அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

10/7/14

பெரிய வாளவாடி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா 2014

வளம்கொளிக்கும் பெரிய வாளவாடி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா 2014 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது அதில் ஸ்ரீ சௌடாம்பிகா இளைஞர்அணியினர் கலை இலக்கிய விளையாட்டு போட்டிகளுடன்  சிறப்பாக விழாவை நடத்தி உள்ளார்கள். புகைப்பட தொகுப்பு நன்றி செல்வன் குமாரவேல், வாளவாடி









































பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா 2014

பெரியநெகமம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நவராத்திரி விழா வின் கடைசி நாள் தசரா அன்று காலை சக்தி திருமஞ்சனம் (தண்டுலி நீரு கொண்டுபராது ) அலகு வீரர்களின் வீரமிகு அலகுசேவையுடன் ... நடைபெற்றது..






















அதோடு ராகு தீபம் மெரவுணை மற்றும் இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வில் அம்புடன் ... அம்பு சேவை என்னும் அரக்கவதம் முடிந்து ...








அடுத்தநாள் சௌடேஸ்வரி தேவி ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் திருகல்யாண காட்சி











 புகைப்பட தொகுப்பு .. படங்களுக்கு நன்றி திரு சாரதி... பெரிய நெகமம் ஊர் செட்டிமை. மற்றும் ஊர் பொது மக்கள் . இளைஞர் அணியினர் .

8/24/14

சர்வ சக்தி மஹா சண்டியாக விழா- திருமூர்த்தி மலை 14-09-2014 sunday

சீரோங்கும் திருமூர்த்தி மலை தன்னில் ஓர் சரித்திர நிகழ்வு !!!

தேவாங்க சமுதாய நலன் வேண்டி ஹம்பி ஹேம கூட காயத்ரி பீட தேவாங்க ஜகத்குரு . ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி  சுவாமிகள் அவர்களின் சீரிய தலைமையில். ..  வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் நாள்  (14-09-2014)  ஞாயிற்றுகிழமை   சர்வ சக்தி மஹா சண்டியாக  விழா சிறப்பாக நடைபெற உள்ளது அனைவரும் வருக அம்மன் அருள் பெருக .
...

சண்டி யாகம் நடத்தி வைப்பவர்கள்
சேலம் புலவர் மா. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் தலைமையில்  சிவ ஸ்ரீ . சிவ மணிகண்ட சாஸ்த்ரிகள் மற்றும் குழுவினர் 






நன்றி செல்வன் பிரேம் குமார் திருப்பூர்