அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/26/13

90 .தசீத மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அர்த்ததவரு :- வியாக்கியானம் இயற்றியவர். உட்பொருள் விளக்கங்கள் எழுதியவர்கள். அர்த்த சாஸ்திரத்தில் வல்லவர். சாணக்கியரால் இயற்றப்பட்ட இந்நூலில் வல்லவர். தமிழில் இது பொருள்நூல் என்று அழைக்கப் பெரும். குடி, படை, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறினைப் பற்றிய நூல் அர்த்த சாஸ்திரம் எனப்படும். 
அல்லகதவரு ;- கர்நாடகாவில் உள்ள அல்லகம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
கனகதவரு ;- பொன்நகை அணிந்தவர். பொன் வணிகம் செய்தவர். தங்கமான குணம் கொண்டவர். 
ஊர்த்தரபுண்டரதவரு ;- ஊர்த்துவபுண்டரமான திருமண் இட்டுக்கொள்பவர். 
திலகதவரு :- நெற்றியில் கஸ்தூரித்திலகம் இட்டுக்கொள்பவர். 
யாராசிதவரு :- யாராசி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

No comments:

Post a Comment