அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

1.அகத்திய மகரிஷி கோத்ரம்

ரிக் வேதத்தில் அகத்தியருடைய பிறப்பு கூறப்படுகின்றது. கடும் விஷங்களை நீக்கக் கூடிய மந்திரங்களை அகத்தியர் செய்தார். அவை ரிக் வேதத்தில் 1 - 191 வது ரிக்காக விளுங்குகின்றன. இதனை மௌனமாய் உச்சரிக்கச் சகல விஷத் தொல்லைகளும் நீங்கும். கேலன் என்ற மன்னனுக்குப் புரோகிதராய் இருந்தார். அப்போது ரிக்வேதத்தில் 1 -165 -192 -ல் இருக்கும் ரிக்குகளைச் செய்தார்.

அகத்திய மாமுனி காலத்தைக் கடந்த, காலத்தை வென்ற ஒரு மாமுனியாவர். முன்பிறப்பில் அவருக்கு ஜடராக்கினி, தஹராக்கினி என்பன பெயர்கள் எனபாகவதம் அறிவிக்கின்றது.

ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் தத்தோளி என்ற திருநாமத்துடன்விளங்கினார் என விஷ்ணு புராணமும் முழங்குகிறது.

இவற்றால் அகத்தியரின் அளவற்ற பெருமைகள் விளங்கும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

லத்திகார்ரு :- லதாலதவரு என்னும் பெயர்தான் லத்திகார்ரு என மருவி உள்ளது. லதா என்றால் கொடி என்று பொருள். இவர்கள் கொடிபோல் எங்கும் பரந்து படர்ந்து இருப்பர். எனவே லதாலதவரு என்னும் பெயர் பெற்றனர்
பசுபுலதவரு :- திருமணத்தில் மஞ்சள் கொம்பு மரியாதை பெறுவதாலும் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவிற்கு மஞ்சள் பண்டாரம் தரும் திருப்பணியைச் செய்வதாலும் பெற்ற பெயர்.
முத்தினதவரு :- மன்னன் ஒருவனக்கு முத்து ஒன்றின் விலை மதிப்பினைப் பற்றிய சந்தேகம் ஏற்பட்டது. மற்றவர்களால் தீர்க்கமுடியாத அச்சந்தேகத்தைத் ததீர்த்து முத்தின் சரியான மதிப்பைக் கூறியதால் மன்னன் மகிழ்ந்து சன்மானங்கள் வழங்கினான்.அம்மரியாதை இன்று முத்தின வீளேவு என்று தரப்படுகின்றது .
மண்டோதரியவரு :- சிறந்த பத்தினிப் பெண் ஆன மண்டோதரியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
கரிகெதவரு :- கரிகெ - அருகம்புல் . அருகம்புல் கொண்டு வழிபாடு நடத்துபவர்.
கிருஷ்ணராய பூஷண தவரு :- இப்பெயர் கிருஷ்ணாய பூஷணம் வாரு என வழங்கப்படுகின்றது. விஜய நகர சாம்ராஜ்ய சக்ரவர்த்தி கிருஷ்ண தேவராயர் அவரிடம் பூஷணங்கள் - ஆபரணங்கள் - சன்மானமாகப் பெற்றவர்.
சரிகெதவரு :- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன சாதன சதுஷ்டயம் எனப்படும். இவற்றுள் சரியை என்னும் கர்மாவில் உயர்ந்தவர்.
சிரிகஞ்சுவாரு :- கோபத்தை விட்டவர். அமைதியானவர்.
துப்பட்டிவாரு :- துப்பட்டி நெய்வதில் சிறந்தவர்.
மிஞ்சிலாரு :- காலில் மிஞ்சு அணிந்தவர். (கால் விரலில் அணியும் அணி இது.)
முக்கரதவரரு :- முக்கரம் - மூக்குத்தி; மூக்குத்தி அணிந்தவர்.
முத்கரதவரு :- காயத்ரிதேவியின் வழிபாட்டிற்கு உரிய முத்திரைகள் இருபத்தி நான்கு. அதில் முத்கரமுத்திரை ஒன்று. சங்கு சக்கரங்களை தோளில் பொறித்துக் கொள்வதுபோல் தம் தோளில் முத்கர முத்திரையை தரித்துக் கொண்டவர்.
விஞ்சாமரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு வெண்சாமரம் வீசும் திருத்தொண்டு செய்பவர்.
ஸ்யாமபுரதவரு :- ஸ்யாமபுரத்தில் வசித்தவர்.
காடிலவாரு, போசாவாரு, லப்பிவாரு, வுங்கரவாரு என்பனவும் இக்கோத்திரத்தில் காணப்படுகின்றன. லதிகார்ருக்கு உரிய வீளேவு மரியாதைகள் அர்ச்சக வீளேவு. - இது பூசாரி வீளேவு என்று சொல்லப்படுகின்றது. முத்தின வீளேவு சின்னஞ்செட்டி வீளேவு.

அகத்திய மகரிஷி கோத்ரத்தைச் சார்ந்த கூழவாடு சின்னஞ்செட்டி என்பவர் கடும் பஞ்ச காலத்தில் எல்லோர்க்கும் உணவளித்துக் காப்பாற்றினார். அதனை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் வீளேவுதான் சின்னஞ்செட்டி வீளேவு ஆகும்.

பூசாரி வீளேவு என்பதும் அர்ச்சக வீளேவு என்பதும் ஒன்றே.

அகத்திய, சதானந்த, கௌஷிக, வரதந்து மற்றும் ஜமதக்னி என்னும் ஐந்து கோத்ரத்தாருக்கும் இவ்வீளேவு பொதுவாம்.

No comments:

Post a Comment