ஆடி அமாவாசையன்று அவதரித்த அன்னையே
அகிலமெல்லாம் வாழும் மக்களுக்கு ஆடை நெய்ய சொன்னியே
சகல சௌபாக்கியங்களை நல்கும் சௌடேஸ்வரியே
தேவாங்க மக்களின் குலத்தெய்வம் நீயே
கத்தியிட்டு நாங்கள் அழைத்தோம்
கருணையோடு பேச வருவாய்
கரும்பு பந்தலில் கொலுவிருந்து
கண்கொள்ளா காட்சி அளித்தாய்
வீரத்துடன் வீரகுமாரர்கள் தண்டகங்கள் முழங்க
வீரமுட்டியும் காவலுக்குத் துணை நிற்க
வீதி வீதி எல்லாம் நீ பவனி வர
விரதங்கள் நிறைவேறுமே நீ அருள் புரிய
No comments:
Post a Comment