சக்தி நிறுத்துதல் :- சக்தி
நிறுத்துவது என்பது சௌடாம்பிகை அம்மன் கோவில்களில் எப்பொழுதாவது அம்மன்
கனவில் வந்து சொல்வதை வைத்து செய்வது. இந்த சக்தி நிறுத்தும் விழா
காலங்களில். மற்ற விழா காலத்தை விட அதிக நாள் காப்பு கட்டி விரதம்
இருப்பார்கள். குறைந்த பட்சம் 30 நாட்களாவது இருப்பார்கள். அந்த ஊரின்
அனைத்து தேவாங்கர் மக்களும் கடுமையான கட்டுப்பாட்டுடன் விரதம்
இருப்பார்கள். ஒரு முறை ஒரு கோவிலில் சக்தி நிறுத்தினால் அடுத்து சக்தி
நிறுத்த 20 வருடம் 25 வருடத்திற்கு மேல் ஆகும்.
சக்தி நிறுத்தும் விதம் :- புதிய மண் சட்டியில் நிரம்ப தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். பின் அந்த சட்டியின் மேல் விளிம்பில் அம்மனின் சக்தியான ஜம்முதாடு கத்தியை நிறுத்துவார்கள்.
மூன்றிலிருந்து ஐந்து கிலோ வரை எடை உள்ள அந்த கத்தி அப்படியே நிற்கும்.
எப்பொழுது அந்த கத்தி கீழே சாயும் என்பதை யாராவது ஒரு பெண் மணிக்கு
சாமிவந்து சாமியாடி சொல்லும். அந்த நேரத்தில் துணியை விரித்து பிடித்து
கொண்டிருப்பார்கள் அது தானாக சாய்ந்து விழும். குறைந்த பட்சம் 20 மணி
நேரம் நிற்கும்.
சக்தி நிறுத்தும் முறை :- ஜம்முதாடு கத்தியை பூனுலில் கட்டி
பூனூலின் இரண்டு முனைகளை இருவர் பிடித்துக் கொண்டு கத்தியின் முனையை மண்
சட்டியின் விளிம்பில் வைப்பார்கள். கத்தி நிற்கும் வரை ஆள் மாற்றி ஆள்
மாற்றி பிடிப்பார்கள். நின்ற உடன் பூனூலை விட்டு விடுவார்கள்.
இன்னொரு முறை ஜம்முதாடு கத்தியை கையில் பிடித்துக் கொண்டு
அதன் முனையை மண் சட்டி விளிம்பில் வைப்பார்கள். அது தானாக நிற்கவில்லை
என்றால் அடுத்த முக்கியஸ்தரிடம் கொடுப்பார். அது தானாக நிற்கும் வரை ஒருவர்
மாற்றி ஒருவர் நிறுத்திக் கொண்டே இருப்பார்கள்
சக்தி நிறுத்தும் போது 30 நிமிடத்திற்குள் நின்றாலும்
நிற்கும் சில நேரம் 5 மணி, 6 மணி நேரத்திற்கு மேல் கூட ஆகும். சக்தி
நிறுத்தும் போது அலகு வீரர்கள் கத்தி போடுவார்கள் . நேரம் செல்ல, செல்ல
கத்தி போடக் கூடியவர்களின் வேகம் மற்றும் ஆவேசம் அதிகமாகும். சக்தி நின்று
விட்டால் குறைந்த பட்சம் 20 மணி நேரம் வரை நிற்கும்.
இது வரை சித்தையங்கோட்டையில் 2009 லும், அருப்புக்கோட்டை ஏரியாவில் உள்ள கல்குறிச்சியில் 2009 லும், நீராவியில் 2010 லும், கட்டங்குடியில் 2011 லும் சக்தி நிறுத்தி இருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒஸக் கோட்டையில் 10 - 2 - 2013 ல் சக்தி நிறுத்தி இருக்கிறார்கள். அதன் புகைப்படம்
No comments:
Post a Comment