அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/23/13

தேவலரின் ஆட்சியும் மக்கட்பேறும்

தேவாங்க மன்னனின் ஆட்சியில் பகைவர்கள் வணங்கினர். நால்வகை வருணத்தாரும் தமக்குரிய நெறியில் நின்றனர். அறநூல் முறைப்படி யாவரும் வாழ்ந்தனர். முப்பத்திரண்டு அறங்கள் எங்கும் சிறந்தன. நாட்டில் பகையே இல்லை. புலியும் மானும், எலியும் பாம்பும் பகை மறந்து நட்போடு பழகின. தவக்குறைவும் மகப்பேறின்மையும் எவரிடத்தும் இல்லை. நற்குணம், அன்பு, நன்மை, உறுதி, கருணை, மெய்யுணர்வு, கல்வி நாளுக்கு நாள் நாட்டில் ஓங்கி வளர்ந்தன. அதனால் நாட்டில் அழிவோ வறுமையோ அலைச்சலோ இல்லை. இவ்வாறு எல்லாச் சிறப்புகளும்பெற்று விளங்கிய சகர நாட்டைத் தேவலமன்னன், தன் கீழ் வாழும் முடிமன்னர்கள் அன்புடன் திறை செலுத்த, நீதியோடு ஆட்சி புரிந்து வந்தார். அந்நாளில் தேவதத்தை கருத்தரித்து மூன்று மக்களை ஈன்றாள். இவர்களுக்குத் திவ்யாங்கன், விமலாங்கன், தவளாங்கன் எனப் பெயரிட்டு நன்கு வளர்த்தார். இவர்களும் மணப்பருவம் எய்தியதும் இவர்களுக்கு சூரியதேவனின் புதல்விகள் பிரபை பத்மாட்சி கமலாட்சி என்பவர்களை மணமுடித்து வைத்தார். பின் மூத்தமகன் திவ்யாங்கனுக்கு மணிமுடி சூட்டி ஆட்சியை நல்கி மகிழ்ந்தார். மன்னனின் மற்றோர் மனைவி நாககன்னி சந்திரரேகையும் ஒரு மகவை ஈன்றாள். அக்குழந்தைக்குச் சுதர்மன் என்று பெயரிட்டு வளர்த்தார். அவனும் எல்லா கலைகளையும் கற்றுணர்ந்து வல்லவனானான். அது சமயம் குசைத் தீவை ஆளும் சூரசேனன் என்னும் மன்னன் ஆமோத நகர் மீது பெரும் படையோடு போருக்கு வந்தான். தேவாங்க மன்னன் பெரும் படை கொண்டு எதிரியுடன் போரிட்டு சூரசேனனைக் கொன்று அவன் ஆண்ட குசைத் தீவையும் கைப்பற்றித் தன் மகன் சுதர்மனை அந்நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டி ஆட்சியில் அமர்த்தினார். பின் சுதர்மனுக்கு அவந்தி நாட்டு மன்னனின் மகள் புட்கலையை மணம் செய்வித்தார். இவ்வாறு மக்கள் சிறக்கத் தவம்புரி மறையவரும் உலக மக்களும் போற்றும்படியாக குபேரனை ஒத்துச் செல்வ வாழ்வில் சிறப்புற்று ஓங்கி இருந்தார்.

No comments:

Post a Comment