அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

19 .உஷன மகரிஷி கோத்ரம்

சுக்ராச்சாரியாருக்கு உஷனன் என்பது பெயர் தாங்கியவர் சுக்ரர் ஆன வரலாறு மஹாபாரதம் சாந்தி பருவத்தில் காணப்படுகின்றது.

உஷனர் சிறந்த அறிவு நுணுக்கமும் தவ சித்தியும் கைவரப் பெற்றவர். ஒருமுறை இவர்தம் யோக பலத்தால் மறைந்தார். குபேரன் ஸ்தம்பித்து விட்டான். குபேரனின் தனம் - செல்வம் மறைக்கப்பட்டது. பின் உஷனர் குபேரனை விட்டு நீங்கினார்.

இதனால் வருத்தங்கொண்ட குபேரன் சிவபிரானிடம் முறையிட்டான். உஷனர் மீது கோபம் கொண்ட சிவபிரான் தம் சூலத்தை வில்லாக வளைத்தார். உஷனரைத் தன் வாயிலிட்டு விழுங்கினார். ஈசுவரனின் திருவயிற்றினுள் சஞ்சரித்தார் முனிவர். சிவபிரானின் யோகாக்னி அவரைத் தகிக்க தாங்க மாட்டாது சிவனைத் துதித்துக் கொண்டு அவர் வயிற்றிலிருந்து வெளிப்பட்டார். அவர் மீது கோபம் கொண்ட இறைவன் சூலத்தை ஓங்கக் கருணாகரியான அம்பிகை முனிவர் மீது கொண்ட கோபத்தைக் கைவிடச் செய்தாள். அம்பிகையின் புருஷகாரத்தினால் உஷனர் இறைவனின் வயிற்றில் இருந்து வெளிப்பட்டதால் இவர் சுக்ரர் எனப்பட்டார்.

தேவ குருவைக் காட்டிலும் மந்திர பலத்தில் இவர் விஞ்சியவர். தேவகுருவே தன் மகன் கசனை இவரிடம் வித்தை கற்க அனுப்பித் தமக்குத் தெரியாத மிருத்யு சஞ்சீவி மந்திரம் கற்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தாரதம்மியதவரு :- தராதரம் அறிந்து பேசுபவர்கள்.
சிருங்காரகவியவரு :- அணிநலன்கள் சிறக்க அழகான கவிதைகள் இயற்றுபவர்.
பாலகவியவரு :- சிறு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற அதிசயவான்கள்.
ருத்ர வீணையதவரு :- ருத்ர வீணை என்னும் ஒருவகை வீணை வாசிப்பில் வல்லவர்கள்.
குறிப்பு :- இக் கோத்ர வங்குசப் பெயர்களைக் கொண்டு பார்த்தால் இக்கோத்திரத்தார் அனைவரும் சிறந்த கலை வல்லுனர்கள் எனத் தெரிகின்றது.

No comments:

Post a Comment