அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/18/13

113 .நாரத மகரிஷி கோத்ரம்

பிரம்மாவின் வயற்றில் இருந்து தோன்றியவர். தம் மூன்றாவது பிறப்பில் இவர் பிரம்மாவின் பிள்ளை. இவர் பத்தாவது பிரஜாபதியும் ஆவார். 

ஹர்யச்வர்களையும் சபலாச்வர்களையும் பிரஜாவிருத்தி செய்யாமல் மோட்ச மார்க்கத்தை உபதேசித்தார். அதனால் பிரம்மா இவரைக் கந்தர்வத் தலைவனாகும்படி சபித்தார். தட்சன் குமாரர்களுக்கு ஞானோபதேசம் செய்து மோட்சமடையச் செய்தார். அதனால் இவரை ஒருநிலையில்லாமல் சுற்றுமாறு தட்சன் சபித்தான். அதனால் திரிலோக சஞ்சாரியானார். 

இவர் கையில் உள்ள வீணைக்கு மகதி என்று பெயர். வீணாகானத்தில் நிகரற்றவர். 

வேதங்கள், வேதாங்கங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தர்மரகஸ்யம், பூர்வகல்பசரிதம், பிரம்மாண்டத்தின் அமைப்பு, ராஜநீதி, வித்யைகள், கலைகள், சங்கீதம், நாட்டியம் முதலிய சகல ஞானத்திலும், பேசுந்திறமையிலும் நிகரற்றவர். தேவர்கள் அசுரர்கள் இருவருக்கும் வேண்டியவர். இவ்விருவகையினரும் இவரை வணங்கினர். 

சகல நற்குணங்களும் உடையவர். நடுநிலை உடையவர். பற்றற்ற புண்யாத்மா , கந்தர்வ கணங்களுள் தும்புருவுடன் சேர்க்கப்படுகிறார். இவருடைய சகோதரி மகன் பர்வதர். 

முன்கல்பங்களில் வழங்கிவந்த ப்ரும்ம ஞானத்திற்கு இருப்பிடம் நாரதரே. ஸ்வேதவராக கல்பத்திற்கு இவர் ஆதிரிஷி. பகவானுடைய குணங்களை மஹதி என்னும் யாழில் வாசிப்பதும், ஏழு மார்க்கங்கள் உள்ள ப்ரம்ஹ வித்தையை உபதேசிப்பதும் இவருடைய பணி. 

கர்மகதியை பின் தொடர்ந்து ஜீவகோடிகளுக்கும் உலகங்களுக்கும் நன்மை செய்வதே இவர் நோக்கம், ஜீவாத்மாக்களின் வினைக்கர்மங்கள் தகுந்த காலங்களில் தகுந்தபடி பயனைக் கொடுக்கும்படி கவனிப்பர். சாதாரணமாகப் பார்க்கும் போது இவர் செயல்கள் கலகம் உண்டாக்குவதாகத் தோன்றும். ஆனால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது பழமொழி. அதனால் இவர் கலகப்பிரியர் என்று அழைக்கப்பட்டார். கர்ம தேவதைகளுக்கு இவர் தலைவர். இவரில்லாமல் ஈஸ்வரனின் காரியங்கள் நடப்பது இல்லை. 

நாரதர் பெயரால் 
1) நாரதீய புராணம் 
2) நாரத ஸ்மிருதி 
3) நாரத பக்தி சூத்ரம் 
4) நாரதசாகை 
5) நாரத சங்கீத மகரந்தம் ஆகிய நூல்கள் விளங்குகின்றன. 

நாரதரிடம் உபதேசம் பெற்ற காட்டு வேடன் தான் வால்மீகி மகரிஷி. 

"தேவரிஷிகளுள் நாரதன் நானே " என்று கீதையில் பகவான் அருளிச் செய்தான். 

இங்கனம் நாரதர் வரலாறு விரிக்கில் பெருகிக்கொண்டே போகும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஆகாசதவரு :- தவத்தாலும், யோக பலத்தாலும் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றல் பெற்று இருந்தவர். பஞ்ச பூதங்களுள் ஒன்றான ஆகாசத்தை வழிபாடு செய்பவர். 

இட்டூரதவரு :- இட்டூர் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

உப்பள்ளதவரு :- கடற்கரையில் உள்ள உப்பளங்களுக்கு கன்னடத்தில் உப்பள்ள என்று பெயர். உப்பள்ளங்களை ஒட்டி வாழ்ந்து வந்தவர். 

கரிகெதவரு :- அறுகம் புல்லைக் கொண்டு வழிபாடு செய்பவர். 

குண்டம்தவரு :- அக்நிகுண்டத்தில் முதலில் இறங்கும் உரிமை பெற்றவர். அக்நிஹோத்ரம் முதாலன யாககாரியங்களை விடாது வீட்டில் செய்பவர். 

கெரடிதவரு :- சிலம்பு விளையாட்டில் வல்லவர். 

கோவூரதவரு :- ஆந்திராவில் உள்ள கோவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கோவூர்க்கிழார் என்ற புலவர் சங்க காலத்தில் வாழ்ந்து வந்தார். 

கோவிலதவரு :- கோவில்களில் சேவை செய்தவர். 

சங்கதவரு :- அம்மன் திருவிழாவில் சங்க முழக்கம் செய்பவர். 

சமாதிதவரு :- அஷ்டாங்கயோகத்தில் ஒன்றான சமாதியோகம் கைகூடின ஜீவன் முக்தர்கள். 

பண்டாரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருவிழாக்களுக்குப் பண்டாரம் வழங்குபவர். 

பாகலதவரு :- தலைப்பாகை அணிந்தவர். 

புத்சலதவரு :- வரிக்குருமத்தங்காய் என்னும் குமட்டிக்காயைக் கொண்டு பலவகை வைத்தியங்கள் செய்தவர். 

பொஜ்ஜம்தவரு :- பெரிய வயிறு உடையவர். 

பிரம்மாண்டதவரு :- பதினெண் புராணங்களுள் மிகவும் பெரியது பிரம்மாண்ட புராணம். இதனைக் கற்றுப் பிரசங்கம் செய்தவர். 

முனிகூட்டதவரு :- முனிவர் கூட்டத்தை வழிபட்டவர். 

லாடதவரு :- லாட என்பது ஒரு வகை மொழி. லாட மொழியில் வல்லவர். 

குட்டனூருதவரு :- குட்டனூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

பாபட்லதவரு :- வகிடு எடுத்துக் கொண்டவர். ஆந்திராவில் பாபட்டலம் என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

கூரடிதவரு, கொம்மரதவரு, தட்டிதவரு, தட்டுதவரு, படலம்தவரு, மானகுருவவுரு, பெண்டிதவரு, ஹஸிகெயதவரு, முசலதவரு, பஜ்ஜதவரு.

8/17/13

112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷியின் பெயரால் ஒரு லிபி - எழுத்து வடிவம் இருக்கின்றது. அது நாகர லிபி எனப்படுகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

முண்டகாசனதவரு :- முண்டகாசனம் இட்டுத் தியானம் செய்தவர். முண்டகாசனம் - பத்மாசனம். 
தட்டியதவரு :- 
சள்ளெயதவரு :-

8/16/13

111 .நாமதேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குசதவரு :- தர்ப்பையும் கையுமாகக் காலம் கழித்தவர். யாகாதி காரியங்கள் செய்தவர். தர்ப்பை கொண்டு வழிபட்டவர். 
சந்தராதவரு :- சந்திரனை வீட்டுத் தெய்வமாக வழிபட்டவர். பௌர்ணமி பூசனை செய்தவர். 
சிருங்காரதவரு :- அழகு மிக்கவர். 
தானதவரு :- தானதருமங்கள் செய்பவர். 
பங்காருதவரு :- தங்க நகை அணிபவர். தங்கமான குணம் கொண்டவர். தங்க வியாபாரம் செய்தவர். 
பாலகவியவரு :- இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர். 
மதரெதவரு :- வடமதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சாமந்திதவரு :- சாமந்தி மலர் கொண்டு வழிபட்டவர். 
சல்லாதவரு :- நீர் மோர் தானம் செய்தவர்.

8/15/13

110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம்

த்ரயம்பகம் வேத மந்திரங்களுள் ஒன்று. இம்மந்திரத்திற்குக் கர்த்தாவாகவோ அல்லது இம்மந்திரத்தில் சித்திபெற்றே விளங்கிய ஒரு மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ருத்திரவரதவரு :- ருத்திரனிடம் வரம் பெற்றார். 
ருத்திரகண்டிதவரு :- ருத்திராட்சத்தைக் கழுத்தில் தரித்தவர்.

8/14/13

109 .தௌபாய மகரிஷி கோத்ரம்

வேதவியாச மகரிஷியின் பெயர்களுள் இதுவும் ஒன்று.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அல்லாடிதவரு :- ஆந்திராவில் உள்ள அல்லாடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சித்தாதவரு :- சித்திகளைப் பெற்று வாழ்ந்தவர். 
சிவகங்கையவரு :- கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் சிவகங்கை என்னும் ஊர்கள் உள்ளன. இவ்வூர்களில் ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சிவத்யானதவரு :- சிவனைத் தியானம் செய்து வாழ்ந்தவர். 
செந்திதவரு :- செந்தி என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
நாகஅஞ்சுதவரு :- நாகப்பாம்பின் உருவம் விளங்கும் கரையை உடைய ஆடையை மட்டும் உடுக்கும் பழக்கம் உடையவர். 
பவடம்தவரு :- பவள நகையை அணிபவர். 
ஜூரஜாதவரு :-