிருக்கும் மயனை நோக்கி ஏன் போக வேண்டும்? தேவலமுனிவர் சிவபெருமானின் பக்தரும் மானத புத்திரருமாயிற்றே. அவரிடம் கருவிகளைச் செய்து கொள்ளும் ஆற்றல் இல்லாமலா இருக்கும் என்பது. திருவருளும் நல்லொழுக்கமும் பெற்ற முனிவர், வேண்டும் கருவிகளைத் தாமே செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றவரே. எனினும் ஐவர கருவிகள் வேண்டி மேருமலைக்குப் போகக் காரணம், போகும் வழியில் சாபம் பெற்றுத் துன்புற்றிருந்த சிங்கத்திற்கும் அசுரனுக்கும் சாப நீக்கம் தரவும் மயனிடம் போர்க்கருவிகளைப் பெறவும் ஆகும். சாதனம் பலவு மேற்பச் சமைத்திட வல்லோன் வேண்டிக் கோதிலா மயன்பாற் சென்ற கொள்கையா தென்னிற் கேன்மின் ஏதமார் சாபத்தாழ்வுற் றிருந்தூய் வில்லாத் தீதுறு நிருதனுக்குந் திறலுரறு சீயத்திற்கும் சொல்லுமச் சாப நீக்கந் தூயதே வாங்கன் றன்னாற் புல்லுமென் றறவோர் மாற்றம் பொருந்திய வதனான் மேருக் கல்லிடைக் கருவி பெற்று வந்திடும் கரும முன்னி யொல்லையின் வழிக்கொண்டந்த வும்பர் கம்மியன் பாற் சென்றான். இனி முனிவர் ஆடைகளை நெய்வதற்காக் கருவிகளைப் பூட்டி தயார் செய்து கொள்கின்றனர். தொழிலை ஆரம்பிக்குமுன் தமது குலதெய்வமான சவுடநாயகியை மெய்யன்போடு நினைக்கின்றார். அம்மையும் முனிவர் முன் தோன்றி "என்னை நினைத்த காரணம் யாது? ' என்று வினவ, முனிவரும் அம்மையை வணங்கி அம்மையே! தேவர் முதல் யாவருக்கும் அடியேன் ஆடைகள் வழங்க வேண்டியிருப்பதால் நான் நெய்யும் ஆடைகள் ஒன்று பலவாகப் பெருக வேண்டும். ஆடைகள் பெறுகின்றவர் மனமகிழும்படி அந்த ஆடைகள் பன்னிறங்களில் அமையவும் வேண்டும். என்று வேண்டிப் பணிந்து நின்றார். அம்மையும் பொன் வளையல் ஒன்றைக் கொடுத்து " இதை அணிந்து கொண்டு துணி நெய்தால் நீ நினைத்தபடியெல்லாம் நிறத்தாலும் வடிவத்தாலும் ஆடைகள் அமையும். ஒன்று பலவாகவும் பெருகும்.' என்று ஆசி கூறி மறைந்தருளினார். முனிவரும் நல்ல சுப முகூர்த்தத்தில் அம்மை அளித்த பொன் வளையலைக் கையில் அணிந்தவாறு ஆடைகள் நெய்யத் துவங்கினார். தேவல முனிவர் நெய்து தயாரித்த ஆடைகளின் பெயர்கள் வருமாறு: 1. நேத்திர பந்தர் 2. அமிர்த சந்திர பந்தர் 3. அன்ன பந்தர் 4. அன்ன புஞ்சர் 5. பலவகைத் தாராவளிகள் 6. மேகாவளிகள் என்பன வாகும்.

No comments:

Post a Comment