அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/6/13

தேவாங்கர் குலம்

ரூபசேனனுக்குப் பின் தேவாங்க குலம் பெருகி நாடெங்கும் பரவி மக்களுக்கு ஆடைகளை நெய்து அளித்துச் செழித்து ஓங்கியது. தேவாங்க மக்கள் யாவரும் தங்கள் ஆசாரத்தை இழக்காமல் சீருடன் வாழவேண்டும் என்னும் கருத்தால் ஏகோராமன் என்னும் விருபாட்சன் சமூகக்கட்டுப்பாடுகளையும் ஒழுக்கநியதிகளையும் வகுத்தான். சமூகக்கட்டுப்பாட்டுக்காக சிம்மாசனபதிகளையும், ஆசார சீலம், தெய்வவழிபாடு முதலியன ஒழுங்காக நடைப்பெறப் பீடாதிபதிகளையும் நியமித்தான். இவ்வாறு அமைத்த அமைப்புக்களில் இப்போது இருப்பவை சிம்மாசனங்கள் 4 பீடங்கள் 5 ஆம். இந்த அமைப்புகளின் வழி, விருபாட்சன் வகுத்த நெறிமுறைகளைத் தேவாங்கக்குலமக்கள் இன்றும் பின்பற்றி நடந்துவருகின்றனர். இனி, தேவாங்கக் குலமக்கள் இன்று தெலுங்கு கன்னடம் மராட்டி முதலிய பழமொழிகள் பேசுகின்றவர்களாய் நாடு முழுவதும் பரவி உள்ளனர். நாட்டின் சார்பால் வேறு வேறு மொழி பேசினாலும் இவர்களுக்குள் தொழில், குலஆசாரம், சமயஆசாரம் ஒன்றாகவே உள்ளன. இந்த ஒருமைப்பாட்டுக்கு காரணமாயிருப்பது இவர்கள் வழிபடும் குலதெய்வம் சவுடாம்பிகையாகவே இருப்பதாலாகும். தேவல முனிவர் சிவபெருமானின் இதயத்திலிருந்து தோன்றியதால், தேவ+அங்கம் தேவாங்கம் என்று பெயர். அவர்வழி வந்த குலமக்களுக்கு ஏற்பட்டது. தேவர்களுக்கு ஆடைகளை அளித்து அங்கங்களை அழகு படுத்தியதாலும் இப்பெயர் வந்தது என்றும் கொள்வர். இவர்கள் யாவரும் பூணூல் அணியும் வழக்கம் உடையவர்கள். சில சிவாச்சாரிய குடும்பங்களில் மட்டும் ஆண்கள் சிவலிங்கம் கட்டிக்கொள்கின்றனர். தேவாங்கர்கள் பெரும்பாலும் சைவர்களே.

No comments:

Post a Comment