கங்கணம் கட்டுதல் :-
- முதன்
முதலில் தேவலர் தறியில் அமர்ந்து துணிகளை நெய்ய ஆரம்பிக்கும் முன் ஸ்ரீ
சௌடேஸ்வரி அம்மனை தியானித்தார். அம்மனும் தோன்றி தன் கையில் இருந்த நவரத்ன
கங்கணத்தை தேவலரின் கரத்தில் அணிவித்து "இனி எந்த காரியத்தையும் சுலபமாக
முடிக்கும் ஆற்றலை பெறுவாய்" என்று ஆசீர்வதித்து மறைந்தார்.
இதனை மனதில் கொண்டுத்தான் அனைத்து சுப காரியங்களுக்கும். ஆரம்பிக்கும் முன் அம்மனை நினைத்து கங்கணம் கட்டிக்கொள்கிறோம். கங்கணம் கட்டிக்கொண்டு ஆரம்பிக்கும் செயல்களுக்கு எந்த இடையூறும் ஏற்ப்படாது.
கோயில் விசேஷத்திற்கு விரதம் இருப்பவர்கள் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டிய முறைகள்.
விதி முறைகள் :-
1. காலை ,இரவு இரண்டு நேரம் குளிக்க வேண்டும்
2. காலணிகள் போட்டு நடக்கக் கூடாது
3. திருமணம் ஆனவர்கள் தனியாக படுக்க வேண்டும்
4. கட்டிலில் படுக்கக் கூடாது தரையில் புதிய பெட்சீட்களை விரித்தும்
தலைக்கு தலைகானி பயன்படுத்தாமல் புதிய பெட்ஷீட்களையே தலைக்கும்
வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது பழைய ,புதிய மஞ்சள் வேஷ்டி ,சேலைகளை
விரிபுக்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
5. சாப்பிடும் தட்டு விரத நாட்களில் மட்டும் பயன்படுத்தும் தட்டு
இருந்தால் அதில் சாப்பிடலாம் அல்லது வாழை இலை போட்டு சாப்பிட வேண்டும்
6. நம் வீட்டில் நம் ஒருவர் மட்டும் கங்கணம் கட்டியிருந்தால் சாப்பாடு
வகைகளை சமைத்தவுடன் தனியாக எடுத்து வைத்துவிட்டு பிறகு மற்றவர்கள் தொட
வேண்டும். தூரமான பெண்கள் சமைத்த உணவை சாப்பிடக் கூடாது
7. அடுத்தவர் வீட்டில் தண்ணீர் கூட அருந்தக்கூடாது
8. ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் சாப்பிடக் கூடிய அவசியம்
ஏற்பட்டால் வெஜிடேரியன் ஹோட்டலில் மட்டுமே சாப்பிட வேண்டும் வாழையிலை
போட்டு சாப்பிட வேண்டும்
10. துக்க காரியங்கள், ருது சடங்குகள் இவற்றில் கலந்து கொள்ளக் கூடாது.
No comments:
Post a Comment