அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/21/13

38 .குத்ஸக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- கடகம் என்னும் ஊரில் வாழ்ந்தவர் இம்முனிவர். இவரின் மகன் தான் கௌசிக மகரிஷி. குத்ஸகர் தம் மகனுக்கு ஏற்ற பெண் வேண்டும் எனப் பெண் தேடினார். உசத்திய மகரிஷியின் பெண் விருந்தை என்பாள் அழகாலும் குனங்களாலும் மிக்கவள் என கேள்விப்பட்டார். உசத்தியரிடம் பெண் கேட்கப் புறப்பட்டார்.

விருந்தையை ஒருநாள் காட்டுயானை ஒன்று துரத்த உயிர் பிழைக்க ஓடிய விருந்தை மடு ஒன்றில் தவறி விழுந்து உயிர் விட்டாள். இந்நிலையில் பெண் கேட்க வந்த குத்ஸகர் செய்தியைக் கேள்விப்பட்டார். விருந்தையை உயர்ப்பிக்கத் தவம் செய்தார். அப்போது காட்டுயானை ஒன்று குத்ஸகரைத் தூக்கிக் கொண்டு காட்டினுள் சென்றது. யானையிடம் அதன் பூர்வீகத்தைக் கேட்டார் முனிவர்.

ஐயனே! நான் தனதத்தன் என்ற பெயர் உள்ளவன். தரும நெறியைக் கைவிட்டேன். பொன்னாசையால் ரசவாதம் செய்தேன். அந்தப் பாதகத்தால் யானை உருப் பெற்றேன். என்றது யானை.

கருணை வள்ளலான முனிவர் தம் தவ வன்மையின் ஒரு பாகத்தை யானை உருக் கொண்டவனுக்குத்தர அவன் சாபம் நீங்கித் தேவ உருக்கொண்டு சுவர்க்கம் சென்றான்.

மீண்டும் தவம் இயற்றி விருந்தையின் உயிரை யமதர்மன் அருளால் மீட்டார். அதன் பின் விருந்தையைத் தம் மகன் கௌசிகனுக்கு மணமுடித்தார். பின் தவம் இயற்றச் சென்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோணங்கிதவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர். தம்பேச்சாலும் அங்கசேட்டைகளாலும் சிரிக்கச் செய்பவர்.
தம்பூரிதவரு :- தம்பூரா என்னும் இசைக் கருவி வாசிப்பதில் வல்லவர்.
ஜாஜிதவரு - ஜாஜிமல்லினதவரு :- ஜாதி மல்லிப்பூவால் வழிபாடு செய்பவர்.
கொம்மனதவரு :-

No comments:

Post a Comment