அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

3. அசிதேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷியின் வரலாறு :- மஹாபாரதத்தினுள் இம்முனிவர் பெயர் பல இடங்களில்காணப்படுகின்றது.இம் முனிவர் வியாசரின் மாணாக்கரில் ஒருவர். இந்திரப்பிரஸ்தத்தில் தருமன் அரசாண்டு கொண்டிருந்தபோது நாரதர்அவனிடம்வந்தார். திரிலோகங்களிலும் சஞ்சாரம் செய்து தாம் கண்ட சபைகளின் சிறப்புகளையெல்லாம் தருமனின் வேண்டுகோளின் படி கூறினார்.

ஆயிரம் ஆண்டுகள் மனதை அடக்கி பிரம்ம விரதம் என்னும் தவம செய்து முடித்துப் பிரம்ம சபைக்குச் சென்றேன். பிரம்மசபை சொல்லுக்கெட்டா வடிவங்களையும் பிரகாசத்தையும் கொண்டது.

உபபிரம்மாக்களும் அகத்தியரும் அஸிதரும் தேவலருமான மஹரிஷிகள் அங்கிருந்தனர் என்று நாரதர் கூறினார். இம்மஹரிஷிகள் இருப்பது சபைக்குச் சிறப்பு என்றார் நாரதர். கீதையில் விபூதி யோகத்தில் " அஸிதோ தேவலோ " என்ற ஸ்லோகத்தில் அசிதர் தேவலர் இவர்களால் வணங்கப்படும் பெருமை கண்ணனுக்கு இருக்கின்றதென்று அர்ச்சுணன் கூறுகின்றான்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தலதவரு - ஏந்தேலாரு :- அந்தலம் என்பது ஒருவகைக் கழல். காற்சிலம்பு போன்றது. இச்சிலம்பினை ஒற்றைக்காலில் அணிபவர். இப்பெயர்தான் ஏந்தலதவரு, ஏந்தேலாரு என மருவியிருக்கின்றது.
அமராஜூலதவரு :- அமரகோசம் என்னும் நிகண்டில் வல்லவர். இந்நிகண்டினை அனைவருக்கும் கற்பித்தவர்.
கடுபுலதவரு :- கடுப்பு என்பது தெலுங்கு மொழியில் வயிற்றைக் குறிக்கும். வயிற்றினை ஒட்டி வந்த பெயர்.
திருமன்வாறு :- திருமண் - நாமம் இட்டுக் கொள்பவர்.
பந்தாருதவரு :- பந்தாரி என்பது ஒரு வகைச் செடி. இச் செடியருகில் தம் க்ருஹ தேவதையை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
பௌஞ்சலதவரு :- இவர்களுக்கு உஞ்சதவரு என்றும் பெயர். மாங்கல்யம், பூணுல் இவற்றை தானம் செய்பவர்.
ஆகலிவாரு :- ஆகலி செட்டு என்பதும் ஆகலி என்பதும் ஒருவகை மரம்.இம்மரத்தடியில் தம் தெய்வத்தை வணங்குபவராக இருக்கலாம்.பசிக்கும் ஆகலி எனப்பெயர்.
வர்ஜாவாரு :- தீமைகளைத் தள்ளி வாழ்பவர்.

No comments:

Post a Comment