அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

10/4/13

அருள்மிகு ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர் திருக்கோவில்

சிருங்க தேவ மகரிஷி கோத்ரம் . முச்சளதவரு வங்குசம்  தயாதிகளுக்கு  பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர் திருக்கோவில் , தேவாரம்
கோவில் படங்கள் :










 அருள்மிகு ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர்

  இந்த இடத்தில் தான் "பெத்தராய்"   என்னும் கன்னிமார் தெய்வங்களை  ஒரே பெட்டியில் அவர்குளுடைய பூஜை பொருட்கள் வஸ்திரங்கள் மற்றும் காதோலை கருகமணிகள் எல்லாம் வைத்து பூஜை நடைபெறுகிறது .



படங்களை அனுப்பிய திரு. செல்வம்  , ஜுபிடர் சைக்கிள் மார்ட், போடி அவர்களுக்கு நன்றிகள்

அகத்திய மகரிஷி கோத்ரம் லத்தேகாரர் வங்குசம் 23ம் ஆண்டு புரட்டாசி சனிவார பூஜை அழைபிதழ்


136 .புருகூத மகரிஷி கோத்ரம்

பிரகஸ்பதியின் அம்சமான ஒரு மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சுக்ஞானதவரு :- நல்ல ஞானம் உள்ளவர். 
படவலதவரு :- படகுகளில் பயணம் செய்தவர். 
பட்டாதவரு :- மன்னர்களிடமிருந்து பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றவர். 
குருபீடாதிபதிகளிடமிருந்தோ அல்லது சிம்மாசனாதிபதிகளிடமிருந்தோ பட்டகாரராக இருப்பதற்கு நியமனம் பெற்றவர். இந்நியமனத்திற்குப் பட்டயங்கள் வழங்குவது வழக்கம்.

10/3/13

135 .புரட்ச மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காமரூபதவரு ;- மன்மதன் போன்ற அழகான வடிவினர். காமரூப தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

10/2/13

134 .புண்டரீக மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷி பௌண்ட்ர யாகம் செய்தவர். இம்முனிவர் யாகம் செய்கையில் அசுரர்கள் யாகத்தில் அவிர்ப்பாகம் கேட்டு முனிவரைத் துன்பம் செய்தனர். உடனே முனிவர் மண்டபம் ஒன்றைச் சிருஷ்டி செய்தார். அரக்கரை மண்டபத்தில் தங்கச் செய்தார். வாத்திய கோஷங்கள் முழங்கச் செய்தார். ஒரு விதவைப் பெண்ணையும் ஒரு பிரம்மச்சாரியையும் படைத்தது இருவரையும் மண்டபத்தினுள் உரக்க விவாதம் செய்யவைத்தார். அரக்கர் வாத்திய முழக்கத்தையும், விவாதத்தினையும் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கையில் தேவர்க்கு அவிர்ப்பாகம் கொடுத்து யாகத்தைப் பூர்த்தி செய்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஞ்சனதவரு :- மை போட்டுப் பார்ப்பவர். பக்தியையே கண்ணிற்கு அஞ்சனமாக இடுபவர். 

உத்தரதேசதவரு :- வடதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

கண்ட்ளபுலியவரு :- புலியின் கண்களைப் போன்ற கண்களை உடையவர். 

கொம்பாலதவரு :- வெப்பாலை மரத்தடியில் வீட்டுத்தெய்வம் வணங்குபவர். 

துபாகிதவரு :- அம்பிகைக்குரிய 32 விருதுகளில் துப்பாக்கி ஒன்று. துப்பாக்கியை விருதாகப் பிடிப்பவர். 

புலிக்கண்ணதவரு, புலிக்கண்ட்ளதவரு :- புலிக்கண்கள், புலிப்பார்வை உடையவர்.