அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/21/13

41 .கெளசிக மகரிஷி கோத்ரம்

கௌசிக மகரிஷி பிரம்மரிஷி ஆவார்.இவரின் தந்தை குத்சக மகரிஷி ஆவார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தலதாரு - ஏந்தேலாரு :- அந்தலதாரு என்னும் பெயர் தான் ஏந்தேலாரு என்று மருவி வழங்குகின்றது. அந்தலம் என்பது சிலம்பு போன்ற ஒருவகைக் கழல். இதனை வீரத்தின் சின்னமாக ஒற்றைக் காலில் அணிவர்.
கும்மடியவரு :- கும்மிடிப்பூண்டி என்னும் ஊரைப் அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பலதவரு :- மைசூர் மாநிலத்தில் கொப்பல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
திலகதவரு :- நெற்றியில் கஸ்தூரித் திலகம் அணிபவர்.
மதுராதவரு :- வடமதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவ்வடமதுரை முக்தி தரும் ஏழு நகரங்களுள் ஒன்று.
எதுகலூருதவரு :- யதுலுருதவரு என்றும் இவ்வங்குசம் வழங்கப்படுகின்றது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் எதுகலூர் என்பது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தம்பூரதவரு :- தம்புரா - வீணை கொண்டு இசைப்பாடித் திகழ்ந்தவர்.
எக்கலதவரு :- எக்கலாதேவி என்னும் தெய்வத்தை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
லக்கிம்செட்டுதவரு :- மிக்க அதிர்ஷ்டசாலிகள்.
ஜபதவரு :- ஜபதபங்கள் சிரத்தையுடன் செய்பவர்.
நோபிதவரு :-
கௌம்சிக தேவரிஷி கோத்ரம் என்பதும் இக்கோத்ரமும் ஒன்றே.
சிக்கனதவரு :-
பெனகனதவரு :-
பெகினதவரு :- என்ற மூன்று வங்குசங்கள் இதனுள் வருகின்றன.

No comments:

Post a Comment