நிர்மலா ஹாஸ்பிடல்.
பரபரப்புடன் காணப்பட்டாள் சுமதி.
"டாக்டர்... இப்போ எப்படி இருக்கார்.?"
"கொஞ்சம் சிவியர் அட்டாக்தாம்மா...நிறைய பிளட் கிலாட் இருக்கு.ஹெவியான இன்ஜெக்சன் போட்டிருக்கோம்.மானிடரிங் நடக்குது."
"ரொம்ப சீரியஸா டாக்டர்,,?"
"ம்ம்ம்...இதுக்கு முன்னாடி இதுபோல வந்திருக்கா..?"
"இதுதான் பர்ஸ்ட் டாக்டர்.காலையில ஆபிஸ் போறதுக்கு பைக்க எடுத்தாரு.அப்படியே நெஞ்சு வலிக்குதுன்னு உட்கார்த்து விட்டார்."
"சரி.நான் மாத்திரை எழுதித் தாறேன் .டெய்லி சாப்ட சொல்லணும்..."
"மாத்திரையில சரியாகிடுமா டாக்டர்."
"ஆகலாம்.ஆகாமலும் போகலாம்..."
"அப்படினா ஆபரேசன் செஞ்சிடுங்க டாக்டர். " தாமதிக்காமல் சொன்னாள்.
"நீங்கள் அவருடைய மனைவியா..? வாரிசு இருக்காங்களா..?"
தயக்கத்துடன், "ஆமா டாக்டர்.இரண்டாவது மனைவி.வாரிசு எதுவும் இல்லை.முறைப்படி விவாகரத்து வாங்கிட்டுதான் திருமணம் செய்தார்."
"ஆபரேசன் -னா நிறைய செலவாகுமேம்மா..."
"அதைப்பற்றி கவலையில்லை டாக்டர்.நீங்கள் உடனே ஆபரேசன் செய்யுங்கள்.முடிந்தவுடன் பணம் கட்டுகிறேன்."
"சாரிம்மா..இங்கே ஆபரேசன் செய்யும் முன்பே மொத்தப் பணத்தையும் கட்டவேண்டும்."
"இப்போ கையில ஏதும் பணமில்லையே டாக்டர்.."
"ஆபரேசன் முடிந்த பிறகு மட்டும் எங்கிருந்து பணம் வரும்...? "
"அவரை நான் பத்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ்யூர் செய்திருக்கேன்..."
No comments:
Post a Comment