ஆடி வருவாய் தாயே...
அடி எடுத்து வைத்து ஆடி ஆடி வருவாய் தாயே....
ஆடியிலே எங்களுடன் ஓடி ஆடி விளையாட..
உனக்காகவே வாசலில் காத்து இருக்கிறோம் தோரணம் கட்டி..
உன் பூ பாதத்தை எடுத்து வைத்து வாருமம்மா..
மஞ்சள் அரைத்து வைத்துள்ளோம்...
மங்களமே நீ வருக...
குங்குமத்தை குவித்துளோம்....
எங்கள் குல தாயே வருக...
ஐந்து நாட்களுக்கு அழைக்கவில்லை...
உன்னுடன் ஐக்கியமாக காத்திருக்கிறோம்..
உன் பொற்பாதத்தில் சரணடைந்தோம்..
எங்களை நீ காக்க வேண்டும் தாயே...
-திரு ஜெயக்குமார், திருப்பூர்
முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 |
No comments:
Post a Comment