அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/21/13

182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு சரியாகப் புலப்படவில்லை, காளிதாசனின் ரகுவம்ச காவியத்தில் இம்மகரிஷியின் வரலாற்றுக் குறிப்பு ஒன்று காணப்படுகிறது. செவி வழிக் கேள்வியாக சில செய்திகள் கிடைத்தன அவை வருமாறு :-

வரதந்து மகரிஷியிடம் முனிவர் ஒருவர் சீடராய் இருந்து வேதங்களைக் கற்றார். முனிவரின் வித்யாப்பியாசம் முடிந்தவுடன் வரதந்து மகரிஷிக்கு அவர் குருதட்சிணை கொடுக்க விரும்பினார்.

ஆனால் வரதந்து மகரிஷியோ குருதட்சிணை வேண்டாம் என மறுத்தார். சீடர் வற்புறுத்தவே அவர் குறுதட்சிணை ஏற்க ஒப்புக்கொண்டார்.

குருதட்சணை நிமித்தமாக முனிவர் விஸ்வஜித் என்னும் மன்னனிடம் சென்றார். மன்னன் விஸ்வஜித் முனிவரின் சீடர். தன் குருவின் குருவிற்குக் குறுதட்சிணை கொடுக்க விஸ்வஜித் விரும்பினான்.

ஆனால் அன்று முன்தினம் தான் விஸ்வஜித் தான் செய்தயாக முன்னிலையில் தன் பொன் பொருள் அத்தனையும் தானம் செய்து விட்டு, மண் பாத்திரத்தில் உண்ணும் நிலையில் இருந்தான்.

இந்நிலையில் குருதட்சினைக்குரிய பொன்னுக்கு என்ன செய்வது! என்று ஆலோசித்தான். தன் நால்வகைப் படைகளுடன் குபேரன் மீது போர் தொடுப்பது என்ற முடிவினுக்கு வந்து படைகளைச் சித்தம் செய்ய ஆணையிட்டான்.

இதனைக் குபேரன் கேள்விப்பட்டான். மன்னனின் வீரம் தன்னை வென்று விடும் என்று நினைத்து, போரைத் தவிர்க்க விரும்பினான். அன்று இரவு மன்னனின் நகர் முழுவதும் பொன்மழை பொழிந்தான் குபேரன். எனவே போர் நின்றது. மன்னனிடம் குருவிட்குச் செலுத்த வேண்டிய பொன்னை மட்டும் பெற்றுக்கொண்டு முனிவர் புறப்பட்டார். வரதந்து மகரிஷி குருதட்சிணை பெற்றார். மற்ற பொன் முழுதும் நகர மக்களுக்குத் தானம் செய்தான் விஸ்வஜித்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கப்பேலாரு, கபாலதவரு :- கபாலதவரு என்ற பெயரே கப்பேலாரு என மருவி வழங்கப்படுகிறது. பிரம்ம கபாலம் வைத்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வழிபடும் வழக்கம் உடையவர்.
ஆஸ்யதவரு :- ஹாஸ்யம் - நகைச்சுவை. இவர்கள் நவரசங்களுள் ஒன்றான நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்.
கபிலதவரு :- கபில முனிவரால் ஸ்தாபிக்கப் பெற்ற கபிலேஸ்வரரைக் குடும்ப தெய்வமாக வணங்குபவர். ( கங்கை கடலுடன் கலக்கும் இடத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது. கல்கத்தாவில் இருந்து நூறு மைல் தூரத்தில் இவ்வாலயம் உள்ளது. ஆண்டு முழுவதும் இவ்வாலயம் தண்ணீருக்குள் முழுகி இருக்கும். தை மாதம் முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் தண்ணீர் மூன்று மைல் தூரம் தள்ளி ஓடுகின்றது. இம் மூன்று நாட்களில் மட்டும் ஆலயம் மணலில் வெளிப்பட்டுத் தோன்றும். அப்பொழுது லட்சக் கணக்கான மக்கள் இக் கபிலேஸ்வரரைத் தரிசித்து பேரு பெறுகின்றனர்.)
கப்பெரெதவரு :- கபாலத்தைக் கப்பரெ என்று கூறுவது வழக்கம். ஒருவகைப் பாத்திரத்திற்கும் கப்பரை என்று பெயர்.
கோட்டூராரு :- கோட்டூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கைலைதவரு :- கயிலைநாதனை வழிபடும் வழக்கம் உள்ளவர்.
சென்னாதவரு :- சென்னாரவல்லியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
நாபதவரு :- நாபம் ஒருவகைக் கல். இக்கல்லில் விக்கிரகம் செய்து வழிபட்டவர்.
பம்மிடிதவரு :- பம்மிடி - அகல் விளக்கு. அகல்விளக்கு செய்து தானம் கொடுத்தவர். இவர்களின் வழிபாட்டில் அகல்விளக்கு முக்கிய இடம்பெரும்.
பாரததவரு :- பாரதப் பிரசங்கம் செய்தவர்.
மச்சதவரு :- மச்சாவதாரத்தை வழிபட்டவர்.
மஹாதனதவரு :- மிகுந்த தனம் படைத்தவர்.
மால்யதவரு :- ஆலயங்கட்கு மாலைக்கட்டித் தருபவர்.
இண்டாதவரு :- சிக்கனம் மிக்கவர்.
ஸ்ரீ ராமனதவரு :- ஸ்ரீ ராமனை வழிபட்டவர்.
வரதந்திதவரு :- கோத்திர ரிஷிப் பெயரே வங்குசப் பெயராக உள்ளது. ஒன்று கோத்ர ரிஷியான வரதந்து மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வழிபட்டிருக்கலாம். அ தந்திரம் - நூல். வரதந்து மகரிஷியால் செய்யப்பட்ட நூல் வரதந்திரமாக இருக்கலாம். இந்நூலை ஓதியதால் ஏட்பட்ட பெயராக இருக்கலாம்.
பாததவரு :- பாதுகாபூசனை செய்பவர். சிவபாதுகா, விஷ்ணுபாதுகா, தேவிபாதுகா, குருபாதுகா, என இவற்றை வழிபடுபவர்.
பரததவரு :- பரதசாஸ்திரத்தில் வல்லவர்.
கப்பேதவரு, சன்னாதவரு, திஸ்னேதவரு, பஸ்ஸாதவரு, பிஸாததவரு, பிஸ்ஸாதவரு.

No comments:

Post a Comment