அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
9/30/13
132 .பீமக மகரிஷி கோத்ரம்
மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
குடகியதவரு :- குடகுப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொண்டீவரதவரு :- வடகர்நாடகாவில் உள்ள கொண்டீவர என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜலஸ்தம்பதவரு :- தண்ணீரைக் கட்டி அதன் மீது நடப்பதும், உள்ளே மூழ்கி அகமருஷண ஜபம் செய்வதுமாகிய யோகவன்மை மிக்கவர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
சிணிகியதவரு :- சிணுங்கல் குணம் கொண்டவர்.குடகியதவரு :- குடகுப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொண்டீவரதவரு :- வடகர்நாடகாவில் உள்ள கொண்டீவர என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜலஸ்தம்பதவரு :- தண்ணீரைக் கட்டி அதன் மீது நடப்பதும், உள்ளே மூழ்கி அகமருஷண ஜபம் செய்வதுமாகிய யோகவன்மை மிக்கவர்.
9/29/13
பொள்ளாச்சி சௌண்டம்மன் திருவிழா அழைப்பிதழ்
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் துணை
பொருளாட்சி செய்யும் பொள்ளாச்சி மாநகர் தனில் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருகோவிலில் 72ம் ஆண்டு நவராத்திரி கலை விழா மற்றும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு சேவை மற்றும் அம்மன் சிம்மவாகனத்தில் வீதி உலா 14-10-2013 திங்கட்கிழமை மாலை நடைபெறும்.
தினமும் மாலை 5.30- 7.30 மணி வரை ஹோமங்களும் கலைநிகழ்ச்சி களும் நடைபெறும் . 7.30-8.00 மணி வரை குலம் காக்க கொலுவிருக்கும் அம்பிகைக்கு சிறப்பு நவராத்திரி கொலு மஹா பூஜை நடைபெறும்.
அனைவரும் வருக பொள்ளாச்சி ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் அருள் பெருக!!
தேவாங்க ப்ளாக் மூலமாக அனைவருக்கும் விழா அழைபிதழ் அனுப்பிய செல்வி சுஷ்மிதா சந்திரசேகர், பொள்ளாச்சி அவர்களுக்கு நன்றி...
131 .பிருகு மகரிஷி கோத்ரம்
பிரம்மதேவரின் மானச புத்திரரில் இவர் ஒருவர். பிருகு மகரிஷிக்குப் புலோமிசை, கியாதி என்போர் பத்தினிகள். ஒரு முறை இம் மாமுனிவர் தம்மனைவி புலோமிசையை யாகத்திற்காக அக்நியை வளர்க்கச் சொல்லி நீராடச் சென்றார்.
கர்ப்பிணியாய் இருந்த புலோமிசையை அரக்கன் ஒருவன் தூக்கிச் சென்றான். கர்ப்பத்தில் இருந்த குழந்தை நழுவி வெளிவந்தது. குழந்தை அரக்கனை எரித்தது. நழுவிப் பிறந்ததால் அக்குழந்தைக்கு சியவனன் என்ற காரணப்பெயர் பெற்றது.
இதனை அறிந்த பிருகு மகரிஷி; அரக்கன் தன் மனைவியைத் தூக்கிச் செல்லும்போது அருகிலே இருந்தும் அவனைத் தடுக்காததால் அக்நி மீது கோபம் கொண்டார். இனி அக்நி சுத்த வஸ்த்துக்கள் அன்றி அசுத்த வஸ்த்துக்களையும் எரிக்கக் கடவன் என்று சபித்தார்.
மும்மூர்த்திகளில் சத்துவகுணம் கொண்ட மூர்த்தி யார் ? என்று அறிந்து கொள்ள மகரிஷிகள் ஒருமுறை விரும்பினார். மகரிஷிகள் பிருகு மகரிஷியைத் திரிமூர்த்திகளிடம் அனுப்பினர்.
கைலாயம் சென்ற பிறகு ருத்திரனை லிங்கவடிவமாக்கியும், சத்தியலோகம் சென்று பிரம்மனுக்குப் பூசனைகள் அற்றுப் போகும் படியும் சபித்து, வைகுண்டம் சென்றார்.
வைகுண்டநாதனை மார்பில் உதைத்தார். திருமால் அவர் கால்களைப் பிடித்து விட்டு அவரின் அகந்தையை அழித்தார். திரிமூர்த்திகளில் ஸ்ரீ மகாவிஷ்ணுவே சத்துவகுணம் கொண்ட மூர்த்தி என அறிந்து வந்து முனிவர்களுக்கு அறிவித்தார்.
வருணனுடைய சந்ததி இவர் என்று யஜூர் வேதம் முழங்கும்.
மாண்டெயதவரு :- மாண்டியா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மாடதவரு :- மாடமாளிகை கட்டி வாழ்ந்தவர். ஆலயங்களுக்கு மாடங்கள் கட்டித் தந்தவர்.
கட்லாபுரியதவரு :- கட்லாபுரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நாசிகதவரு :- மூக்குபற்றி வந்த ஒரு பெயர்.
கும்மனதவரு :-
கர்ப்பிணியாய் இருந்த புலோமிசையை அரக்கன் ஒருவன் தூக்கிச் சென்றான். கர்ப்பத்தில் இருந்த குழந்தை நழுவி வெளிவந்தது. குழந்தை அரக்கனை எரித்தது. நழுவிப் பிறந்ததால் அக்குழந்தைக்கு சியவனன் என்ற காரணப்பெயர் பெற்றது.
இதனை அறிந்த பிருகு மகரிஷி; அரக்கன் தன் மனைவியைத் தூக்கிச் செல்லும்போது அருகிலே இருந்தும் அவனைத் தடுக்காததால் அக்நி மீது கோபம் கொண்டார். இனி அக்நி சுத்த வஸ்த்துக்கள் அன்றி அசுத்த வஸ்த்துக்களையும் எரிக்கக் கடவன் என்று சபித்தார்.
மும்மூர்த்திகளில் சத்துவகுணம் கொண்ட மூர்த்தி யார் ? என்று அறிந்து கொள்ள மகரிஷிகள் ஒருமுறை விரும்பினார். மகரிஷிகள் பிருகு மகரிஷியைத் திரிமூர்த்திகளிடம் அனுப்பினர்.
கைலாயம் சென்ற பிறகு ருத்திரனை லிங்கவடிவமாக்கியும், சத்தியலோகம் சென்று பிரம்மனுக்குப் பூசனைகள் அற்றுப் போகும் படியும் சபித்து, வைகுண்டம் சென்றார்.
வைகுண்டநாதனை மார்பில் உதைத்தார். திருமால் அவர் கால்களைப் பிடித்து விட்டு அவரின் அகந்தையை அழித்தார். திரிமூர்த்திகளில் ஸ்ரீ மகாவிஷ்ணுவே சத்துவகுணம் கொண்ட மூர்த்தி என அறிந்து வந்து முனிவர்களுக்கு அறிவித்தார்.
வருணனுடைய சந்ததி இவர் என்று யஜூர் வேதம் முழங்கும்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
ஜாலகல்லதவரு :- ஜாலகல்ல என்னும் ஊர்க்காரர்.மாண்டெயதவரு :- மாண்டியா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மாடதவரு :- மாடமாளிகை கட்டி வாழ்ந்தவர். ஆலயங்களுக்கு மாடங்கள் கட்டித் தந்தவர்.
கட்லாபுரியதவரு :- கட்லாபுரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நாசிகதவரு :- மூக்குபற்றி வந்த ஒரு பெயர்.
கும்மனதவரு :-
Subscribe to:
Posts (Atom)












