அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/17/14

1947 ஆம் ஆண்டின் பாணியார் வம்சத்திருக்கோவில் வரவு செலவு அறிக்கை அடங்கிய புத்தகம்:-

1947 ஆம் ஆண்டின் பாணியார் வம்சத்திருக்கோவில் வரவு செலவு அறிக்கை அடங்கிய புத்தகம்:- 
                 
                                      உடுமலை வட்டம், கொடிங்கியம் கிராமம், சைங்கல்ய மகரிஷி கோத்திரம் பாணியர் குலத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமகாலட்சுமி திருக்கோவில் வரவு செலவு அறிக்கையும், இயற்றப்பட்ட தீர்மானங்களும் அடங்கிய 1947ஆம் வருடத்திய சிறிய வடிவிலான புத்தகத்தில் அடங்கியுள்ள விபரங்கள்.

                                      கொடிங்கியத்தில் சர்வசித்து வைகாசி மீ 18 உ சைங்கல்ய மஹரிஷி கோத்திரத்தில் உதித்த நமது தாயாதிகள் கூடிய கூட்டத்தின் நடவடிக்கைகள். 

ஆஜராகியிருந்த ஸ்தானிகர்கள்:
1. என்.ஆர்.சிக்கண்ண செட்டியார், செட்டுமைக்காரர்.
2. யூ.ஆர்.ராஜு செட்டியார், பெரிய தனக்காரர்.
3. ரா.சின்னராஜு செட்டியார்,கட்டை மனைக்காரர். 
4. ம.மாரிமுத்து செட்டியார்,பூசாரி.
5.ம.பெருமாள் செட்டியார்,ஷை.
6.அ.ரா.மலையாண்டி செட்டியார்,சாமாஜி.
7. பீ.ரா.மலையாண்டி செட்டியார், ஷை.
8. உ.ச.கந்தசாமி செட்டியார், ஷை.
9.கொ.தி. மலையாண்டி செட்டியார், சேஷராஜு.
10. கொ.ந.ரங்கசாமி செட்டியார், பெரிய வீட்டுக்காரர். 

தீர்மானங்கள்:
1. நமது குலதெய்வமாக கொடிங்கியத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமஹாலட்சுமியம்மன் கோயில் பூஜை கைங்கரியத்திற்கு வசூல் செய்ததும்,  முன்பு சிவன் ராத்திரி சமயம் வசூல் செய்ததுமான தொகையில் செலவு போக, நாளது தேதியில் ரொக்கமாகவுள்ளது        ரூ.1253-12-0. இந்த ரூபாய் ஆயிரத்து இருநூற்றைம்பத்து மூன்றும் அணா பன்னிரெண்டும், இனி மேல் இது சம்பந்தமாக வசூலாகும் தொகையும், நமது குல செட்டுமைக்காரராகிய உடுமலைப் பேட்டை ஸ்ரீ.என்.ஆர். சிக்கண்ண செட்டியார் அவர்கள் வசம் இருக்கத் தக்கதென்றும், அவருக்குப் பின்பு அவரது பட்டத்தை ஏற்றுக் கொள்ள அருகதையுடையவராகிய ஸ்ரீஎம்.எஸ்.கனகராஜு செட்டியார் என்றழைக்கிற திருமூர்த்தி செட்டியார், அவர்கள் வசம் இருக்கத் தக்கதென்றும், இம்மாதிரியே அவர்களின் வார்சு கிரமப்படி ஷையார்கள் வசம் இருக்கத் தக்கதென்றும் இக்கூட்டம் தீர்மானிப்பதுடன் ஷை துகைக்கு ஷையார்கள் நாளது தேதி முதல் மாதம் 1க்கு 100க்கு எட்டணா வட்டி சேர்த்து ஷை வட்டியை மட்டும் கோயில் பூஜை முதலிய கைங்கர்யங்களுக்குக் கொடுத்து வரவேண்டுமென்றும், ஷை அசல் துகை ஷையார்கள் வசம் எப்பொழுதும் அப்படியே இருக்கத் தக்கதென்றும்,நமது தாயாதிகள் பெரும்பான்மையோர் சேர்ந்து ஒழுங்கான ஒரு நல்ல அபிப்பிராயத்தின் பேரில் ஷை துகையை வாபஸ் கேட்கும் சமயம் ஷையார்கள் கொடுத்துவிட வேண்டும் என்றும் இக்கூட்டம் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது. 

2. சென்ற பார்த்திப ளூ பங்குனி மீ 26ந் தேதி உடுமலைப் பேட்டையில் கூடிய நமது தாயாதிகள் கூட்டத்தில் தீர்மானித்தபடி இதுவரை வரி கொடுக்காதவர்களிடம் வசூல் செய்ய சம்பந்தப்பட்ட செட்டுமை, பெரிய தனக்காரர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் மூலம் வசூல் செய்வதென்றும், அப்படியும் வசூலாகாவிடில் நமது தாயாதிகள் கூட்டம் போய் வசூல் செய்வதென்றும் அதனால் ஏற்படும் சகல செலவுகளையும் அவர்களிடமே வசூல் செய்வதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 

3.  ஒன்றாவது தீர்மானத்தில் கண்ட துகைக்கு வரும் வட்டித் துகையிலிருந்து பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் நவராத்திரி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்திரி முதலிய விசேஷ  காலங்களிலும் அமுதுடன் தேங்காய், பழம் படைத்து தீபதூப நைவேத்தியத்துடன் அம்மனுக்கு பூஜை நடத்தி வருவதற்கு மஹாலட்சுமியம்மன் கோயில் பூசாரிக்கு வருஷம்  1 க்கு 50(ஐம்பது) ரூபாய் கொடுத்து வருவதென்றும், ஷை துகையை நமது குலசெட்டுமைக்காரரிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 25 ரூ. வீதம் வாங்கி வந்து ஒழுங்காக பூசாரி பூஜை நடத்திவர வேண்டும் என்றும் இக் கூட்டம் தீர்மானிக்கிறது.  

4. ஸ்ரீமஹாலட்சுமியம்மனுக்கு நவராத்திரி மஹா சிவராத்திரி முதலிய உற்சவங்கள் வருஷந் தோறும் நடத்திவருவதென்றும், நவராத்திரி கொலு வைக்க 12 ரூபாயும், மஹா சிவராத்திரிக்குப் பள்ளயம் போட 3 ரூபாயும் கொடிங்கியம் சாமாஜி வாங்கி வந்து அதற்கு வேண்டிய சகல காரியங்களையும் கவனித்து பூசாரி , மற்ற உள்ளூர் ஸ்தானிகர்களுடன் கலந்து ஷை உற்வசங்களை ஒழுங்காக நடத்திவர வேண்டுமென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 

5. ஷை அம்மன் கோயிலுக்கு வருஷம் இரண்டு தடவைகளில் அதாவது  புரட்டாசி மீ நவராத்திரி சமயத்திலும் தை மீ பொங்கல் பண்டிகை சமயத்திலும் தடவைக்கு இரண்டு ரூபாய் பூசாரி வசம் கொடுத்து விடுவதென்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.  

6. நமது வீட்டு தேவதையாக வக்கம் பாளையத்தில்  எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபொன்னம்பொத்தி அம்மனுக்கு அமாவாசை தோறும் பூஜை நடத்தி வர வருஷம் 1 க்கு ஷை கோயில் பூசாரி வசம் 6 ரூபாய் வீதம் ஒவ்வொரு வருஷமும் மஹா சிவராத்திரி சமயம் கொடுத்து விடுவதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.  

7. மேற்கண்ட பூஜை முதலிய கைங்கர்யங்கள் காலாகாலத்தில் நடந்து வருகிறதா?  என்பதை நமது தாயாதிகளும், ஸ்தானிகர்களும் முக்கியமாக உள்ளூரிலிருக்கும் ஸ்தானிகர்கள் அப்போதைக்கப்போது கவனித்து வந்து செட்டுமை, பெரிய தனக்காரர்களிடம் (ஏதாவது குறைகளிருந்தால்) தகவல் கொடுத்து அவர்கள் அது சம்பந்தமான வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து பூஜை கைங்கர்யங்கள் ஒழுங்காக நடந்து வரச் செய்ய வேண்டியது என்பதை இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 

                  மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில்  ஏகமனதாகக் தீர்மானிக்கப்பட்டது.

8. ஷை தீர்மானங்களும், ஸ்தானிகர்கள் விபரமும், வரவு செலவு ஸ்டேட்மெண்டும் அடங்கிய ஓர் சிறிய புத்தகம் 250 அச்சடித்து நமது தாயாதிகள் அனைவருக்கும் விநியோகம் செய்வதென்றும் இக்கூட்டம் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.  

                ஷை கூட்டத்திற்கு மேற்கண்ட ஸ்தானிகர்களுடன் சுமார் நூறு தாயாதிகளும் ஆஜராகியிருந்தார்கள். 
ஒப்பம்: என்.ஆர்.சிக்கண்ண செட்டியார், 
யூ.ஆர்.ராஜு செட்டியார், 
எம்.எஸ்.கனகராஜன், 
ரா.சின்ன ராஜு செட்டியார், 
பூசாரி மாரிமுத்து செட்டியார், 
பெருமாள் செட்டியார், 
ச.கந்தசாமி செட்டியார்,
 அ.ரா.மலையாண்டி செட்டியார், 
சாமாஜி மலையாண்டி செட்டியார், 
மலையாண்டி செட்டியார் (சேஷ ராஜு), 
பெரிய வீடு ந.ரங்கசாமி செட்டியார்.  

(பல தாயாதிகளும் கையொப்பம் செய்துள்ளார்கள்).  

ஸ்தானிகர்கள்:
செட்டுமைக்காரர்
                                        :   என்.ஆர்.சிக்கண்ண செட்டியார், உடுமலைப் பேட்டை. 
பெரிய தனக்காரர்                                       :    யூ.ஆர்.ராஜு செட்டியார், உடுமலைப்பேட்டை. 
கட்டை மனைக்காரர்                                 :   ரா.ராஜு செட்டியார், தும்பலப்பட்டி.  
மஹாலட்சுமியம்மன் கோவில் பூசாரி:  பூ.ம.மாரிமுத்து, கொடிங்கியம். 
பொன்னம் பொத்தி அம்மன் பூசாரி      :   பூ.ம.பெருமாள் செட்டியார், வக்கம் பாளையம் 

சாமாஜிகள்: 1. அ.ரா.மலையாண்டி செட்டியார், கொடிங்கியம்.
2. ரா.மலையாண்டி செட்டியார், பீக்கில்பட்டி.
3. ம.சுந்தரராஜு செட்டியார், வாளவாடி.
4. ச.கந்தசாமி செட்டியார், உடுக்கம்பாளையம். 

சேஷராஜு: தி.மலையாண்டி செட்டியார், கொடிங்கியம்.

பெரிய வீட்டுக்காரர்: 
ந.ரங்கசாமி செட்டியார், கொடிங்கியம். 

தர்ம உபயம்:
                            நமது கொடிங்கியம் ஸ்ரீமஹாலட்சுமியம்மன் கோவிலுக்கருகில் நமது குல செட்டுமைக்காரரான உடுமலைப்பேட்டை, ஸ்ரீஎன்.ஆர்.சிக்கண்ண செட்டியார் அவர்கள் தனது சொந்தச் செலவில் ஓர் தூண்டிக் கிணறு 1935 ல் ஆரம்பித்து, அதை என்றும் வற்றாத முறையில் வெட்டி 3-2-1936 ல் பூர்த்தியாக்கி வைத்துள்ளார். 

வரவு செலவு ஸ்டேட்மெண்டு 
1) உடுமலைப்பேட்டை வசூல் 

1.என்.ஆர்.சிக்கண்ண செட்டியார்                              ரூ. 25 - 0 - 0
2.எம்.எஸ்.கனகராஜு செட்டியார்                              ரூ. 25 - 0 - 0
3. எம்.எஸ்.பொன்ராஜு செட்டியார்                           ரூ. 25 - 0 - 0
4.யூ.கே.கண்ணு செட்டியார்                                        ரூ. 15 - 0 - 0
5. ச.கிருஷ்ண செட்டியார்                                            ரூ. 15 - 0 - 0
6.ஜி.சுப்பிரமணிய செட்டியார்                                     ரூ. 10 - 0 - 0
7. யூ.ஆர்.ராஜு செட்டியார்                                           ரூ.  5 - 0 - 0
8. உபாத்தியாயர் எம்.சுப்பிரமணிய செட்டியார்    ரூ.  5 - 0 - 0
9. யூ.கே.சுப்பிரமணிய செட்டியார்                             ரூ.  5 - 0 - 0
10. ச.த.ஆண்டி செட்டியார்                                           ரூ.  5 - 0 - 0
11.நா.மு.பொன்ராஜுசெட்டியார்                                 ரூ.  5 - 0 - 0
12. ம.சவுண்டப்ப செட்டியார்                                       ரூ.  5 - 0 - 0
13.கே.எம்.சவுண்டப்ப செட்டியார்                              ரூ.  5 - 0 - 0
14.பீ.சு.பூமாலை செட்டியார்                                        ரூ.  5 - 0 - 0
15. ச.த.ஆ.சண்முகசுந்தரம் செட்டியார்                    ரூ.  5 - 0 - 0
16.சி.நா.ஆறுமுகம் செட்டியார்                                   ரூ. 5 - 0 - 0
17.சி.நா.கந்தசாமி செட்டியார்                                      ரூ. 5 - 0 - 0
                                                                                            -------------------
                                                                    ஆக             ரூ. 175 - 0 - 0
                                                                                            -------------------

2.குரிச்சிக் கோட்டை வசூல்:
1. ரா.சின்னராஜு செட்டியார்                                        ரூ. 5 - 0 - 0 
2. தி.பெருமாள் செட்டியார்                                           ரூ. 5 - 0 - 0
3. கே.மலையாண்டி செட்டியார்                                   ரூ. 5 - 0 - 0
                                                                                            ------------------
                                                                     ஆக               ரூ. 15 - 0 - 0
                                                                                             ------------------

3.கொரலுக்குட்டை வசூல்
1.தி.சு.துரைசாமி செட்டியார்                                      ரூ.  5 - 0 - 0
2. ரா.பெருமாள் செட்டியார்                                        ரூ.  5 - 0 - 0
                                                                                           -------------------
                                                                       ஆக            ரூ. 10 - 0 - 0
                                                                                           -------------------

4. மலையாண்டி பட்டணம் வசூல்:
1. மு.அப்பாஜி செட்டியார்                                            ரூ.10 - 0 - 0 
2. அ.ராமலிங்க செட்டியார்                                          ரூ. 5 - 0 - 0                                      
3. ஒ.தி.மலையாண்டி செட்டியார்                              ரூ. 5 - 0 - 0
4. ம.கையாஞ் செட்டியார்                                            ரூ. 5 - 0 - 0
5. ரா.மலையாண்டி செட்டியார்                                  ரூ. 5 - 0 - 0
6. நா.கிருஷ்ணசாமி செட்டியார்                                 ரூ. 5 - 0 - 0 
7. நா.கி.மலையாண்டி செட்டியார்                             ரூ. 5 - 0 - 0
8. நா.ராஜு செட்டியார்                                                   ரூ. 5 - 0 - 0
9. சு.சுப்பிரமணிய செட்டியார்                                     ரூ. 5 - 0 - 0
10. நா.க.பெருமாள் செட்டியார்                                   ரூ. 5 - 0 - 0
11. தி.சொக்கநாதஞ் செட்டியார்                                  ரூ. 5 - 0 - 0
12. கொ.ம.கோபால் செட்டியார்                                  ரூ. 5 - 0 - 0
13. ப.பொம்மக்காள்                                                        ரூ. 3 - 0 - 0
                                                                                          -------------------
                                                                          ஆக          ரூ.68 - 0 - 0
                                                                                          -------------------

5. வாளாவடி வசூல்: 

1. சாமாஜி எம்.சுந்தரராஜு செட்டியார்                       ரூ. 15 - 0 - 0
2.செட்டுமை கருப்பண்ண செட்டியார்                        ரூ. 10 - 0 - 0   
3. ரா.வேலு செட்டியார்                                                   ரூ.  5 - 0 - 0
4. வே.துரைசாமி செட்டியார்                                         ரூ.  5 - 0 - 0
5. மு.அண்ணாமலை செட்டியார்                                 ரூ.  5 - 0 - 0
6. மு.அ.ராமலிங்க செட்டியார்                                      ரூ.  5 - 0 - 0
7.மு.ராமலிங்க செட்டியார்                                            ரூ.  5 - 0 - 0
8. ரா.குழந்தைவேல் செட்டியார்                                   ரூ.  5 - 0 - 0
9.மு.மலையப்ப செட்டியார்                                           ரூ.  5 - 0 - 0 
10. சுப்பிரமணிய செட்டியார்                                         ரூ.  5 - 0 - 0
11.மு.நா.ஜெயராம செட்டியார்                                     ரூ.  5 - 0 - 0
12. தி.மலையாண்டி செட்டியார்                                   ரூ.  5 - 0 - 0 
13. மு.ஆறுமுகம் செட்டியார்                                       ரூ.  5 - 0 - 0
14. து.நா.திருமலை செட்டியார்                                    ரூ.  5 - 0 - 0
15. சு.திருமூர்த்தி செட்டியார்                                        ரூ.  5 - 0 - 0
16.அ.ஆறுமுகம் செட்டியார்                                         ரூ.  5 - 0 - 0
17.அ.கந்தசாமி செட்டியார்                                            ரூ.  5 - 0 - 0
18.உ.தி.நாகப்ப செட்டியார்                                             ரூ.  5 - 0 - 0 
19.தி.நா.நடராஜு செட்டியார்                                         ரூ.  5 - 0 - 0 
20. தி.நாகப்ப செட்டியார்                                                 ரூ.  5 - 0 - 0
21.அ.ராசஞ் செட்டியார்                                                   ரூ.  5 - 0 - 0
22. நா.நடராஜு செட்டியார்                                             ரூ.  5 - 0 - 0
23. தீ.நா.முத்துச்சாமி செட்டியார்                                 ரூ.  5 - 0 - 0
24. பெரிய தனம் வெங்கட்ராம செட்டியார்               ரூ.  5 - 0 - 0
25. வெ.ராமலிங்கம் செட்டியார்                                    ரூ.  5 - 0 - 0
26. வெ.நித்தியானந்த செட்டியார்                                ரூ.  5 - 0 - 0
27. நந்தகோபால செட்டியார்                                          ரூ.  5 - 0 - 0
28.ர.அப்பாசாமி செட்டியார்                                            ரூ.  5 - 0 - 0
29.ம.சவுண்டப்ப செட்டியார்                                           ரூ.  5 - 0 - 0
30. உ.நா.மும்மூர்த்தி செட்டியார்                                  ரூ.  5 - 0 - 0
31. நா.சீதாராம செட்டியார்                                             ரூ.  5 - 0 - 0
32. ம.மலையாண்டி செட்டியார்                                    ரூ.  5 - 0 - 0 
33. கொ.ந.குப்புசாமி செட்டியார்                                     ரூ.  5 - 0 - 0
                                                                                            ---------------------
                                                          ஆக                            ரூ.180 - 0 - 0
                                                                                            ---------------------

6.கோயமுத்தூர் வசூல்:
1.திருமூர்த்தி செட்டியார்                                               ரூ.  5 - 0 - 0

7. கொடிங்கியம் வசூல்:

1.சாமாஜி ரா.மலையாண்டி செட்டியார்                      ரூ. 10 - 0 - 0
2.பெ.ந.ரங்கசாமி செட்டியார்                                          ரூ. 10 - 0 - 0
3.ர.மலையாண்டி செட்டியார்                                         ரூ. 10 - 0 - 0 
4.ம.கூளையப்ப செட்டியார்                                            ரூ.   5 - 0 - 0 
5.சேஷராஜு மலையாண்டி செட்டியார்                      ரூ.   5 - 0 - 0
6.ம.ஆறுமுகஞ் செட்டியார்                                            ரூ.   5 - 0 - 0
7. ஆ.மலையாண்டி செட்டியார்                                     ரூ.   5 - 0 - 0 
8. ஆ.திருமூர்த்தி செட்டியார்                                         ரூ.   5 - 0 - 0
9. ம.நாகப்ப செட்டியார்                                                    ரூ.   5 - 0 - 0
10. பூசாரி ம.மாரிமுத்து செட்டியார்                            ரூ.   5 - 0 - 0 
11. ஷை மா.ராமசாமி செட்டியார்                                ரூ.   5 - 0 - 0
12.ஷை மா.ஆண்டி செட்டியார்                                    ரூ.   5 - 0 - 0
13. பீ.ம.குப்புசாமி செட்டியார்                                         ரூ.   5 - 0 - 0
14. கா.க.திருமூர்த்தி செட்டியார்                                    ரூ.   5 - 0 - 0
                                                                                              --------------------
                                                                     ஆக                  ரூ.  85 - 0 - 0 
                                                                                             --------------------


8.செஞ்செல்லப்ப கவுண்டன் புதூர் வசூல்:
1. தி.ராமசாமி செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0 
2. தி.ரா.தம்மான் செட்டியார்                                          ரூ.   5 - 0 - 0
                                                                                             --------------------
                                                                     ஆக                 ரூ. 10 - 0 - 0
                                                                                             --------------------

9. தீபால பட்டி வசூல்: 

1.ராமச்சந்திரம் செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
2.மேலோதரி செட்டியார்                                                ரூ.   5 - 0 - 0
                                                                                              -------------------
                                                                     ஆக                  ரூ.  10 - 0 - 0  
                                                                                              -------------------    

10.குப்பம்பாளையம் வசூல்:
1.மு.ஷண்முகம் செட்டியார்                                         ரூ.   10 - 0 - 0

11. உடுக்கம்பாளையம் வசூல்:
1.சாமாஜி ச.கந்தசாமி செட்டியார்                               ரூ. 10 - 0 - 0 
2.ம.மலையாண்டி செட்டியார்                                      ரூ. 10 - 0 - 0
3. ம.திருமூர்த்தி செட்டியார்                                         ரூ. 10 - 0 - 0
4. சி.பொன்னஞ் செட்டியார்                                           ரூ. 10 - 0 - 0
5. சி.கந்தசாமி செட்டியார்                                              ரூ. 10 - 0 - 0
6. கா.மலையாண்டி செட்டியார்                                    ரூ. 10 - 0 - 0
7. சி.ராமசாமி செட்டியார்                                               ரூ. 10 - 0 - 0
8. சி.சுப்பிரமணி செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0
9. சி.திருமூர்த்தி செட்டியார்                                          ரூ.   5 - 0 - 0
10. ம.காளி செட்டியார்                                                    ரூ.   5 - 0 - 0
11.ஆ.மும்மூர்த்தி செட்டியார்                                      ரூ.   5 - 0 - 0
12. ம.மும்மூர்த்தி செட்டியார்                                       ரூ.   5 - 0 - 0
13. மு.திருமர்த்தி செட்டியார்                                        ரூ.   5 - 0 - 0
14. வா.அ.திருமூர்த்தி செட்டியார்                                ரூ.   5 - 0 - 0
                                                                                             ------------------- 
                                                                    ஆக                 ரூ. 105 - 0 - 0
                                                                                            -------------------
12. பீக்கில்பட்டி வசூல்:
1. சாமாஜி மலையாண்டி செட்டியார்                        ரூ. 10 - 0 - 0 
2. சு.ஆறுமுகஞ் செட்டியார்                                         ரூ.    5 - 0 - 0
3. நா.மாணிக்கம் செட்டியார்                                       ரூ.    5 - 0 - 0 
4. ப.சுப்பி செட்டியார்                                                     ரூ.    5 - 0 - 0
5. ப.மலையாண்டி செட்டியார்                                    ரூ.    4 - 0 - 0
                                                                                          --------------------
                                                                    ஆக              ரூ.   29 - 0 - 0
                                                                                          --------------------
13.அடிவள்ளி வசூல்:

1.சவுண்டப்ப செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0 

14.தும்பலம்பட்டி வசூல்:
1.ரா.ராஜு செட்டியார்                                                    ரூ.   5 - 0 - 0

15. நெகமம் வசூல்:
1. அ.ச.மலையாண்டி செட்டியார்                                 ரூ.   5 - 0 - 0
2.ம.ராமசாமி செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0
3. சு.ராமசாமி செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0
4.சு.ர.திருமலைசாமி செட்டியார்                                 ரூ.   5 - 0 - 0
5. சு.ரா.மலையாண்டி செட்டியார்                                ரூ.   5 - 0 - 0
                                                                                             ------------------                                         
                                                                       ஆக                ரூ. 25 - 0 - 0
                                                                                             -------------------
16. நெகமம் சந்திராபுரம் வசூல்:
1.ம.பசவஞ் செட்டியார்                                                  ரூ.   5 - 0 - 0

17. காட்டாம்பட்டி வசூல்: 

1. ம.சுப்பி செட்டியார்                                                     ரூ.   5 - 0 - 0
2.க.ரங்கசாமி செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0
                                                                                            -------------------
                                                                        ஆக             ரூ. 10 - 0 - 0
                                                                                             ------------------
18.பனவச்சேரி வசூல்:

1.ம.வீரப்ப செட்டியார்                                                    ரூ.   10 - 0 - 0
2.வீ.முனியப்ப செட்டியார்                                            ரூ.  10 - 0 - 0
3.வீ.வடிவேல் செட்டியார்                                             ரூ.  10 - 0 - 0
                                                                                             -------------------
                                                                         ஆக             ரூ.  30 - 0 - 0
                                                                                             -------------------
19. குமாரபாளையம் வசூல்:

1.சு.சி.ராமசாமி செட்டியார்                                          ரூ.   5 - 0 - 0

20. பூளவாடி வசூல்: 
1.ர.மல்லி   செட்டியார்                                                  ரூ.   5 - 0 - 0
2. மு.வெள்ளியங்கிரி செட்டியார்                               ரூ.   5 - 0 - 0
                                                                                           --------------------
                                                                          ஆக          ரூ.   10 - 0 - 0
                                                                                          --------------------
21. ஒண்டிப்புதூர் வசூல்:
1. தி.பூமாலை செட்டியார்                                          ரூ. 25 - 0 - 0
2. தாத்தப்ப செட்டியார்                                                ரூ.   5 - 0 - 0
                                                                                          -------------------
                                                                            ஆக       ரூ. 30 - 0 - 0
                                                                                          -----------------
22. வேலப்ப கவுண்டன் பாளையம் வசூல்:

1. சி.க.மல்லி செட்டியார்                                             ரூ. 10 - 0 - 0
2. பெ.க.வசவஞ் செட்டியார்                                        ரூ. 10 - 0 - 0 
3. ர.க.கருப்பஞ் செட்டியார்                                          ரூ. 10 - 0 - 0
4. ம.கருப்பஞ் செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0 
5. ர.முத்தஞ் செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0
6. வ.கருப்பஞ் செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
7. பெ.கருப்பஞ் செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0
8. மல்லி செட்டியார்                                                     ரூ.    5 - 0 - 0
9. ப.கருப்பஞ் செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0
10. ம.கருப்பஞ் செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0
11.மு.கருப்பஞ் செட்டியார்                                          ரூ.   5 - 0 - 0
                                                                                          -------------------
                                                                             ஆக      ரூ.  70 - 0 - 0
                                                                                          --------------------
23.ஆண்டிபட்டி வசூல்:
1.ஆ.கந்தசாமி செட்டியார்                                         ரூ.   5 - 0 - 0                                                      
2. வடிவேலு செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
                                                                                         --------------------
                                                                             ஆக     ரூ.   5 - 0 - 0
                                                                                        --------------------

24. வேடபட்டி வசூல்:
1.தி.கந்தசாமி செட்டியார்                                                   ரூ.   5 - 0 - 0 
2. பொன்னஞ் செட்டியார்                                                   ரூ.   5 - 0 - 0
3. திருமூர்த்தி செட்டியார்                                                  ரூ.   5 - 0 - 0
                                                                                         ---------------------
                                                                              ஆக      ரூ.   15 - 0 - 0
                                                                                         ---------------------
25. தாதனாய்க்கன்பட்டி வசூல்: 

1.ந.மலையாண்டி செட்டியார்                                            ரூ.   5 - 0 - 0 


26.பழனி வசூல்:
1.ப.பெ.காளி செட்டியார்                                                     ரூ.   5 - 0 - 0


27. நெய்க்காரப் பட்டி வசூல்: 
1.சி.ரங்கசாமி செட்டியார்                                                   ரூ.   5 - 0 - 0

28. அத்திக்கோம்பை வசூல்:
1.ரா.அருணாசலம் செட்டியார்                                            ரூ.   5 - 0 - 0

29.சின்னாளபட்டி வசூல்: 

1. செ.பெ.மலையாண்டி செட்டியார்                                   ரூ.   5 - 0 - 0
2. மா.சிக்கஞ் செட்டியார்                                                    ரூ.   5 - 0 - 0
3. ம.வெள்ளையஞ் செட்டியார்                                          ரூ.   5 - 0 - 0
4. செ.ம.சுப்பஞ் செட்டியார்                                                 ரூ.   5 - 0 - 0
5. எம்.திருமூர்த்தி செட்டியார்                                            ரூ.   5 - 0 - 0
6. கு.மும்மூர்த்தி செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0
7. க.சுப்பிரமணிய செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
8. மு.மலையாண்டி செட்டியார்                                          ரூ.   5 - 0 - 0
                                                                                        --------------------
                                                                         ஆக           ரூ.   40 - 0 - 0
                                                                                        --------------------

30.  சித்தையங்கோட்டை வசூல்: 

1.ம.ஆண்டி செட்டியார்                                                     ரூ.   5 - 0 - 0 
2.ஆ.சாமிநாதஞ் செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0
3. சா.பழனிச்சாமி செட்டியார்                                            ரூ.   5 - 0 - 0
4. ஆ.ராமச்சந்திரஞ் செட்டியார்                                         ரூ.   5 - 0 - 0
5. ரா.ஆறுமுகஞ் செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
6. ஒ.தி.மும்மூர்த்தி செட்டியார்                                         ரூ.   5 - 0 - 0
                                                                                       --------------------
                                                                         ஆக          ரூ.   30 - 0 - 0
                                                                                       ------------------
31. நரிக்கிலப்பட்டி வசூல்: 

1. தா.ரா.ராமசாமி செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0


32. சங்கம்பாளையம் வசூல்:
1. துரை ராஜு செட்டியார்                                                  ரூ.   5 - 0 - 0
2. தி.சோமசுந்தரஞ் செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0
                                                                                          ------------------
                                                                            ஆக         ரூ. 10 - 0 - 0
                                                                                           -----------------

33. சாமராயப்பட்டி வசூல் 

1. மும்மூர்த்தி செட்டியார்                                                 ரூ.   5 - 0 - 0


34. காவளப்பட்டி வசூல்:
1. ம. கிருஷ்ண செட்டியார்                                                ரூ.   4 - 0 - 0

35. ஐயம்பாளையம் வசூல் :
1. தி.தங்கவேல் செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0
2. நா.திருமூர்த்தி செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
3. தி.நாகு செட்டியார்                                                         ரூ.   5 - 0 - 0
4. சு.க.கருப்பஞ் செட்டியார்                                                ரூ.   5 - 0 - 0
5. தி. திருமூர்த்தி செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
6. தி.மும்மூர்த்தி செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
7. மலையாண்டி செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0
8. வ.ராமசாமி செட்டியார்                                                  ரூ.   5 - 0 - 0
9. வ.பழனியப்ப செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0
10. ம.திருமூர்த்தி செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
11. தி.கந்தசாமி செட்டியார்                                                 ரூ.   5 - 0 - 0
                                                                                         -------------------
                                                                 ஆக                    ரூ. 55 - 0 - 0
                                                                                         -------------------

36. பாப்பாகுளம் வசூல்:
1. தி.அப்பைய செட்டியார்                                                  ரூ.   10 - 0 - 0
2. சு.ந.திருமூர்த்தி செட்டியார்                                            ரூ.   5 - 0 - 0
3. தி.ராமசாமி செட்டியார்                                                   ரூ.   5 - 0 - 0
4. ரா.ராமலிங்க செட்டியார்                                                 ரூ.   5 - 0 - 0
5. சிக்கு பொன்னு செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0
6. ந.இராமலிங்க செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0
7. வெள்ளையஞ் செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0
8. தி.சுந்தரஞ் செட்டியார்                                                     ரூ.   5 - 0 - 0
                                                                                         -------------------
                                                                 ஆக                   ரூ.   45 - 0 - 0
                                                                                         -------------------

37. தொறையூர் வசூல்:
1. ம.மும்மூர்த்தி செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0
2. மு.லட்சும செட்டியார்                                                    ரூ.   5 - 0 - 0
3. திருமூர்த்தி செட்டியார்                                                   ரூ.   5 - 0 - 0
4. ம.ஆண்டி செட்டியார்                                                      ரூ.   5 - 0 - 0
5. ம.ராமலிங்கஞ் செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0
6. நா.மலையாண்டி செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0
                                                                                            ------------------
                                                                 ஆக                    ரூ.   30 - 0 - 0
                                                                                            ------------------
38. பழையூர் வசூல்:
1. சுப்பி செட்டியார்                                                            ரூ.   5 - 0 - 0
2. சு.மலையாண்டி செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0
3. சு.ஆறுமுகம் செட்டியார்                                                ரூ.   5 - 0 - 0
4. சு.கந்தசாமி செட்டியார்                                                   ரூ.   5 - 0 - 0
                                                                                         -------------------
                                                                  ஆக                   ரூ.  20 - 0 - 0
                                                                                         -------------------

39. அத்தனாரிபாளையம் வசூல்: 

1. பெரிய நாகு செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0
2. பெ.திருமூர்த்தி செட்டியார்                                      ரூ.   5 - 0 - 0
                                                                                        -----------------
                                                                  ஆக                ரூ. 10 - 0 - 0
                                                                                        -----------------
40. அங்கலக்குரிச்சி வசூல்:
1. மும்மூர்த்தி செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0


41. ஆத்துப் பொள்ளாச்சி வசூல்:
1. மா.லட்சும செட்டியார்                                                 ரூ. 10 - 0 - 0
2. தி.ரங்கசாமி செட்டியார்                                                ரூ. 10 - 0 - 0
3. தி.கந்தசாமி செட்டியார்                                                ரூ. 10 - 0 - 0
4. தி.சுப்பையா செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0
5. பொன்னம்மாள்                                                               ரூ.  5 - 0 - 0
                                                                                             ------------------
                                                                 ஆக                       ரூ.  40 - 0 - 0
                                                                                             ------------------
42. ஒடையகுளம் வசூல்:
1. ஒ.தி.நாகப்ப செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0
2. தி.நா.சுப்பிரமணிய செட்டியார்                                ரூ.   5 - 0 - 0                        
                                                                                        ------------------
                                                                  ஆக                 ரூ.  10 - 0 - 0
                                                                                        ------------------
43. வக்கம்பாளையம் வசூல்: 
1. மு. சுப்பிரமணியஞ் செட்டியார்                                    ரூ.   5 - 0 - 0
2. தி.நஞ்சப்ப செட்டியார்                                                   ரூ.   5 - 0 - 0
3. ந.திருமூர்த்தி செட்டியார்                                              ரூ.   5 - 0 - 0
4. ஆறுமுகஞ் செட்டியார்                                                  ரூ.   5 - 0 - 0
5. ஆ.கந்தசாமி செட்டியார்                                                ரூ.   5 - 0 - 0
6. ம.நாகப்ப செட்டியார்                                                     ரூ.   5 - 0 - 0
7. பூ.ம. பெருமாள் செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0
                                                                                               -------------------
                                                                  ஆக                      ரூ.  35 - 0 - 0
                                                                                               -------------------
44. கொள்ளுப்பாளையம் வசூல் : 
1. பெ.கந்தசாமி செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0                                             

45. வேட்டைக்காரன்புதூர் வசூல்:
1. வி.டி.மலையப்ப செட்டியார்                                          ரூ.   5 - 0 - 0

46. கோட்டூர் மலையாண்டிபட்டணம் வசூல்:
1. நா.பெருமாள் செட்டியார்                                                ரூ.   10 - 0 - 0
2. நா.பெ.ராமச்சந்திரஞ் செட்டியார்                                    ரூ.   10 - 0 - 0
                                                                                              -------------------
                                                                   ஆக                        ரூ.  20 - 0 - 0
                                                                                                -------------------
47. ராமபட்டணம் வசூல்:
1. க.தி.மலையாண்டி செட்டியார்                                      ரூ.   5 - 0 - 0                                        
2. க.தி.சுப்பு செட்டியார்                                                       ரூ.   5 - 0 - 0
3. ரா. மலையாண்டி சாமி (மைனர்)                                 ரூ.   2 - 8 - 0
                                                                                               -------------------
                                                                       ஆக                  ரூ.   12 - 8 - 0
                                                                                               -------------------
48. தேவிப்பட்டணம் வசூல்:
1. ராமசாமி செட்டியார்                                                       ரூ.   5 - 0 - 0

49. காளியாபுரம் வசூல்: 

1. வெங்கிட்டராம செட்டியார்                                           ரூ.   5 - 0 - 0

50. ராமணமுதலி புதூர் வசூல்: 

1. திருமூர்த்தி செட்டியார்                                                 ரூ.   5 - 0 - 0

51. பொன்னே கவுண்டனூர் புதூர்  வசூல்: 
1. கு.மும்மூர்த்தி செட்டியார்                                             ரூ.   5 - 0 - 0

52. பொள்ளாச்சி வசூல்:
1. பு.நா.ராமசாமி செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0
2. தி.ஆறுமுகஞ் செட்டியார்                                               ரூ.   5 - 0 - 0
                                                                                                ------------------
                                                                        ஆக                 ரூ.  10 - 0 - 0
                                                                                                ------------------
செலவு விபரம் 

பார்த்திப ளு பங்குனி மீ 26 உ கூட்டத்தன்று செலவு       ரூ.   8 - 12 - 0
வரி வசூல் விளம்பரம் 250 அச்சடிக்க                                   ரூ.    5 - 0 - 0
வரி வசூல் செய்ய போக்குவரவு செலவு                             ரூ.  62 - 0 - 0 
சர்வசித்து வைகாசி 18 உ கூட்டம் கூட்ட அழைப்பிதழ் 
                                     அச்சடிக்கவும் தபால் செலவும்         ரூ.    8 - 0 - 0                
ஷை கூட்டத்தன்று செலவு                                                    ரூ.  22- 13 - 0
கோயில் ரிப்பேர் செலவு                                                          ரூ.    8 - 4 - 0
ரிக்கார்டு புத்தகம் வைக்க  நோட்டு 1 க்கு                            ரூ.   0 - 15 - 0
 வைகாசி 18 உ கூட்டத்திற்கு பின்பு வரி 
                             வசூலுக்குப் போனதில் செலவு                  ரூ.   8 - 0 - 0
இந்த ரிக்கார்டு புத்தகம் அச்சடிக்க செலவு                         ரூ.  55 - 0 - 0
                                                                                                    -------------------
                                                ஆக மொத்தச் செலவு            ரூ. 178 - 12 -0
                                                                                                    --------------------


முன் பக்கங்களில் கண்டபடி மொத்த வரி வசூல்       ரூ. 1363 - 8 - 0
பார்த்திப ளு சிவராத்திரி வசூலில் செலவு 
                                                        போக இருப்பு                ரூ.    83 - 12 -0
வட்டி வகையில் வரவு                                                       ரூ.      1 - 4 - 0
                                                                                               ---------------------
                         ஆக மொத்த வரவு                                    ரூ.  1448 - 8 - 0
                                                                                               ----------------------

முன் பக்கத்தில் கண்டபடி வரவு                                  ரூ.  1448 - 8 - 0
முன் பக்கத்தில் மொத்தச் செலவு                                ரூ.    178 - 12 - 0 
                                                                                           ----------------------
நாளது தேதியில் செலவு நீக்கி இருப்பு                      ரூ.  1269 -12 - 0
                                                                                           ----------------------

சர்வசித்து ளு வைகாசி மீ 18 உ 
                    என்.ஆர்.சிக்கண்ண செட்டியார்
                                அவர்கள் வசம் ஒப்புவித்தது              ரூ. 1253 - 12 - 0 
பின் வசூலில் செலவு போக ஷையார் வசம் வரவு      ரூ.    16 - 12 - 0 
                                                                                               
ஆகவே நாளது தேதியில் ஷை 
                   என்.ஆர்.சிக்கண்ண   செட்டியார்                       ------------------------
                         அவர்கள் வசம் மொத்த இருப்பு                ரூ. 1269 - 12 - 0
                                                                                                  ------------------------



உடுமலைப்பேட்டை                                                                                                        ஒப்பம் 

6-8-1947                                                                                                          என்.ஆர்.சிக்கண்ண செட்டியார்
                                                                                                                                செட்டுமைக்காரர் 

நன்றி திரு சரவணன் , ஆசிரியர் சவுடம்பிகா மாத இதழ் 
அருப்புகோட்டை 


பகுதி எட்டு : வேங்கையின் தனிமை[ 2 ]

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை[ 2 ]
கிருஷ்ண துவைபாயன வியாசர் வந்து அரண்மனையில் தங்கியிருந்த நாட்களில் பீஷ்மர் அரண்மனைக்கு அருகிலேயே செல்லவில்லை. அப்போது அவர் அஸ்தினபுரிக்கு அருகே இருந்த குறுங்காட்டில் தன் மாணவர்களுடன் தங்கியிருந்தார். அவருக்கு ஒற்றர்கள் தகவல்களை அளித்துக்கொண்டே இருந்தனர். மூன்றாம்நாள் சிவை கண்விழித்துப் பார்த்தபோது மஞ்சத்தில் வியாசர் இல்லை என்று கண்டு அதை பேரரசியிடம் சென்று சொன்னாள். அவர்கள் வியாசரை மூன்றுநாட்கள் தேடினார்கள். அவர் நகர்நீங்கிச்சென்றதைக் கண்டதாக எல்லைப்புற ஒற்றன் ஒருவன் வந்து சொன்னதும் தேடுவதை விட்டுவிட்டார்கள்.
பீஷ்மர் சூதரிடம் வியாசர் பேரரசியிடம் சொன்னதென்ன என்று கேட்டுவரச்சொன்னார். வியாசர் அம்பிகை கண்களை மூடிவிட்டதாகவும் அம்பாலிகை வெளுத்துவிட்டதாகவும் சொன்னதாக சூதர் சொன்னார். பீஷ்மர் நிம்மதியிழந்து தலையை அசைத்தார். மூன்றாவதாக சிவை என்ற சூதர்குலப்பெண் வியாசருடன் இருந்ததாகவும் அவள் மட்டுமே நிலவை நோக்கியதாகவும் வியாசர் சொன்னதைக் கேட்டபோது அவர் தாடியை நீவும் கரத்தை நிறுத்தி “அவள் யார்?” என்றார். “அவள் லோமஹர்ஷன் வழிவந்த சுபைக்கும் லோமசர் வழிந்த வந்த பீதருக்கும் பிறந்தவள்” என்றதும் புன்னகை புரிந்தார்.
அரசிகள் கருவுற்றசெய்தி அவருக்கு பிரியதர்சினியின் கரையில்தான் வந்து சேர்ந்தது. மருத்துவர்களையும் சூதர்களையும் வரவழைத்து அன்னையர் நலனை விசாரித்தார். அரசமருத்துவச்சியான ரோகிதை மூன்றுபேரின் கருவும் மூன்று வகை என்றாள். அம்பிகையின் கரு கரினிகர்ப்பம் என்றாள். ‘யானைமதத்தின் வாசனை அவளில் இருந்து எழுகிறது. வயிறு மிகவும் பெருத்து இடப்பக்கமாகச் சரிந்து இருக்கிறது. விலாவில் அணில்கோடுகள் போல சருமத்தில் வரிகள் உள்ளன. வயிற்றின் எடை தாங்கமுடியாமல் அவள் இருகைகளையும் ஊன்றி எழுகிறாள். அவள் குதிகால்களில் நரம்புகள் புடைத்திருக்கின்றன. கால்களில் வீக்கமும் மூட்டில் வலியும் இருக்கிறது. அவள் வாயில் அமிலவாசனை வீசுகிறது.
‘அவளுடைய முலைக்கண்கள் ஊமத்தைப்பூவின் குவளை போல மிகப்பெரிதாகி நீண்டிருக்கின்றன. இருமுலைகளும் பெருத்து அவற்றில் இடமுலை மிகப்பெரிதாகி விலகியிருக்கிறது. அவள் கண்கள் மஞ்சளோடி முகம் வெளுத்திருக்கிறது. கழுத்து கருமைகொண்டு உதடுகள் கனத்திருக்கின்றன. கன்னங்களிலும் உதடுகளுக்குக் கீழும் கரும்புள்ளிகள் உள்ளன. இமைகள் வீங்கி கண்களுக்குக் கீழே நிழல் விழுந்திருக்கிறது. முன்நெற்றி மயிர் உதிர்ந்துகொண்டிருக்கிறது. அவள் கனவுகளில் யானைகள் வந்துகொண்டிருக்கின்றன. மகாபலசாலியான ஆண்குழந்தையை அவள் பெறப்போவது உறுதி.’
இரண்டாம் அரசி மிருகிகர்ப்பம் கொண்டிருக்கிறாள் என்றாள் ரோகிதை. அவள் உடலில் இருந்து கஸ்தூரி வாசனை வீசுகிறது. அவள் கலைமானைப்போல எப்போதும் திடுக்கிடும்தன்மையும், அடிக்கடி மயிர்கூச்செறிதலும் கொண்டிருக்கிறாள். அவள் வயிறு மிதமாகப் பருத்து வலப்பக்கமாக சரிந்திருக்கிறது. வலக்கையை ஊன்றி எழுகிறாள். வயிற்றருகே விலாவில் வெள்ளரிக்காயின் கோடுகள் போல வரிகள் விழுந்திருக்கின்றன. அவள் கால்கள் ஆம்பல்கள் போல குளிர்ந்திருக்கின்றன. அவள் வாய்க்குள் பசுந்தழைவாசனை வீசுகிறது.
அம்பாலிகையின் வலதுமுலை பெரிதாகிச் சரிந்திருக்கிறது. காம்புகள் நீலோத்பலத்தின் புல்லிவட்டம்போல நீண்டிருக்கின்றன. கண்கள் வெளுத்து இமைகள் சற்று வீங்கியிருக்கின்றன. அவள் இரு காதுகளுக்குமேலும் தலைமயிர் உதிர்கிறது. அவள் மணிக்கட்டில் நீலநரம்புகள் தெரிகின்றன. அவள் மான்களையும் வெள்ளைநாரைகளையும் கனவுகாண்கிறாள். மென்மையான இயல்புகொண்ட அரசகுமாரனை அவள் பெறுவாள்.
சூதர்குலத்து அரசி அகிகர்ப்பம் கொண்டிருக்கிறாள். அவளிடம் பசும்பாலின் வாசனை எழுகிறது. அவள் பசுவைப்போல அமைதிகொண்டவளாகவும் நீரோடிய நீலவிழிகளில் கனவுகள் நிறைந்தவளாகவும் இருக்கிறாள். அவள் வயிறு சற்றே பெருத்து முன்னால் சரிந்திருக்கிறது. விலாவில் புதுமழைக்குப்பின் மணல்தீற்றல் போல கோடுகள் தெரிகின்றன.முன்பக்கம் கையூன்றி எழுகிறாள். அவள் கைகளும் கால்களும் வேள்வி நடந்த நான்காம்நாள் வேள்விகுண்டத்துச் செங்கல் போல இளவெம்மை கொண்டிருக்கின்றன அவள் வாயில் புனுகின் வாசனை எழுகிறது.
சிவையின் இருமுலைகளும் சமமாகச் சரிந்துள்ளன. முலைக்கண்கள் நீலச்செண்பகம் போல நீண்டிருக்கின்றன. பசுவைப்போல எப்போதும் ஒலிகளுக்குச் செவிகூர்ந்தபடி, சென்ற நினைவுகளை அசைபோட்டபடி படுத்திருக்கிறாள். கண்கள் செவ்வரியோடியிருக்கின்றன. அவள் உச்சிவகிட்டில் மயிர் உதிர்கிறது. மேலுதடு தடித்திருக்கிறது. அவள் சிவந்த தாமரைமலர்களைக் கனவுகாண்கிறாள். ஞானமுள்ள மைந்தனை அவள் பெறுவாள்.’
ரோகிதை பரிசில் பெற்றுச்சென்றதும் பீஷ்மர் நிமித்திகர்களை அழைத்து அரசியர் மூவரின் கருநிமித்தங்களை கணித்து சொல்லச்சொன்னார். அம்பிகையின் பெயரைச்சொல்லி ஒருகல்மேல் இன்னொரு கல்லை வைத்தான் கவபாலன் என்ற நிமித்திகன். அது தெற்குநோக்கி விழுந்தது. தெற்கே ஒரு அன்னப்பறவை அடிவானில் பறந்துசென்றதைக் கண்டு கண்களைமூடினான். யமதிசையில் பறவை என தனக்குள் சொல்லிக்கொண்டான். அவன் உடல் மெல்ல நடுங்கத் தொடங்கியது. கைகள் வீணைத்தந்திகள்போல அதிர்ந்தன. உதடு இழுபட்டு கழுத்துத்தசைகள் சுருங்கி விரிந்தன. பின்பு அவன் சொல்ல ஆரம்பித்தான்.
‘பீஷ்மரே, குலத்தாதையே வணக்கம். இக்கதையைக் கேட்டு உய்த்துணர்வீராக! விண்ணில் கந்தர்வ உலகில் முன்பு வாழ்ந்த திருதராஷ்டிரன் என்னும் பெயர்கொண்ட ஒரு மன்னன் வில்வித்தையில் வல்லவன் என்று புகழ்பெற்றிருந்தான். அவனுடைய கண்பார்வையை கந்தர்வர்களும் யட்சர்களும் தேவர்களும் புகழ்ந்தனர். அவனுடைய துணைவியான திருதி அவன் வில்திறன்மேல் பெரும் காதல் கொண்டிருந்தாள்.
ஒருநாள் அவன் தன் மனைவியுடன் சித்ரதீர்த்தம் என்னும் குளக்கரையில் இளவெயிலும் இளங்காற்றும் முயங்குவதைக் கண்டு நின்றிருக்கையில் தன்னுடைய நூறு குஞ்சுகளுடன் ஓர் அன்னப்பறவை நீரில் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டான். திருதி காமத்தின் சொல் விளையாட்டுக்காக அவன் வில்வித்தையை பழித்துப்பேசி சிரித்தாள். திருதியிடம் தன் வில்திறனைக் காட்டவிரும்பிய திருதராஷ்டிரன் நீரில் அலையும் அன்னத்தின் பிம்பத்தை நோக்கிக் குறிபார்த்து நீள் கழுத்தைத்திருப்பி நூறு குஞ்சுகளையும் மாறி மாறி நோக்கி பேசிக்கொண்டிருந்த அதன் கண்களை மெல்லிய ஊசி போன்ற அம்பால் அடித்தான். அம்பு இடக்கண்ணில் புகுந்து வலக்கண் வழியாக வெளியேறியது.
அந்த அன்னம் ஒரு கின்னரப்பெண். அது உண்மையில் கின்னர உலகத்து நீரில்தான் நீந்திக்கொண்டிருந்தது. கந்தர்வன் தடாகத்தின் மேலே பறவை என்று பார்த்தது அதன் நிழல். நீருக்குள் இருந்த நிழல்கள்தான் உண்மையில் அன்னமும் குஞ்சுகளும். அம்புபட்டு நிழல் கலைந்ததைக் கண்ட அன்னமும் குஞ்சுகளும் ஆழத்தில் மறைய மேலே அவற்றின் நிழல்கள் மட்டும் விழியிழந்த அன்னையும் அவளைச்சுற்றி பதறிக்கூவிய குஞ்சுகளுமாக அலைமோதி மிதந்துகொண்டிருந்தன.
அன்று தன் துணைவியுடன் கந்தர்வ உலகுக்குச் சென்ற திருதராஷ்டிரனுடன் அவன் நிழல் இல்லை என்பதை திருதி கண்டுசொன்னாள். அவன் திரும்பி அந்தத் தடாகத்தின் கரைக்கு வந்தான். அங்கே நீர்வெளியில் கருநிழல் ஒன்றை வெண்நிழல்கள் துரத்தித்துரத்திக் கொத்துவதைக் கண்டான். திகைத்து நின்ற அவன் கதறி ஓடிச்சென்று தன் குலகுருவான சுக்ரரிடம் என்ன செய்வதென்று கேட்டான். மண்ணில் பிறந்து உன் கடன் தீர்த்து மீள்வதுவரை உன் நிழல் இங்கே வதைபட்டுக்கொண்டுதான் இருக்கும் என்று அவர் சொன்னார்.
கதை சொல்லிமுடித்தபின் கவபாலன் தளர்ந்து விழுந்தான். பீஷ்மர் தன் தலையை வருடியபடி சொற்கள் வெளிப்படாமல் அமர்ந்திருந்தார். கவபாலன் எழுந்து நீர் அருந்தியதும் பீஷ்மர் “இரண்டாவது நிமித்தத்தைச் சொல்” என்றார். நிமித்திகன் வைத்த கல் இம்முறை மேற்கு நோக்கி விழுந்தது. அவன் கண் தூக்கி நோக்கியபோது மாலைநேரத்தின் மங்கிய ஒளியில் கீற்றுநிலா செம்பட்டில் விழுந்த சங்குவளைக்கீற்று போலத் தெரிந்தது.
மயல் எழுந்த நிமித்திகன் சொல்லலானான் பீஷ்மபிதாமகரே, முன்னொரு காலத்தில் இந்திராவதி என்னும் ஆற்றின் கரையில் கௌரன் என்னும் சாதகப் பறவை தன் துணையுடன் வாழ்ந்து வந்தது. மழைநீரை வானிலிருந்து அருந்தும் சாதகப்பறவை பிற உயிர்கள் அறியாத ஆற்றிடைக்குறைக்குச் சென்று அங்குள்ள மரப்பொந்தில் முட்டையிடும் வழக்கம் கொண்டது. தந்தை அமைக்கும் மரப்பொந்துக்குள் சென்று அமரும் தாய்ப்பறவை உள்ளே முட்டையிட்டு இறகுகளால் பொத்தி அடைகாக்கும். ஆண்பறவை பறந்துசென்று இரைதேடிக்கொண்டுவந்து தன் துணைக்கு உணவூட்டும்.
காட்டெருதின் கொம்புகளைப் பிணைத்ததுபோல் அலகுள்ள சாதகப்பறவையான கௌரன் தன் துணைவி சுப்ரை ஐந்து முட்டைகளுடன் மரப்பொந்துக்குள் முட்டைமீதமர்ந்து தவம் செய்யத்தொடங்கியதும் அதை உள்ளே வைத்து தன் உடற்பசையால் மூடியது. பின்பு காட்டுக்குள் சென்று உணவுகொண்டு வந்தது. நாற்பத்தொருநாட்கள் அவ்வாறு கௌரன் தன் மனைவிக்கு ஊட்டியது. ஒருநாளில் நூறுமுறை அது உணவுடன் வந்தது. கிடைக்கும் உணவில் ஏழில் ஒருபங்கை மட்டுமே அது உண்டது. மெலிந்து சிறகுகளை வீசும் வல்லமையை இழந்தபோதிலும் கௌரன் சோர்வுறவில்லை.
ஒருநாள் வானில் உணவுதேடிச்சென்ற கௌரன் சிறகு ஓய்ந்து ஒரு மரத்தில் அமர்ந்திருக்கையில் ஒரு வேடன் அதை அம்பெய்து வீழ்த்தினான். இறகுகள் முழுக்க உதிர்ந்து கருக்குழந்தைபோல ஆன சுப்ரை சிறகுகள் முளைக்காமல் புழுக்கள் போல நெளிந்த சிறு குஞ்சுகளுடன் மரப்பொந்தில் காத்திருந்தது. ஐந்து குஞ்சுகளும் தீராப்பெரும்பசியுடன் அன்னையை முட்டி உணவுக்காகக் குரலெழுப்பின. இரண்டுநாள் காத்திருந்தபின் சுப்ரை என்ன நடந்திருக்குமென புரிந்துகொண்டது.
VENMURASU_EPI_40__ copy
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சுப்ரை தன் குஞ்சுகளிடம் சொன்னது, ‘குழந்தைகளே, இந்த ஆற்றிடைக்குறையில் இருந்து நாம் தப்ப ஒரேவழிதான் உள்ளது. நீங்கள் என்னை உண்ணுங்கள். முதலில் என் குருதியைக் குடியுங்கள். பின்பு என் கால்களை உண்ணுங்கள். அதன்பின் என் கைகளை. என் இதயத்தை கடைசியாக உண்ணுங்கள். உங்கள் சிறகுகள் வளர்ந்ததும் பறந்துசெல்லுங்கள். என்னை நீங்கள் சிறிதும் மிச்சம் வைக்கலாகாது.’
அன்னையின் ஆணைப்படி ஐந்து குஞ்சுகளும் அதனை உண்டன. அதன் குருதியை அவை குடித்து முடித்ததும் சுப்ரை வெளுத்து வெண்ணைபோல ஆகியது.  அவை அதன் கால்களையும் கைகளையும் உண்டன. கடைசியாக மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த இதயத்தை உண்டன. அன்னையை சற்றும் மிச்சமில்லாமல் உண்டு முடித்த அவை புதியசிறகுகளுடன் வானில் எழுந்து பறந்து சென்றன. அந்த ஐந்து குஞ்சுகளில் ஒன்றுக்கு மட்டும் அன்னையின் கடைசி ஆணை நினைவில் இருந்தது. அது திரும்பி வந்தது. அந்தப்பொந்தில் அன்னையின் வாசனை எஞ்சியிருப்பதை அதுமட்டும்தான் அறிந்தது. அதை எப்போதும் போக்கமுடியாதென்பதை புரிந்துகொண்டது.
தேவருலகு நோக்கி ஒளிமிக்கச் சிறகுகளுடன் பறந்துகொண்டிருந்த சுப்ரையை மூதாதையரின் உலகில் கௌரன் சந்தித்தது. ‘நான் உன் துணைவன்.. என் சிறகுகள் ஏன் ஒளிபெறவில்லை?’ என்று கேட்டது. ‘நான் மண்ணில் தாய்மையின் பேரின்பத்தை அடைந்து முழுமைகொண்டேன். என் பிறவிக்கண்ணி அறுந்தது’ என்றது சுப்ரை. ‘ஆம், நான் என் இச்சை அறாமல் இறந்தேன்’ என்றது கௌரன். ‘நீ மண்ணில் மீண்டும் பிறந்து நான் பெற்ற முழுமையைப் பெறுவாய்’ என சுப்ரை கெளரனை வாழ்த்தி விண் ஏகியது.’
பீஷ்மர் நிம்மதியிழந்து எழுந்து சென்று விட்டார். நிமித்திகன் அங்கேயே இருந்தான். நெடுநேரம் கழித்து ஹரிசேனன் சென்று நிமித்திகனை அனுப்பிவிடலாமா என்று பீஷ்மரிடம் கேட்டான். பீஷ்மர் திரும்பிவந்து மூன்றாவது கருவின் நிமித்ததைச் சொல்லும்படி சொன்னார்.  இம்முறை கல் தென்மேற்காக விழுந்தது. கன்னித்திசையில் நிமித்திகன் கண்டது சாலமரமொன்றில் அடைகாத்துக்கொண்டிருந்த ஒரு காகத்தை. மயலில் அவன் மூன்றாவது கதையைச் சொன்னான்.
அந்தக்கதை புராணசம்ஹிதையில் உள்ளது என பீஷ்மர் அறிந்திருந்தார். மாண்டவ்யர் என்னும் முனிவர் கங்கையின் கரையில் ஒரு தவக்குடிலமைத்து தனித்துத் தங்கியிருந்தார். பேசாநோன்புகொண்டவர் அவர். அவரது தவக்குடில் கங்கைக்கரைக்காட்டுக்குள் இருந்தமையால் ஒருநாள் கொள்ளைப்பொருளுடன் தப்பிவந்த கொள்ளையர் சிலர் மழைக்காக அங்கே ஒதுங்கினர். பேசாநோன்புகொண்டிருந்த முனிவரைக் கண்டதும் அதையே தங்கள் இடமாகக் கொண்டனர். அங்கேயே தங்கள் பொருட்களை எல்லாம் புதைத்துவைக்கத் தொடங்கினர்.
ஒற்றர்கள் வழியாக கொள்ளையரின் இருப்பிடத்தை அறிந்த அரசனின் படைகள் வந்து அப்பகுதியைச் சூழ்ந்துகொண்டன. தவக்குடிலுக்குள் இருந்த மாண்டவ்யரிடம் படைத்தலைவன் “முனிவரே, இங்கே வந்த கொள்ளையர் எங்கே? அவர்களை நீர் அறிவீரா?” என்று கேட்டான். மாண்டவ்யர் ஒன்றும் பேசாமல் தன்னுள் தான் அடங்கி அமர்ந்திருந்தார். படைகள் அந்த குடிலை நன்கு தேடியபோது கொள்ளையர்களையும் கொள்ளையர் புதைத்த நிதியையும் கண்டுபிடித்தனர். மாண்டவ்யரையும் கொள்ளையர் என்று நினைத்த படைத்தலைவன் அவரையும் அந்தக் கொள்ளையருடன் சேர்த்து சூலங்களில் கழுவேற்றினான்.
உயிர்விட மனமில்லாதிருந்த மாண்டவ்யர் அந்த சூலத்திலேயே கடும் வலியுடன் வாழ்ந்தார். அவரது வலியை அறிந்த விண்ணில் வாழும் முனிவர்கள் பறவைக்கூட்டங்களாக வந்து அவரைச்சூழ்ந்து பேரொலி எழுப்பினர். காட்டில் பறவைகளின் வழக்கமில்லா ஒலி எழுவதைக் கேட்ட வேடர்கள் சென்று அரசனிடம் சொன்னார்கள். அரசன் வந்து பார்த்தபோது நாற்பத்தொரு நாட்களாகியும் மாண்டவ்யர் இறக்காமலிருப்பதைக் கண்டான். அவரை கீழே இறக்கியதும் அவர் இறந்தார். அவர் ஒரு முனிவரென அறிந்த அவன் அவருக்கு முறைப்படி நீத்தார்சடங்குகள் செய்தான்.
அதன் விளைவாக இறப்புலகை அடைந்த அவர் அங்கே இறப்புக்கரசனும் அறமுதல்வனுமாகிய யமனிடம் “கழுவில் ஏற்றும்படி நான் செய்த பிழை என்ன?” என்று கேட்டார். “இளவயதில் நீர் ஒரு தட்டாரப்பூச்சியின் வாலில் முள்ளைச்செலுத்தி விளையாடினீர்” என்றான் யமன். “அது என் சிறுவயதில் செய்த பிழை. அதற்கு இவ்வளவுபெரிய தண்டனை அறமீறலேயாகும்” என்றார் மாண்டவ்யர். “என் நெறி அதுவே” என தருமன் வாதிட்டான்.
மாண்டவ்யர் அங்கேயே நின்று தவம்செய்தார். தன் அறத்தால் முக்கண்முதல்வனை அங்கே வரவழைத்தார். அவனிடம் நீதி சொல்லும்படி கேட்டார். சிவன் “ஆம், நீர் சொன்னதே மெய். நெறிகளை அறியாத பருவத்தில் செய்யும் பிழைகள் பாவங்களாகா” என்று உரைத்து மறைந்தான். “இன்று முதல் மண்ணுக்கும் விண்ணுக்கும் நான் புதுநெறியை வகுக்கிறேன்” என்றார் மாண்டவ்யர். பதினான்கு வயதுவரை குழந்தைகள் செய்யும் எச்செயலும் பாவமல்ல. அவை பெரியவர்களின் பிழைகளேயாகும்” என்றார். தருமனின் அரண்மனையின் நீதிமணி அதை ஏற்று மும்முறை முழங்கியது. “நான் செய்யாப்பிழைக்கு நீ என்னை தண்டித்தாய். நீ மண்ணில் பிறந்து இக்கடனைக் கழிப்பாய்!” என்றார் மாண்டவ்யர்.
நிதிபெற்று நிமித்திகன் மீண்டபின் பீஷ்மர் இரண்டுநாட்கள் தனக்குள் ஆழ்ந்திருந்தார். தன் எண்ணங்களை சுவடிகளில் குறித்து அவற்றை மூன்று மூங்கில் குழல்களில் அடைத்து சத்யவதிக்கு கொடுத்தனுப்பினார். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அவற்றை உடைத்துப் பார்க்கும்படி குறிப்பு எழுதியிருந்தார். சத்யவதி அந்த மூங்கில் குழாய்களை தன் அறையிலேயே வைத்திருந்தாள். ஒவ்வொருநாளும் அவற்றைப்பார்த்து அவள் நிம்மதியிழந்தாள்.
முதல்குழந்தை இருள்நிலவு நாளில் பின்னிரவில் பிறந்தது. பன்றியைக் கவ்வி விழுங்கமுடியாமல் நெளிந்து இறக்கும் மலைப்பாம்பு போல நான்குநாட்கள் அன்னையை கதறித்துடிக்கச்செய்தது அது. எட்டுமருத்துவச்சிகள் கருவறை வாயிலை படிகக்கத்தியால் கிழித்து சுளைபிளந்து விதை எடுப்பதுபோல வெளியே எடுத்தனர். யானைக்குட்டிபோல கரியபேருடல் கொண்டிருந்த அக்குழந்தை விழியற்றதாக இருந்தது. முடியற்ற அதன் தலை பெரிய பாறாங்கல் போல தாதியின் கையில் கனத்தது. மருத்துவச்சியின் கை அதனருகே வந்ததும் அள்ளி இறுகப்பற்றிக்கொண்டு வாய்க்குள் கொண்டுசென்றது. அன்னைமுலை அளிக்கப்பட்டதும் பாம்பை விழுங்கும் பாம்புபோல முலைக்காம்பைக் கவ்வி உண்ணத் தொடங்கியது. அன்னையின் முழுக்குருதியையும் உண்டுவிடும் என்று சேடியர் நினைத்தனர்.
இரண்டாவது குழந்தை வளர்பிறை மூன்றாம் நாள் பிறந்தது. அன்னைக்கு வலியே எடுக்கவில்லை. உதிரமிழந்து வெளுத்திருந்த அவள் அரைத்துயிலில் இருக்கையில் திடீரென எழுமூச்சுவிட்டாள். சேடியர் குருதிமணம் அறிந்து ஓடிவருகையில் குழந்தை வெளிவரத்தொடங்கியிருப்பதைக் கண்டனர். மந்தாரமொட்டு போன்று வெளுத்துச் சிறுத்திருந்த குழந்தை உயிரற்றிருப்பதாகப் பட்டது. அதன் தலைமயிரும் வெண்ணிற நுரைபோன்றிருந்தது. சிறிய வாயைத்திறந்து பூனைக்குட்டி போல மென்குரலில் அழுததுமே அதன் மூச்சு ஒழுகிச்சென்று மெல்ல கையை மட்டும் அசைத்தது. தாதி அதைத்தூக்கியபோது அது மெல்ல முகம் சுளித்து அதிர்ந்தது. அன்னைமுலைக்காம்பை அதனருகே வைத்தபோது அது இருமுறை சப்பிவிட்டு அப்படியே தூங்கிவிட்டது.
மூன்றாம் குழந்தை முழுநிலவுநாளில் பிறந்தது. அன்னை வலிவந்ததும் அவளே வந்து பேற்றிச்சியை அழைத்துக்கொண்டு ஈற்றறைக்குச் சென்றாள். ஒருநாழிகைக்குள் மூடியதாமரை மலரில் இருந்து வண்டு எழுவதுபோல அன்னையில் இருந்து கரியநிறமான குழந்தை வெளியே வந்தது. அதன் அழுகை மயில்குஞ்சின் அகவல்போல ஒலித்தது. அழகிய மலர்க்கைகளும் மாம்பூ போன்ற நகங்களும் கொண்டிருந்தது அது. அன்னையின் அருகே படுக்கச்செய்ததும் முலைக்காம்பைக் கவ்வி உண்ண தொடங்கியது. நீலத்தாமரையின் புல்லிபோலிருந்த அதன் கூந்தலை அன்னை குனிந்து மெல்ல முத்தமிட்டாள்.
மூன்று குழந்தைகளுக்கும் தந்தையின் இடத்தில் இருந்து சத்யவதியே ஜாதகர்மங்களைச் செய்தாள். பிறப்புச்சடங்குகளின் முதலாவதான வாக்மந்திரம் தொப்புள்கொடியை அறுப்பதற்கு முன்பு செய்யப்பட்டிருக்கவேண்டும். முதல்குழந்தை பிறக்கவிருக்கையில் சத்யவதி முதல்குழாயைத் திறந்து பார்த்தாள். முதல்குழந்தை நாடாளும் மன்னன் என்பதனால் அதை திருதராஷ்டிரன் என்று அழைப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். குழந்தையின் உரத்த அழுகுரல் கேட்டதும் அவள் உள்ளே சென்று பார்த்தபோது முதல்பார்வையிலேயே திடுக்கிட்டுப் பின்னகர்ந்தாள். குழந்தை பெரிய கருங்கல்சிலை போலிருந்தது. கண்களுக்குப்பதில் இரு சதைக்குழிகள் இருந்தன. அவை சேற்றுக்குமிழிகள் போல ததும்பி அசைந்தன.
தொப்புள்கொடியை அறுப்பதற்குள் முதல்மொழிச் சடங்கை செய்தாகவேண்டும் என்று மருத்துவச்சி சொன்னாள். சத்யவதி கண்களில் கண்ணீருடன் முன்னால் சென்று குழந்தையின் காதில் ‘வாக்! வாக்! வாக்!’ என சொல்லிறைவியை அனுப்பினாள். பொன்னையும் தேனையும் அஸ்தினபுரியின் கன்னிமூலையில் எடுத்த மண்ணின் ஒரு துளியையும் கலந்த நீரைத் தொட்டு குழந்தையின் நாவில் வைத்தாள். நாக்கில் மையம்கொண்டிருந்த குழந்தையின் உயிர் எழுந்து வந்து அந்த பொற்கரண்டியை கவ்விக்கொண்டது. அதை அப்படியே விட்டுவிட்டு சத்யவதி திரும்பி ஓடினாள்.
இரண்டாவது குழந்தை பால்நிறமாக இருக்கும் என்றும் ஆகவே அதற்கு பாண்டு என்று பெயரிடுவதாகவும் சொல்லியிருந்தார். சுவடியை வாசித்ததுமே சுருட்டி கையில் இறுகப்பற்றியபடி பற்கள் கிட்டித்தவளாக சத்யவதி நின்றிருந்தாள். அழுகுரல் கேட்கவில்லை. ஆனால் மருத்துவச்சி வெளியே வந்து குழந்தை பிறந்திருப்பதைச் சொன்னாள். குழந்தையை குனிந்து நோக்கிய சத்யவதி சிறிய ஆறுதலைத்தான் அடைந்தாள். சடங்குகளை உணர்ச்சியில்லாமல் செய்துவிட்டு திரும்பிச்சென்றாள்.
மூன்றாவது குழந்தை நீர்த்துளியென நிலையற்றிருப்பான் என்பதனால் விதுரன் என்று பெயரிட்டிருந்தார். துடிப்புடன் கைகால்களை வீசியபடி வாய்திறந்து அழுத விதுரனின் காதில் ‘சொல், சொல், சொல்’ என அவள் சொன்னபோது அவன் கைகால்களை அசையாமலாக்கி அதைக்கேட்டதைக் கண்டு அவள் வியந்தாள். அவன் நாவில் முதல் இனிமையைத் தொட்டு வைத்தபோது சிறிய நாக்கு தெரிய பறவைக்குஞ்சுபோல வாயைத்திறந்து சப்பினான். ஊக்கமற்ற மனநிலையில் இருந்த சத்யவதி அக்கணமே மலர்ந்து குழந்தையின் தலையிலும் நெளிந்த மென்பாதங்களிலும் முத்தமிட்டாள்.
தன் குடிலில் பீஷ்மர் அமர்ந்திருக்கையில் ஹரிசேனன் வந்து விதுரன் பிறந்த செய்தியைச் சொன்னான். அவன் முகம் பொலிவுபெற்றிருந்தது. முதலிரு குழந்தைகளும் நலமானவையாக இல்லை என்பது அஸ்தினபுரியைப் போலவே பீஷ்மரின் குடிலில் இருந்தவர்களையும் சோர்வுறச் செய்திருந்தது. “மூன்றாம் குழந்தை ஒளியுடன் இருக்கிறது என்றனர் ஆசிரியரே” என்றான் ஹரிசேனன். “ஆம், அப்படித்தான் இருக்கும். உடலும் உள்ளமும் தூய்மைகொண்டவன் அவன்” என்றார் பீஷ்மர்.
பின்பு தாழ்ந்த குரலில் “ஹரிசேனா, நலம் என்பது மகிழ்வை அளிக்கவேண்டும் என்பதில்லை. தன்னைச்சூழ்ந்துள்ள தீமையை அறிந்தும் சொல்லமுடியாதவராக இருந்தவர் மாண்டவ்யர். கழுவாணியில் அமர்ந்து வலியில் துடிக்கையிலும் நெஞ்சு அடங்காமையால் இறக்கமுடியாதவர்…” சொல்லவந்ததை முடிக்காமல் “…நலம் நிறையட்டும்!” என்று சொல்லிவிட்டு எழுந்து காட்டுக்குள் சென்றார்.

2/16/14

தாசரிகட்டா சௌடேஸ்வரி அன்னை திருக்கோவில் புகைப்பட மற்றும் வீடியோ காட்சி தொகுப்பு

தாசரிகட்டா சௌடேஸ்வரி அன்னை திருக்கோவில்
புகைப்பட மற்றும் வீடியோ காட்சி தொகுப்பு

சப்பரத்தில்  இருந்து கொண்டு எழுத்து மூலம் பக்தர்கள் குறை தீர்க்கும் அதிசயம்...... கர்நாடக மாநிலம் , தும்கூர் மாவட்டம் , திப்தூர்  தாலுக்கா  விலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாசரிகட்டா கிராமம் . திப்தூர் இல் இருந்து ஆட்டோ மூலம் தான் செல்ல முடியும் . பெங்களுரு நகரிலிருந்து பேருந்து மூலம் சென்றால் 3 மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.

அம்மன் இடம் கேள்வி கேட்க கட்டணமாக 100 ரூபாய் வாங்கப்படுகிறது.

கீழே கோவிலில் நடக்கும் நிகழ்சிகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்து மூலம் பக்தர்கள் குறை தீர்க்கும் அதிசயம்......




முள்ளுகத்துகே உத்சவ ... நம்ம ஊரில் பெருவிழாவின் இறுதிநாள் பூகுண்டம் சௌண்டம்மன் இறங்குவது போல்  இங்கே சௌடம்மா முள்ளு படுக்கையில் நடக்கிறார்கள்



புகைப்பட தொகுப்பு ...















click here to read the history of the temple..............:- ENGLISH VERSION

பூளவாடி கப்பேலார் மடமனை ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் , மஹா சிவராத்திரி அழைப்பிதழ்

பொன்குலுக்கிகாடு  பூளவாடி கப்பேலார் மடமனை
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் , மஹா சிவராத்திரி பள்ளய பூஜை , கப்பேலார் வம்ச குல மகள் கெச்சாளம்மன் பூஜை , சிறப்பாக வரும் 27-02-2014 அன்று இரவு மற்றும் 28-02-2014 அன்று காலையில் சிறப்பாக நடைபெறும். 01-03-2014 அன்று மாசி அமாவாசை வழிபாடும் நடைபெறும் . 
அது சமயம் அனைவரும் கலந்துகொண்டு அம்மன் அருள்  பெருக ...





நன்றி பூளவாடி கப்பேலார் அறக்கட்டளை நிர்வாகிகள் .
செல்வன் . நிஷாந்த் குமார் , பொள்ளாச்சி 

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை[ 1 ]

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை[ 1 ]
இமயமலையடிவாரத்தில் அபாகா நதியில் சென்று சேர்ந்த பிரியதர்சினி என்னும் சிற்றாறின் அருகே ஒரு குடிலமைத்து பீஷ்மர் தங்கியிருந்தார். பதினேழு ஆண்டுகளுக்கு முன் அவர் அங்கே வந்த நாட்களில் அஸ்தினபுரியில் இருந்து ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் ஒரு தூதன் அன்றைய செய்தியுடன் அவரை நோக்கிக்கிளம்புவான். நான்குநாட்கள் பயணம் செய்து மண்ணும்புழுதியுமாக அவரை அவன் வந்தடைவான்.
காலை எழுந்ததும் வனத்தில் புகுந்து பிரியதர்சினியில் நீராடி சூரியனை வணங்கி வந்ததும் அவர் முன் செய்தி காத்திருக்கும். மாலையில் வழிபாடுகளை முடித்து துயிலச்செல்லும்போது மீண்டும் ஒருமுறை செய்திகளை கேட்டுக்கொள்வார். அவரது ஆணைகள் ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் அஸ்தினபுரிக்கு வந்துசேர்ந்தன. நடுவே உள்ள ஏழுநதிகள் வெட்டி விரித்துக்கிடத்திய தொலைவை தூதர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.
பகல்முழுக்க பீஷ்மர் தனியாக அந்த அடர்காட்டுக்குள் அலைந்தார். புற்களை அம்புகளாக்கி உணவுக்கான வேட்டைகளை மட்டும் நிகழ்த்தினார். உடல்களைத்து விழப்போகும் கணம் வரை காட்டில் வாழ்ந்தபின் அந்திசாயும்போது திரும்பிவந்தார். அவரது உடலின் பொன்வண்ணம் மங்கி மண்நிறம் கொண்டது. தலைமுடிக்கற்றைகள் நரையோடின. கன்னங்கள் ஒட்டிய முகத்தில் இரு திரிகளாகத் தொங்கிய தாடி வெளுத்தது.
அவர் காட்டுக்குள் வந்த நாட்களில் அவருக்குள் இடைவிடாது ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் மெல்லமெல்ல அடங்கின. எண்ணச்சரடுகளை அறுத்து அவருக்குள் புகுந்து நிறைத்த காடு மேலும் மேலும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. பின்பு பலமணிநேரம் அவர் காட்டுமிருகம்போல ஐம்புலன்களாலும் காட்டை மட்டுமே அறிந்தபடி அதற்குள் இருந்தார். திரும்பிவந்து ஒற்றனைப்பார்த்து அவன் சொன்னசொற்களைக் கேட்கையில் நெடுநேரம் கழித்துத்தான் அந்தச் சொற்கள் அவருக்குள் பொருளாக மாறின. அவன் பேசும்போது விழித்த கண்களுடன் அவர் அவனை வெறுமே பார்த்திருந்தார்.
பின்னர் அவரிடமிருந்து அஸ்தினபுரிக்கு ஆணைகளேதும் செல்லாமலாயிற்று. நாளுக்கு ஒரு தூதன் வர ஆரம்பித்தான். பின்பு அவன் வாரத்துக்கொருமுறை வரலானான். கடைசியில் மாதம் ஒருமுறை மட்டும் அவன் வந்து தன் செய்தியை கரும்பாறையிடம் சொல்வதுபோல அவரிடம் சொல்லி ஒரு சொல்லைக்கூட திரும்பப் பெறாமல் மீளலானான். அஸ்தினபுரியும் அவரை மறந்தது என்று தோன்றியது. அவர் இறந்துவிட்டதைப்போலவே சூதர்கள் பாடினர்.
முன்பு அஸ்தினபுரியில் இருந்து  அதிகாலையில் தன் சீடர்களிடம் மட்டும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிய பீஷ்மர் நேராக கங்கநாட்டுக்குச் சென்றார். ஏழுவயதில் கங்கநாட்டிலிருந்து கிளம்பி வந்தபின் தன் பத்தொன்பதாம் வயதில்தான் அவர் மீண்டும் கங்கநாட்டுக்கு சென்றார். அது ஒரு படையெடுப்பு. சந்தனு கங்கர்களுக்கு அனுப்பிய எந்தச் செய்தியையும் அவர்கள் ஏற்கவில்லை. தேவவிரதனே அவர்களின் இளவரசன் என்றும், கங்கர்குலத்துக்கும் குருவம்சத்துக்குமான உறவு அவன் வழியாக உறுதியாகிறது என்றும் சந்தனுவின் அமைச்சு எழுதிய திருமுகத்துக்கு தேவவிரதனை கங்கன் என ஏற்கமுடியாது என்று கங்கர்குடிச்சபை முடிவெடுத்திருப்பதாக கங்கர்களின் அரசனான தீர்த்திகன் மறுசெய்தி அனுப்பினான்.
அப்படியென்றால் கங்கர்களின் குலம் விதிக்கும் எந்தச் சோதனையையும் தேவவிரதனிடம் செய்துபார்க்கலாம் என்றும், கங்கைக்குள் பிறந்ததுமே நீந்தி கரைவந்த முதற்சோதனைமுதலே கங்கர்களில் அவனே முதல்வன் என்பது உறுதியாகிவிட்டது என்றும் சந்தனுவின் அமைச்சு பதிலளித்தது. கங்கர்குலத்தின் தூய்மை அவனால் கெட்டது என்றே கங்கர்குலம் கருதுவதாக பதில் வந்ததும் போர் ஒன்றே வழி என அமைச்சு முடிவெடுத்தது. ஆனால் மலையேறிச்சென்று கங்கர்களை வெல்வது அஸ்தினபுரியின் படைகளால் ஆகாதது என்றனர் தளகர்த்தர்கள்.
தேவவிரதன் எழுந்து “இப்படைகளை நான் வழிநடத்துகிறேன்” என்றான். “இளவரசே, வீரம் வேறு  படைநடத்தல் வேறு” என்றார் தளகர்த்தரான பிரசேனர். “உங்களைத் தொடர்ந்துவரும் ஆயிரக்கணக்கான வீரர்களிடம் நீங்கள் நினைப்பதை சொல்வதற்கான பயிற்சியை நீங்கள் இன்னும் அடையவில்லை. அதுவே தளபதிக்கான கல்வி.” தேவவிரதன் “நான் என் படைகளில் அனைவருடைய உள்ளத்தையும் அறிந்திருக்கிறேன்” என்றான். சந்தனு “தளகர்த்தரே, இவ்வரசில் என் மைந்தனின் விருப்பம் இறைவனின் ஆணையாகும்” என்றார்.
ஆயிரம்பேர்கொண்ட படையுடன் கங்கைவழியாக ஏறிச்சென்ற தேவவிரதன் பன்னிரண்டாம் நாள் கங்கபுரியை அடைந்தான். கங்கையின் நான்காம் வளைவைத் தாண்டியதுமே கங்கர்களுக்கு அவர்களின் வருகை தெரிந்துவிடும் என்று அவன் அறிந்திருந்தான். ஒழுகிவரும் கங்கை வழியாகவோ கங்கைக்கரைக் காடுகளின் அடர்கொடிப்பின்னல்கள் வழியாகவோ கங்கபுரிக்குள் நுழைய முயல்வது கங்கர்களின் அம்புகள் முன் நெஞ்சு விரிப்பதற்கு நிகர். அவன் படைகள் கங்கைக்கரை காடுகளில் நுழைந்ததுமே விலகி மேற்காகச் சென்று முப்பது நாட்கள் மலையேறின. இமயச்சரிவில் ஏறி மூன்று மலைகளைத் தாண்டிச்சென்று மேகம் படர்ந்த மலைச்சரிவில் நின்றன.
முதல் மலையுச்சியில் நின்று கீழே நோக்கியபோது அடர்காட்டின் கொடிப்பின்னலுக்கு நடுவே கங்கபுரி வட்டமான தாலத்தில் அள்ளிவைத்த சிறிய சிமிழ்கள் போலத் தெரிந்தது. கங்கர்கள் வட்டக்கூம்புகளாக வீடுகட்டும் வழக்கம் கொண்டவர்கள். தெருக்கள் ஒன்றுள் ஒன்றாக அமைந்த வட்டங்கள். நடுவே ஓங்கி நின்றிருந்த அரண்மனையின் முகடு மீது கங்கர்களின் துள்ளும் மீன் இலச்சினைகொண்ட கொடி பறந்துகொண்டிருந்தது. கங்கையில் இருந்து ஓர் ஓடை அதற்குள் சென்று மறுபக்கம் வெளிவந்து நகரை  ஊடுருவிச்சென்றது.
நகரைச்சுற்றி பெரிய மரங்களை நாட்டி மரச்சட்டங்களைக் கொடுத்து இணைத்து உருவாக்கப்பட்ட கோட்டைமீது காவல்முகடுகளில் அம்புகளுடன் வீரர்கள் அமர்ந்திருந்தனர். யானைகள் முட்டினாலும் தாங்கும்படி உள்ளே பெரிய தடிகள் முட்டுக்கொடுக்கப்பட்டு சாய்ந்து ஊன்றி நிற்க அந்த மதில்சுவர் நூறு கால்கள் கொண்ட முதலை வளைந்து நிற்பதுபோலத் தோன்றியது. மழைநீரில் கறுத்த மரங்களின்மீது ஒட்டுக்கொடிகள் படர்ந்து ஏறியிருந்தன.
கோட்டையின் கிழக்குத்திசையில் அதன் இருமுனைகளும் கங்கையில் இறங்கி மூழ்கி மறைந்தன. அங்கே கங்கை குலப்பெண் சன்னதம் கொண்டதுபோல பெரும்பாறைகளில் மோதிச்சிதறி வெண்கொந்தளிப்பாக சுழித்துச்சென்றது. அத்தனை உயரத்திலிருந்தபோதிலும் அங்கே கங்கை எழுப்பிய பேரோசையை கேட்கமுடிந்தது. தேவவிரதன் அருகே வந்து நின்ற ருத்ரசேனன் என்ற துணைத்தளபதி “யானைகளை எலும்புக்குவியல்களாக ஆக்கி கொண்டுசெல்லும் என்று தோன்றுகிறது” என்றார். தேவவிரதன் தலையை அசைத்தபின் “நாம் அவ்வழியாக மட்டுமே இந்நகருக்குள் நுழைய முடியும்” என்றான்.
திகைத்து நின்ற ருத்ரசேனனிடம் “கங்கபுரியைச் சுற்றி இருப்பது கொடிபின்னி அடர்ந்த அடர்காடு. அதில் கங்கர்கள் உருவாக்கிய வழிகளில் மட்டுமே நாம் நடமாட முடியும். கங்கர்களின் அம்புகள் மிகச்சிறியவை. புல்லால் ஆனவை. மரங்களின் இடுக்குகள் வழியாக அவற்றை மிக எளிதாக செலுத்தமுடியும். நமது வில்லாளிகள் வில்லை வளைக்கவே அங்கே இடமில்லை. வேலை எறிந்தால் கொடிகளில் கைபின்னிக்கொள்ளும்” என்றான். “கங்கைவழி வரலாம். ஆனால் விரைந்திறங்கும் தெப்பங்களில் அவர்கள் வல்லூறுகள் போல பாய்ந்து வருவார்கள். வரும்போதே குறிதவறாமல் அம்புகளை செலுத்துவார்கள்.”
“ஆனால் இங்கிருந்து…” எனத் தொடங்கிய ருத்ரசேனனிடம் தேவவிரதன் கைகாட்டி “நான் சொல்வதைச் செய்யுங்கள்!” என்றான். தேவவிரதன் வழிகாட்ட நீரருகே வளர்ந்து மிதந்துகிடந்த கோரைப்புல்லை கொய்து தரையில் விரிக்கப்பட்ட கோரைப்புல்கயிறுகளில் பரப்பி மெல்லச்சுருட்டி தெப்பம்போல ஆக்கியபின் நடுவே கனத்த பாறையால் அடித்து அடித்து பள்ளம் செய்தபோது அது தெப்பமாகவும் படகாகவும் தெரிந்தது. அதை ஒருவீரன் தன் ஒற்றைக்கையால் தூக்கமுடிந்தது. ருத்ரசேனன் அது கவிழ்ந்தாலும் எளிதில் நீரில் மூழ்காது, பாறைகளில் முட்டினாலும் எளிதில் உடையாது என்று கண்டுகொண்டார்.
ஒருபடகில் இருவர் வீதம் ஏறிக்கொண்டனர். பீஷ்மன் மலையில் இருந்து செந்நிறமான ஒரு பெரும்பாறையைத் தூக்கி உருட்டிவரச்சொல்லி நீரோட்டத்தின் ஒரு சுழியில் போட்டான். அது நீரில் குருதிபோலக் கரைந்து இறகுபோல நீண்டு புடவைபோல இழுபட்டுச் சென்றது. “இந்தச்செந்நிறம் வழியாகவே செல்லுங்கள். ஒருபோதும் இதைவிட்டு விலகவேண்டாம்” என்றான் பீஷ்மன். “படகின் நடுவே புல்லுக்குள் புதைந்து படுத்துக்கொள்ளுங்கள். தலையைத் தூக்காதீர்கள். ஆணைவரும்வரை எழுவதற்கு முயலாதீர்கள்” என்றான். ஒவ்வொருவரையும் படகுடன் வைத்து இறுக்கமாக நாரால் பிணைத்தனர்.
கங்கை அங்கே நாணம்கொண்ட பெண் போல மெல்லச் சுழித்துக்கொண்டிருந்தது. அவர்கள் ஏறிக்கொண்டதும் படகுகள் மெல்ல சுழன்றபடி நீர்ப்பெருக்கை நோக்கி சென்றன. ஒரு பெரிய பாறையைத் தாண்டியதும் வெறிகொண்ட ஆயிரம் கைகள் படகுகளை அள்ளிப்பிடுங்கிக்கொண்டன. தூக்கி வீசியும் பிடித்தும் அம்மானமாடின. உள்ளே இருந்த வீரர்கள் கூச்சலிட்டு கண்களை மூடிக்கொண்டனர். பாறைகளில் முட்டி முட்டிச் சுழித்தும் சிறியபாறைகளில் குட்டிக்குதிரையென தாவியிறங்கியும் அவர்கள் சென்றனர். செல்லச்செல்ல வேகம் அதிகரித்து ஒரு தருணத்தில் அவர்கள் வானிலிருந்து விழுந்துகொண்டிருக்கும் உணர்வை அடைந்தனர்.
செந்நிறத்தாரையில் இருந்து விலகிச்சென்ற சில படகுகளை கங்கை சுழித்து உள்ளே இழுத்துக் கொண்டது. இரு படகுகள் பாறைகளில் முட்டியதும் கவிழ்ந்து உடைந்தன. அந்த வீரர்கள் அச்சமும் திகைப்பும் கொண்ட முகங்களுடன் கூவி மறுகணமே மறைந்தனர். நீரின் பேரோலத்தில் அவர்களின் கூச்சல்கள் மூழ்க, விழித்த கண்களாகவும் திறந்த வாயாகவும் மட்டுமே அவர்கள் தெரிந்து அணைந்தனர்.
கங்கபுரியின் வெண்நுரைக்கொந்தளிப்பு நோக்கி அம்புகள் போலச் சென்றன படகுகள். கங்கையில் மிதந்துசென்ற பெரிய பாழ்மரங்கள் அங்கே பாறைகளில் மோதி சிம்புகளாக காற்றில் சிதறித் தெறித்து மூழ்கின. நீர்நுரைச்சிதர்கள் எழுந்து வளைந்துவிழுந்த அலையின்மேல் காலையொளி கண்களைக் கூசவைக்கும்படி நெளிந்தது. மேகமென எழுந்த சாரலுக்குமேல் மழைவிற்கள் மின்னிக்கொண்டிருந்தன. படகுகளில் சில செந்நிறப்பாதையை விட்டுவிலகின. அவை அக்கணமே பாறைகளால் அறையப்பட்டு சிதர்களாயின. எஞ்சியவற்றை இருபெரும் பாறைகள் நடுவே இருந்த இடைவெளி திறந்த வாய் உறிஞ்சிக்கொள்வதுபோல இழுத்துக்கொண்டது.
VENMURASU_EPI_39 _
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஒருவர் மேல் ஒருவராக அவ்விடைவெளியில் இருந்த கரையில் சென்று விழுந்தனர் வீரர்கள். அங்கே முழங்காலளவுக்கே நீர் இருந்தது. தேவவிரதன் இறங்கி தன் கொடியை ஆட்டியதும் அனைவரும் படகுகளை அவிழ்த்துவிட்டு கைகளில் வேல்களுடன் கங்கபுரியைநோக்கிப் பாய்ந்தனர். வேலும் வாளும் கங்கர்களுக்குப் பழக்கமற்றவை. அவர்களின் விற்கள் நாணேற்றப்படுவதற்குள்ளேயே போர் முடிவுக்கு வந்தது. கங்கபுரிக்குள் நுழைந்த அஸ்தினபுரியின் படைகள் கங்கைநீர் அரண்மனைக்குச்செல்லும் ஓடைவழியாக விரைந்து கங்கமன்னன் ஓசைகளைக் கேட்கத் தொடங்குவதற்குள் உள்ளே நுழைந்து அவரை சிறையெடுத்தன.
குலமூத்தார் கூடிய அவையில் கங்கமன்னனின் அரியணைமேல் தன் உடைவாளை வைத்து அந்நகரை தேவவிரதன் கைப்பற்றினான். கங்கமன்னன் அஸ்தினபுரியின் ஜனபதமாக அமைவதாக அவனுடைய குல இலச்சினையைத் தொட்டு ஆணையிட்டான். உருவான நாள்முதல் தனியரசாக இருந்துவந்த கங்கபுரியின் வரலாறு முடிந்தது.
முதல்நாள் அஸ்தினபுரியின் வீரர்கள் அரண்மனைமுற்றத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் அரண்மனைக்குள் நுழையலாகாது என்று தேவவிரதன் ஆணையிட்டிருந்தான். கங்கபுரியின் அனைத்து வீடுகளிலும் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. வீரர்கள் கங்கையில் பிடித்த மீனையும் களஞ்சியத்தில் இருந்து எடுத்த புல்லரிசியையும் சேர்த்து சமைத்து உண்டு திறந்த வானின் கீழ் குளிரில் இரவைக் கழித்தனர்.
மறுநாள் காலை தேவவிரதன் கங்கைக்கரைக்குச் சென்றான். நீர் வந்து அறைந்துகொண்டிருந்த கங்கையில் கங்கர்களின் சிறுவர்கள் பாய்ந்து நீந்திச்சென்று பாறைகளில் ஏறி வழுக்கலில் சறுக்கி விளையாடினர். தோலாடை மட்டும் அணிந்தவனாக தேவவிரதன் நீரில் குதித்தான். கங்கையின் அலைகளில் ஏறி அலைவழியாகவே கரைக்கு வந்து நின்றான். ஆயிரம் தலையும் படமெடுத்த வெள்ளிநாகம் போலிருந்தது கங்கை. ஒரு படத்திலிருந்து இன்னொன்றுக்குத் தாவினான். கங்கையின் ஆயிரம் பறக்கும் நாவுகளுடன் சேர்ந்து பறந்து அவள் மடியில் விழுந்து எழுந்தான்.
சற்று நேரத்தில் கங்கர்குலத்துப்பெண்களும் குழந்தைகளும் முழுக்க கரையில் கூடிவிட்டனர். தேவவிரதன் கரைக்கு வந்ததும் குழந்தைகள் ஓடிச்சென்று அவனது கைகளைப்பற்றிக்கொண்டன. முதியபெண்கள் முகச்சுருக்கங்கள் மலர்ந்து விரிய வந்து அவன் தோள்களைத் தழுவினர். பெண்களின் கனிந்த கண்கள் அவனைச்சூழ்ந்தன. அன்றே கங்கர்குலம் தன் தலைமகனை கண்டுகொண்டது.
அன்றுமாலை கங்கர்களும் அஸ்தினபுரியின் வீரர்களும் குழுமி மகிழ்ந்த உண்டாட்டு நிகழ்ந்தது. அதன் ஒலிகள் வெளியே கங்கையின் இரைச்சலைமீறி எழுந்துகொண்டிருக்க தேவவிரதன் தீர்த்திகனிடம் பேசிக்கொண்டிருந்தான். மதுவுண்டு அமர்ந்திருந்த தீர்த்திகன் கங்கபுரியில் பன்னிரண்டு ஆண்டுகளில் என்னென்ன நிகழ்ந்தன என்று சொல்லிக்கொண்டிருந்தார். பன்னிரண்டு வயதான அவர் மகன் அர்த்திகன் அப்பால் கைகட்டி நின்றிருந்தான். தீர்த்திகன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் ருத்ரசேனனை திகைக்கச் செய்துகொண்டிருந்தன. ருத்ரசேனன் சொல்வன அனைத்தும் தீர்த்திகனை வியக்கவும் சிரிக்கவும் வைத்தன.
அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டபடி கண்களை சாளரம் வழியாகத் திருப்பி கங்கையை நோக்கிய தேவவிரதன் நின்றிருந்தான். அவன் எதையும் கேட்கவிரும்பவில்லை என்று முதலில் நினைத்த அர்த்திகன் அவன் எதையோ குறிப்பாகக் கேட்கவிரும்புகிறான் என்று பின்னர் ஊகித்தான். ருத்ரசேனன் தேவவிரதனின் அன்னையைப்பற்றி கேட்டபோது தேவவிரதனின் பிடரியில் மயிர்சிலிர்ப்பதுபோல அர்த்திகன் கண்டான். ஆனால் அவன் திரும்பவோ உடலில் அசைவேதும் நிகழவோ இல்லை.
“அவளுடைய எட்டாவது பிள்ளை இவன். இவன் பிறந்ததுமே கங்கர்வழக்கப்படி நீரில் நீந்தி வந்துசேர்ந்தான். இவன் கரைநோக்கி வருவதைக் கண்டதும் பதைப்புடன் கரையில் நின்றிருந்த கங்காதேவி அலறியபடி திரும்பி தன் குடிலுக்கு ஓடிவிட்டாள்…” என்றான் தீர்த்திகன். “ஏன் என்று இன்றுவரை எங்களுக்குப் புரியவில்லை. குழந்தைக்கு முலையூட்ட மறுத்துவிட்டாள். குழந்தையை அவள் முன் காட்டியபோது திகைத்து அலறி கைகளால் தலைமயிரைப்பற்றியபடி பின்னகர்ந்து சுவரில் முட்டி நின்றுவிட்டாள்.”
அன்றே அவள் பித்தியானாள். குழந்தையை மட்டும் அல்ல கங்கர்கள் எவரையுமே அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. எந்நேரமும் கண்கள் கலங்கி வழிய தலையை அசைத்தபடி தன் உடலிலேயே எதையோ தேடிக்கொண்டிருந்தாள். ஆடைகளுக்குள்ளும் கைகால்களுக்கு அடியிலும் மாறிமாறித் தேடினாள். அவள் எதைத்தேடுகிறாள் என்று தெரியவில்லை. அங்கிருந்த அனைத்தையும் அவளுக்கு அளித்துப்பார்த்தனர். சினத்துடன் அவள் அவற்றை அள்ளி வீசினாள். அவள் பேசும் சொற்கள் பொருளுக்கு அப்பாலிருந்தன. நெளிந்து நெளிந்து வெகுதொலைவுக்குச் செல்லவிரும்பும் புழு எனத்தெரிந்தாள்.
பின்பொருமுறை கங்கைக்கரை மணலின் துளைக்குள் இருந்து ஆமைக்குஞ்சுகள் வெளிவருவதைக் கண்டாள். அவை சின்னஞ்சிறு கால்களால் தள்ளாடி விழுந்து எழுந்து கங்கையை நோக்கி ஓடிச்செல்வதை, கங்கை தன் இனியசிறுகரங்களை நீட்டி அவற்றை வரவேற்று அள்ளிக்கொள்வதைப் பார்த்தாள். அதன்பின் மணலைத் தோண்டி நோக்குவதே அவள் வாழ்க்கையாக இருந்தது. மணலுக்குள் அவள் விட்டுச்சென்ற எவற்றையோ தேடிக்கொண்டிருந்தாள். நான்குவருடம் அவ்வாறு தேடியபின் தேடியபடியே உயிர்துறந்தாள்.
“அவள் கங்கையில் உயிர்விட்ட தன் ஏழு குழந்தைகளை தேடிக்கொண்டிருந்தாள் என்று மூதன்னையர் சொன்னார்கள்” என்றார் தீர்த்திகன். “எட்டாவது குழந்தை பிறந்தபின்புதான் ஏழு குழந்தைகளின் இறப்பை புரிந்துகொண்டாள் என்றார்கள்”
ருத்ரசேனன் “இங்கே அவ்வாறு குழந்தைகள் இறப்பதேயில்லையா?” என்றார். “எங்கள் குழந்தைகள் கங்கையில் பிறப்பதெப்படி என்பதை கருவிலேயே கற்றவை. தன் கருவில் அவற்றை அக்குழந்தைகளுக்கு அவள் கற்றுக்கொடுத்திருக்கவில்லை என்றால் அது அவள் பிழையே” என்றார்.
தேவவிரதன் உடலில் சிறு அசைவும் கூடவில்லை என்பதை அவன் முதுகையே நோக்கி நின்ற அர்த்திகன் கவனித்தான். பின்பு அவன் திரும்பி அறைமூலையில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த தன் வில்லை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். மரப்படிகளில் கனத்த காலடிகள் ஓசையிட அவன் செல்வதை மூவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். ருத்ரசேனன் “அவள் தன் மைந்தனை இறுதிவரை அறியவேயில்லையா?” என்றார். தீர்த்திகன் “இல்லை, அவள் இறந்துபோன குழந்தைகளை மட்டுமே கண்டாள்” என்றார்.
கங்கைக்கரைக்குச் சென்று பாறைமுகப்பில் ஏறி அமர்ந்து தொலைதூரம் வரை அலையடித்துக்கிடந்த கங்கைவெளியையே நோக்கிக்கொண்டிருந்தான் தேவவிரதன். விழவுக்கொண்டாட்டம் முடிந்ததும் கங்கர்குலத்துச் சிறுவர்கள் ஓடிவந்து அலைகளின் மேல் ஏறிக்கொண்டனர். ஆமைக்குஞ்சுகள் போல அவர்கள் கங்கைநோக்கிச் செல்வதைக்கண்டு கரையில் நின்ற அஸ்தினபுரியின் வீரர்கள் கூச்சலிட்டனர். தேவவிரதன் எழுந்து நீருள் பாய்ந்து அதன் ஆழத்தை அடைந்து மூச்சிறுகவைக்கும் நீரின் அணைப்புக்குள் சென்றுகொண்டே இருந்தான்.
அதன்பின் தேவவிரதன் கங்கபுரிக்கு வரவில்லை. தீர்த்திகன் மறைந்தபின் அவர் மைந்தன் அர்த்திகன் மன்னனானான். சந்தனுவின் மறைவுக்குப்பின் தேவவிரதர் கங்கபுரியையே மறந்தவர் போலானார். கங்கபுரியின் குலமூத்தார் அரச சபைக்காக அஸ்தினபுரிக்கு வரும்போது தேவவிரதரை வந்து கண்டு மீனும் சிப்பியும் தேனும் அளித்துச்செல்வார்கள். அவர்களுடன் தனிப்பட்ட நெருக்கத்தை வைத்துக்கொள்ளலாகாது என்பதிலும், அவர்களுக்கு அரசில் சிறப்புரிமை அளிக்கப்படுகிறதென்னும் பேச்சு வரலாகாது என்பதிலும் பீஷ்மர் கவனம் கொண்டிருந்தார். அதை கங்கர்கள் உணர்ந்தபின் அவர்கள் மிகவும் விலகிச்சென்றனர்.
அஸ்தினபுரி நீங்கியதும் அவருக்கு முதலில் எழுந்த எண்ணம் கங்கபுரிக்குச் செல்லவேண்டும் என்பதாகவே இருந்தது. கங்கபுரிக்கு படகுப்பாதையும் வண்டிப்பாதையும் அமைந்துவிட்டன என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் அந்த வண்டிப்பாதையில் நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் போல வண்டிகள் செல்லும் என அவர் நினைத்திருக்கவில்லை. சாலையின் இருமருங்கும் வணிகர்களின் தங்குமிடங்கள் அமைந்திருந்தன. அங்கே பொதிவண்டிகள் ஒரமாக கட்டப்பட்டிருக்க வணிகர்கள் உணவுண்டுகொண்டிருந்தனர். புல்பாய்விரித்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
கங்கபுரியின் படகுத்துறை பெரிய மரங்களை நதிக்குள் இறக்கி கட்டப்பட்டிருந்தது. நீரின் ஒழுக்கு குறைவான தெற்கு முனையில் அது அமைந்திருக்க மொத்த நகரமே மெல்லமெல்ல அதைநோக்கி திரும்பியிருந்தது. கிழக்குப்பகுதியில் கங்கை வெறிகொண்டு அறைந்து நுரைத்த பாறைப்பகுதிகள் முழுமையாகவே கைவிடப்பட்டிருந்தன. அப்பகுதியில் நீர்ச்சிதர்கள் நகர்மேல் தெறிப்பதைத் தடுக்கும் பெரிய மரக்கோட்டை இருந்தது. கோட்டை மண்ணைக்கொண்டு அடித்தளம் எழுப்பப்பட்டு உயரமாகக் கட்டப்பட்டிருந்தது. அதன்மேல் கங்கர்களின் மீன்கொடி பறந்துகொண்டிருந்தது.
படித்துறையில் எளிதில் மிதக்கும் மரங்களால் ஆன கட்டுமரங்கள் நின்றிருந்தன. கங்கையின் அப்பகுதியில் பெரியபடகுகள் அணுகமுடியாதென்பதை பீஷ்மர் உணர்ந்தார். இன்னும் சிலவருடங்களில் கங்கர்கள் கீழே கங்கைபெருகிச்செல்லும் ரிஷிகேசத்திலோ கங்காத்வாரத்திலோ ஒரு பெரிய துறைமுகத்தை அமைத்தாகவேண்டும். அதற்காக அவர்கள் படைகொண்டு வந்து தாழ்நிலங்களை வென்றாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
அர்த்திகன் பீஷ்மரை வரவேற்று அரண்மனைக்கு அழைத்துச்சென்றான். அவரை அறிந்திருந்தவர்கள் சிலரே கங்கபுரியில் இருந்தனர். அவருக்கு கங்கர்குடி சபைகூடி தலைப்பாகை அணிவித்து மரியாதைசெய்தனர். அனைத்தையும் முறைப்படி நிகழ்த்துவதன் வழியாக அக்குடி அவரிடம் நீ வேறு என்று சொல்லிக்கொண்டிருந்தது என அவர் நினைத்தார். முதியவர்கள் சிலர் இளைஞர்களுக்கு அவர் யார் என்பதை சொல்லிக்கொண்டிருந்தனர்.
இளைஞர் அனைவரும் மாறியிருந்தனர். கங்கர்களின் வழக்கமான மரவுரியாடை அணிந்தவர்கள் அவரைவிட முதியவர் சிலரே. சிலர் கலிங்கத்துப் பட்டாடைகூட அணிந்திருந்தனர். வேசரத்துப்பொன்னும் காந்தாரத்து மெல்லாடைகளும் அவையில் மின்னிக்கொண்டிருந்தன. அங்கே தான் கண்ட வேறுபாடென்ன என்பதை நெடுநேரம் கழித்தே பீஷ்மர் உணர்ந்தார். அந்த அவை நால்வருணங்களாகப் பிரிந்து அமர்ந்திருந்தது.
அன்று இரவில் அரண்மனையில் இருந்து கிளம்பி கங்கைக்கரைக்குச் சென்று அந்தப் பெரும்பாறைகளில் ஏறி மேலே சென்று கங்கையின் அலைக்கொந்தளிப்பை பார்த்துக்கொண்டு தேவவிரதர் அமர்ந்திருந்தார். மறுநாள் காலையே திரும்பிவிடவேண்டும் என எண்ணிக்கொண்டார். கங்கபுரி என அவர் அறிந்த ஒன்று அவரது நினைவுகளுக்குள் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆக்கி உண்ணும் காலம் கங்கபுரியைச் செரித்து முன்சென்றுவிட்டது. அப்பால் படகுத்துறையில் வணிகர்களின் படகுகள் எண்ணைப்பந்தங்கள் எரிய நீரில் ஆடிக்கொண்டிருந்தன. பற்றிக்கொள்ளாத நெருப்பின் அலையடிப்பாக அந்த ஒளி தெரிந்தது.
மறுநாள் அவர் திரும்பிச்சென்றார். சாலைவழியாகச் சென்றவர் ஓர் இடத்தில் ரதத்தை நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டுக்குள் புகுந்தார். வழியற்ற காட்டுக்குள் தன் உடலாலேயே வழியை உருவாக்கி நடந்துகொண்டிருந்தார். நாட்களும் மாதங்களுமாக சென்றுகொண்டிருந்தவர் பிரியதர்சினியின் கரையை அடைந்ததும் நின்றார். அவ்வளவு மெதுவாக ஓடும் தெளிந்த ஆற்றை அவர் கண்டதே இல்லை. அடித்தளக்கூழாங்கற்கள் ஒவ்வொன்றும் மிக அருகே எனத்தெரிந்தன. மீன்கள் வானில் மிதப்பவை போலிருந்தன. ஒளியே நீராக நெளிந்த அந்த ஆற்றில் இருந்து கண்களைத் தூக்கவே அவரால் முடியவில்லை.
மாலைவரை நீரையே நோக்கியபடி அங்கேயே நின்றுகொண்டிருந்தார். அங்கே சந்தி கால வணக்கத்துக்காக வந்த சமயவான் என்னும் முனிவரிடம் அந்த ஆற்றின் பெயரென்ன என்று கேட்டார். “இவள் பிரியதர்சினி. பார்ப்பதற்கு பிரியமானவள். ஏனெனில் நமக்குப் பிரியமானவற்றைக் காட்டுபவள். எனக்கு பிரம்மத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறாள்” என்றார் சமயவான்.
அவர் சென்றபின்னரும் அங்கேயே நின்றிருந்தார். ‘எனக்குப்பிரியமானதென்ன?’ என்று கேட்டுக்கொண்டார். புரியவில்லை. ‘நதியே நீ எனக்கு காட்டவிரும்புவதென்ன?’ என்றார். நதி மெல்ல அலையடித்து பெருமூச்சுவிட்டது. அலைகள் அடங்கியபோது இலைபிரதிபலிப்புகள் மீண்டும் ஒன்றுகூடி தங்கள் வடிவை அடைந்தன. அவற்றின் நடுவே ஏழு குழந்தைகளை பீஷ்மர் கண்டார். கருவறைமுடி கொண்டவை. சிவந்த கொழுங்கால்களும் கைகளும் கன்னக்கதுப்புகளும் தெளிந்த கருவிழிகளும் கொண்டவை. அவை சிரித்துக்கொண்டிருந்தன.
“நீங்கள் கங்கையில் இருப்பீர்கள் என நினைத்தேன்” என்றார் பீஷ்மர். “நாங்கள் அங்கே இல்லை. அங்கே எவரும் எங்களை நினைப்பதில்லை.” பீஷ்மர் “எங்கிருக்கிறீர்கள் தமையன்களே?” என்று கேட்டார். “வானில் எங்கள் பேருலகில். இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் உண்டு. மண்ணில் எவரேனும் எங்களை ஆழ்ந்து நினைத்துக்கொண்டால் அவர்களைச் சென்று சேர எங்களால் முடியும்” என்றது மூத்ததான ஊர்மிகன். “ஆகவே நாங்கள் உன்னைச்சுற்றியே என்றும் இருந்துகொண்டிருக்கிறோம்” என்றது உத்தாலிகன்.
“அன்னை உங்களுடன்தான் இருக்கிறாளா?” என்றார் பீஷ்மர். “இல்லை தம்பி, அவள் அனலணையாமல் மறைந்தவர்களின் உலகில் இருக்கிறாள். அங்கே முடிவற்ற மணல்வெளி அவளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை ஊழிக்காலம் வரை தோண்டித்தோண்டி அவள் எங்களைத் தேடுவாள்” தரங்கன் சொன்னது. “நாங்கள் அவளருகே சென்று காற்றாகவும் ஒளியாகவும் ஒலிகளாகவும் விளையாடுவோம்” என்றது ஆர்ணவன். கல்லோலனும் தரளனும் சிரித்தபடி “சிலசமயம் அவள் ஆடையைப்பற்றி இழுப்போம். அவளை கால்பின்னி விழச்செய்வோம்” என்றது.
“மூத்தவர்களே என்னை என்ன செய்யவிருக்கிறீர்கள்?” என்றார் பீஷ்மர். “ஒருபோதும் இன்னொரு மனித உயிர் உன்னை நெருங்கவிடமாட்டோம். உன் தனிமையை நாங்கள் நிரப்பிக்கொள்வோம்.” என்றது ஸ்ரோத்யன். “உன்வழியாகத்தானே நாங்கள் மண்ணில் விளையாடமுடியும்? நாங்கள் விளையாடாமல் விட்டுவந்த காலம் முழுக்க உன்னிடமல்லவா இருக்கிறது?” பீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். “இளையோனே, நாம் எண்மர். எஞ்சியிருப்பது நமக்கென ஒரே உடல்” என்றது ஊர்மிகன்.
அதன்பின் அவர் அந்தச் சிறிய ஆற்றங்கரையிலேயே குடிலமைத்து அங்கேயே தங்கிக்கொண்டார். அந்நதிக்கரையிலும் அதைச்சூழ்ந்த காடுகளிலும் மலைக்காற்றுபோல பரவியவராக வாழ்ந்துகொண்டிருந்தார். அவரது தனிமை எட்டுமடங்கு அழுத்தம் கொண்டதாக இருந்தது. அவரது மௌனம் எட்டுமடங்கு குளிர்ந்திருந்தது. அவரது மூச்சுக்காற்றில் எட்டு உயிர்கள் வாழ்ந்தன.