அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/11/13

தண்டகம் - 3

திருவளம பரமகுரு
 ராமலிங்கேசுவரரோடு
 சித்தம சிவசக்தியே
 தெய்வநாயகனை   படைத்திட்ட
 முக்கன்னியே
 ஜகமெலாம் புகழ்தாயே
 சிங்கவாகன நங்கையே
 அலமேலு மங்கையே
 சுற்றியே சூரிய வான் விளங்க
 பெருகு வளர் ரோச முரசு
 போர் பெற்ற டம்மாரம்
 பெரிய மல்லரி மத்தளம்
 போலவே பதினெட்டு
 மேள வாத்தியத்துடன்
 ஓர்  முகம் தன்னில் இருந்து
 பொருதியே  அசுரரை
 தோள் வீழ தலை வீழ
 காளி கூளி என
 கண பூதங்களுக்கு
 ரண விருந்திட்ட தாயே
 புளிய மாநகர் தன்னில்
 அருகு போல் தழைத்து
 ஆல் போல் வேரூன்றி
 எமை காத்து ரட்சிப்பாயே
 ஸ்ரீ வீர சௌடேஸ்வரி

No comments:

Post a Comment