அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/13/13

75 .சுக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- இவர் வேத வியாசரின் குமாரர். வேதவியாசருக்கு அரணியிடமாகப் பிறந்தார். பிறந்தவுடன் மகா ஞானியாய்ப் பிரம்ம ஞானியாய் இருந்தார். நாரதமா முனிவர் இவர்க்கு மேலும் ஞானோபதேசம் செய்தார்.

முழுஞானம் பெற்ற இவர் சுகப்பிரம்மம் என்று அழைக்கப்பட்டார். தந்தையைப் பிரிந்து தவத்திற்குச் சென்றார். இவரின் பிரிவு தாங்காத வியாசர் மகனே! மகனே! என்று அழைத்துப் பின் செல்ல தாவரங்கள் அனைத்தும் ஏன்? ஏன்? என்று பதில் கூறின. எனவே சுகப்பிரம்மம் அனைத்திலும் வியாபித்து இருக்கின்றார் என்று அறிந்தார் வியாசர்.

தந்தையைக் காட்டிலும் தவவன்மை மிக்கவர் சுகப்பிரம்மம். சனகரிடமும் ஞான உபதேசம் பெற்றார்.

வியாசரும் சுகரும் ஒருமுறை நதிக்கரை வழியே சென்று கொண்டு இருந்தனர். நதியில் தேவப்பெண்கள் நீராடிக்கொண்டு இருந்தனர். முன்னால் சென்ற சுகமகரிஷியைக் கண்டும் கவலையின்றி நீராடிய தேவப்பெண்கள் பின்னால் வந்த வியாசரைக் கண்டு வெட்கமுற்று ஆடைகளால் உடலை மறைத்தனர்.

இதனைக்கண்டு வியந்த வியாசர் அவர்களிடம் காரணம் கேட்டார். என்மகன் வாலிபன், அவனைக்கண்டு வராத வெட்கம் கிழவனான என்னைக்கண்டு உங்களுக்கு வந்ததேன் என்று கேட்டார்.

சுவாமி! அதோ பாருங்கள் உங்கள் மகன் எதனையும் காணாது சென்று கொண்டு இருக்கின்றார். அவர் கண்களுக்கு அனைத்தும் பிரம்மமாய்த் தோன்றுகின்றன. உமக்கு அப்படி இல்லையே! ஆண் பெண் என்னும் வேறு பாடுகள் உமக்குத் தெரிகின்றன. அதனால் உங்களைக் கண்டவுடன் வெட்கமுற்றோம் என்றனர் தேவப் பெண்கள்.

எனவே அனைத்திலும் பிரம்மத்தைத் தரிசிக்கும் பக்குவம் சுகமகரிஷிக்கு இருந்தது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காருபா்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபா்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அரணியதவரு :- அரணி - நெருப்பு, நாள்தோறும் தவறாது யாகம் செய்பவர்.
கங்காதவரு :- கங்கா தேவியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
கண்டசரதவரு :- கண்டம் - கழுத்து. கழுத்தில் சரம் அணிந்தவர். கண்டசரம் என்னும் அணியை அணிந்தவர்.
குடிகலதவரு :- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.
குர்ரம்வாரு :- குர்ரம்-குதிரை. குதிரைச் செல்வம் மிக்கவர். குதிரை வாகனம் உடையவர்.
கெரடிதவரு :- சிலம்ப விளையாட்டிற்குக் கெரடி என்று பெயர். சிலம்பத்தில் வல்லவர்.
துபாகிதவரு :- துப்பாக்கி வைத்து இருப்பவர். விருதுகளில் ஒன்றாக பிற்காலத்தில் துப்பாக்கியும் சேர்க்கப்பட்டது.
நாகப்பதவரு :- நாகராஜ வழிபாடு செய்பவர். நாகப்பன் என்பவர் வம்சாவளியினர். குடும்பத்தில் முதல் மகனுக்கு நாகப்பன் என்றும் முதல் மகளுக்கு நாகம்மா என்றும் பெயர் சூட்டுபவர்கள்.
நேபாளதவரு :- நேபாளதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ராமனதவரு :- ஸ்ரீ ராமனை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
அரசணதவரு :- மஞ்சள் நிறம் உடையவர்.
கங்காதரதவரு :- கங்காதரனை வீட்டுத் தெய்வமாகக் கொண்டவர்.
கல்யாணதவரு :- மங்களமானவர். மங்கள காரியங்களைத் தர்மமாக நடத்திக் கொடுப்பவர்.
கர்ஜினைதவரு :- மேக முழக்கம் போல் கர்ஜிப்பவர். பேசினால் கர்ஜினையாக இருக்கும்.
தசிமாணிக்யதவரு :- மாணிக்கம் முதலான ரத்தின நுணுக்கங்கள் உணர்ந்தவர்.
வாசிதவரு :- வாசியோகம் கற்றவர்.
முத்துதவரு :- முத்து நகை அணிபவர்.
ராகதவரு :- ராகதீபம் எடுப்பவர்.
மேளதவரு :-
நெரதாதவரு :- நிர்ணயம் தவறாதவர்.
பில்லளதவரு :- அதிகமான மக்களைப் பெற்று வாழ்ந்தவர்.
ப்ருத்திவிதவரு :- பிருதிவியை - மண்ணை வணங்குபவர்.
மரளிதவரு :- மரளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மாதனதவரு :- செல்வந்தர்களாக வாழ்ந்தவர்.
இந்தனதவரு :- யாகத்திற்குச் சமித்துக்கள் கொடுத்தவர்.
வ்ராசேட்டிதவரு :- சித்திரக்கலை வல்லவர்.
அரகணதவரு :- அரகணதவரு என்பது அரசணதவரு என்றும் வழங்கப்படுகிறது.
கராதவரு, கெட்யம்தவரு, கரதிலம்தவரு, சண்டாதவரு, சினகூடதவரு, நிடதலதவரு, பக்குலதவரு, பம்மிதவரு, பெக்குலதவரு, முசலிதவரு.

No comments:

Post a Comment