அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/17/13

32 .காசியப மகரிஷி கோத்ரம்

பிரம்மாவின் குமாரர் மரீசி மகரிஷி. மரீசிக்கும் கலை என்பாளுக்கும் பிறந்தவர். காசியபர். இக் காசியபர் தட்சப் பிரஜாபதியின் பெண்கள் பதின் மூவரை மணந்து அவர்கள் வழியாய் வம்ச விருத்தி செய்தார். அப்பெண்களும் அவர்கள் வழியாய்ப் பிறந்தவர்களும் வருமாறு :-
1) அதிதி வழியாக ஆதித்யர்கள்
2) திதி வழியாகத் தைத்தியர்கள்
3) தநு வழியாகத் தானவர்கள்
4) அநாயு வழியாகச் சித்தர்கள்
5) பிரதை வழியாகக் கந்தருவர்கள்
6) முனிவழியாக அப்சரசுக்கள்
7) சுரசை வழியாக ய்க்ஷர்கள், இராக்கதர்கள்
8) இளை வழியாக மரம், செடி, கொடி மிருகங்கள்
9) குரோத வரை வழியாகக் கொடிய மிருகங்கள்
10) தாம்ரை வழியாக குதிரை பட்சிகள்
11) சுரபி வழியாகப் பசுக் கூட்டங்கள்
12) விநதை வழியாக அருணன், கருடன்
13) கத்ரு வழியாக நாகங்கள்.
பின் இக்காசியபருக்கு பர்வதன் என்னும் தேவரிஷியும் விபாண்டகன் என்னும் பிரம்மரிஷியும் பிறந்தனர்.
பரசுராமர் தம்முடைய அசுவமேத யாகத்தில் பூமியைக் காசியபருக்குத் தானமாகக் கொடுத்தார். காசியபரால் தானமாகப் பெறப்பட்ட பூமி காசினி என அழைக்கப்பட்டது.
உபேந்திரர் விஷ்ணுவின் அம்சமாக இவருக்கும் அதிதிக்கும் பிறந்தார்.
மாயையிடமாக இவருக்குச் சூரபத்மன், சிங்கமுகாசூரன், தாரகாசூரன், அசமுகி ஆகியோர் பிறந்தனர்.
ஊர்வசிக்கும் இவருக்குமாக வசிஷ்டர் பிறந்தார். பிரஜாபதிகளுள் இவர் ஒருவர். ரிக் வேதத்தில் பல சூக்தங்களுக்கு இவர் கர்த்தா.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கண்டதவரு :- கண்டம் - கழுத்து; கழுத்தைப் பற்றி வந்த ஒரு பெயர்.
குசதவரு :- குசம் - தர்ப்பை; தர்ப்பையைக் கொண்டு வைதீக காரியங்கள் செய்பவர்.எப்பொழுதும் தர்ப்பையும் கையுமாக இருந்ததால் வந்த ஒரு பெயர்.
குண்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் அக்நிகுண்டத்திற்கு முதற் பூஜை செய்து பூ மிதிக்கும் உரிமம் பெற்றவர். யாககுண்டத்திற்கு அருகே இருந்து எப்போதும் யாகம் செய்து கொண்டே இருப்பவர்.
குத்தாலதவரு :- தஞ்சை மாவட்டம் திருமயிலாடுதுறை அருகே உள்ள ஓர் ஊர். அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோணங்கிதவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர். கோணங்கித்தனம் உள்ளவர்.
சரசதவரு :- சரசங்களில் வல்லவர். சாகசங்கள் மிக்கவர்.
சரந்திதவரு :- குருவினிடம் உபதேசம் பெற்றுக்கொண்டு; குருவின் அநுமதியுடன் மற்ற சீடர்களுக்கு உபதேசம் செய்பவர். உபகுருவானவர்.
சர்ப்பதவரு :- நாக பூசனை செய்பவர்.
சிந்துதவரு :- சிந்து நதிக்கரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிருங்காரகவியவரு :- அணி இலக்கணம் நிரம்பிய அழகிய கவிதைகள் பாடும் வன்மை பெற்றவர்.
தாம்பூலதவரு :- தாம்பூலப் பிரியம் கொண்டவர்.
தும்மதையவரு :- சிவபிரானுக்குப் பிரீதியான தும்பைப்பூவால் அவரை வழிபாடு செய்பவர்.
பாக்கியதவரு :- சகல பாக்கியத்தோடும் வாழ்பவர்.
பாலகவியவரு :-இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர்.
பில்வபத்ரதவரு :- வில்வதளத்தினால் சிவ பூசனை செய்பவர்.
மச்சாதவரு :- உடம்பில் மச்சம் உள்ளவர்.
மனனதவரு :- மனனம் - மனப்பாடம் செய்வதில் வல்லவர். கருத்தை மனதில் நிலை நிறுத்திக் கொள்பவர்.
ருத்ரவீணையவரு :-ருத்ரவீணை வாசிப்பில் வல்லவர். இசை வல்லுநர்.
வித்யாநிபுணதவரு :- சகல வித்தைகளிலும் நிபுணத்வம் - திறமை உடையவர். கல்வி கேள்விகளில் வல்லவர்.
விய்யாதிதவரு :- சென்னைக்கருகில் இருக்கம் விய்யாதி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜாஜிதவரு :- ஜாஜி - ஜாதிமல்லிப்பூ. இப்பூவால் வழிபாடு செய்பவர்.
கொம்மனதவரு :-
சபேதவரு :-
பம்லதவரு :-
புத்துலதவரு :-
முடதெவரு :-
ரெட்ளவாரு :-

No comments:

Post a Comment