அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம்

மகரிஷியின் வரலாறு புலப்படவில்லை.உரோமகருஷணருக்கும் சுகுருக்கும் மாணாக்கராக அகரத்த விருஷணர் என்பவர் இருந்தார் . அகர்ச்ச மகரிஷியும் இவரும் ஒருவரா ? இல்லை வேறானவர்களா ? என்பது புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அதிகானதவரு :- கானம் - சங்கீதம்; சங்கீதத்தில் தெளிந்த ஞானம் உள்ளவர். இக்கலையில் வல்லவர். மிக இனிமையாக பாடக்கூடியவர்.
மன்டூகதவரு :- மண்டூக பூஜா விதிப்படி பூசனை செய்பவர்.
கார்யதவரு :- தங்கள் காரியத்தில் அதிக கவனம் செலுத்துபவர். காரியங்கள் செய்து முடிப்பதில் திறமையானவர்.
பத்யதவரு :- அடிக்கடி பட்டினி கிடந்தது நோன்பு நோற்பவர்.
முத்கலதவரு :- முத்கல மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்

No comments:

Post a Comment