ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் துணை
"ஆஷாடநாயகி சௌடேஸ்வரி"
நீல வண்ண பட்டுடித்தி
நித்திலமாய் நீலகண்டன் இடப்பாகம் கொலுவிருக்கும்
எங்கள் குல தேவியம்மா !!
நித்திலமாய் நீலகண்டன் இடப்பாகம் கொலுவிருக்கும்
எங்கள் குல தேவியம்மா !!
மக்களோட துன்பம் தீர - உன்
மல்லிகை அடிஎடுத்து குண்டத்தில் நடந்துவந்தாய் !!
மல்லிகை அடிஎடுத்து குண்டத்தில் நடந்துவந்தாய் !!
தன் குழந்தை குரல் கேட்டு மனம்
தாளாது ஓடோடி வந்து குலம் காத்தாய் !!
தாளாது ஓடோடி வந்து குலம் காத்தாய் !!
வெள்ளியிலே விண்ணுயர கோவில்கட்டி
தங்கத்திலே கோபுரம் வைத்தாலும்
தித்திக்கும் வெல்லத்து கோட்டையிலே தான் நீ அமர்வாய்...!!!
மாணிக்க பந்தலிட்டு மனமுருகி நின்றாலும்
தேன்கரும்பு பந்தலில்தான் நீ கொலுவிருப்பாய் !!
தங்கத்திலே கோபுரம் வைத்தாலும்
தித்திக்கும் வெல்லத்து கோட்டையிலே தான் நீ அமர்வாய்...!!!
மாணிக்க பந்தலிட்டு மனமுருகி நின்றாலும்
தேன்கரும்பு பந்தலில்தான் நீ கொலுவிருப்பாய் !!
ஆஷாட அமாவாசை இரவிலே
கோடி சூரியபிரகாசமாய் தோன்றிய சந்திரமதி நீ !
உன்னை வணங்க உன் மக்கள் எல்லாம் - நீ
நிலைகொள்ளும் தரிக்குழியை தான் விடுத்து
தலையிலே தீர்த்தம் ஏந்தி உன் வாசல் வருகிறோம் !!
சொன்ன சொல் தவறாமல் எங்களை காப்பாயே
எங்கள் குல தெய்வமே !!!
கோடி சூரியபிரகாசமாய் தோன்றிய சந்திரமதி நீ !
உன்னை வணங்க உன் மக்கள் எல்லாம் - நீ
நிலைகொள்ளும் தரிக்குழியை தான் விடுத்து
தலையிலே தீர்த்தம் ஏந்தி உன் வாசல் வருகிறோம் !!
சொன்ன சொல் தவறாமல் எங்களை காப்பாயே
எங்கள் குல தெய்வமே !!!
தேவலரை எங்களுக்கு காப்பாற்றி கொடுத்து எல்லோர்
மானம் காக்கும் கடமையை செய்யவைத்து கெச்சாள நாயகியானாய்!!
மானம் காக்கும் கடமையை செய்யவைத்து கெச்சாள நாயகியானாய்!!
அமாவாசை நாயகியே!!! ஐந்திரண்டு ஏழு பேருடன்
விளையாடிய படியே ஈரேழுலோகமதில் புகழுடன்
எங்கள் குலம் வாழ அருள்புரிவாயே
ஆஷாடநாயகி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே !!!
-ர.பார்த்திபன்
பொள்ளாச்சி
No comments:
Post a Comment