அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம்

ரிஷி வரலாறு :- விசுவாமித்ர மகரிஷியின் குமாரர். வேதத்தில் வல்லவர். சிறந்த தவசி. மானுட வாழ்வில் பதினாறு விதமான சமஸ்காரங்கள் இருக்கின்றன. அவை கர்ப்பதானம் முதலாக அந்தியேஷ்டி முடிவாகப் பதினாறாம். இவையே ஷோடஷ கர்மாக்கள் எனப்படும்.

தேவாங்கர் அனைவரும் ரிக்வேதிகள். ரிக்சாகையை அனுஸந்திக்க வேண்டியவர்கள்.

இப்பதினாறு காரியங்களுக்கும் உள்ள ரிக்வேத மந்திரங்களை ஆசுவலாயனர் தொகுத்து வழங்கினார். தேவாங்கர் அனைவரும் ஆசுவலாயன சூத்திரத்தைச் சார்ந்தவர். எனவே ஒவ்வொரு காரியச்சடங்கையும் ஆசுவலாயன சூத்ர மந்திரங்களைக் கொண்டு செய்துக் கொள்ள வேண்டும்.

ஆசுவலாயனர் கூறும் ஷோடச கர்மாக்கள் வருமாறு :-
1) கர்ப்பாதனம்
2) பும்சவனம்
3) சீமந்தம்
4) ஜாதகர்மம்
5) நாமகர்ணம்
6) சூடாகர்மம்
7) நிஷ்கிரமணம்
8) அன்னப்பிராசினம்
9) கர்ணவேதம்
10) உபநயனம்
11) வேதாரம்பம்
12) சமாவர்த்தனம்
13) விவாகம்
14) வானப்பிரஸ்தம்
15) சன்யாசம்
16) அந்தியேஷ்டி
என்பனவாகும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ககனதவரு :- ஆகாசதவரு :- தவ ஆற்றலால் ஆகாய மார்க்கமாய்ச் செல்லும் ஆற்றல் பெற்றவர். வானளாவப் புகழ் கொண்டவர்.
குஞ்சம்வாரு :- நூல் பாவு செய்யும் குஞ்சம். இதனைச் செய்து தருபவர்.
சூரிவாரு :- சூரத்தனம் செய்பவர். சிறந்த வீரர்கள்.
நாரதவாரு :- நாரதமுனியைப் போன்றவர். நன்மையால் முடியும் கலகத்தைச் செய்பவர்.
நாரதரைப் போன்ற வேதக் கல்வியும், இசை ஞானமும் உடையவர். ஓயாது நாரணனைப் பூசிப்பவர்.
மத்தெளவரு ;- " மிருதங்க தவரு " என கன்னடத்தில் இப்பெயர் வழங்குகின்றது. மத்தள வாசிப்பில் வல்லவர்.
மருமாமிளவாரு :- 'மருமாமிள" என்ற ஊரைச் சார்ந்தவர்.
யதமெட்டுவாரு :- மெட்டு என்பது மேட்டு நிலத்தைக் குறிக்கும். யதமெட்டு என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

No comments:

Post a Comment