அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/25/14

சாவகட்டுப்பாளையம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா

சாவகட்டுப்பாளையம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா

சாவக்கட்டுப்பாளையம்  ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகம் மற்றும் பெருவிழா(தொட்டு அப்ப) ஜூன் 2-5 ஆம் தேதி களில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல் படி சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் கொங்கு மண்ணில் இதுவரை கண்டிராத வகையில் சிறப்பாக கும்பாபிஷேகத்துடன்  பெருவிழா அதாவது தொட்டு அப்ப , ஸ்ரீ சக்தி , ஸ்ரீ சாமுண்டி , மஹா ஜோதி , பூ  குண்டம்  ஆக அம்மன் அருளி அழகான வெல்ல கோட்டையில் , கரும்பு பந்தலில் கொலுவிருக்கும் அழகை காண அனைவரும் வாருங்கள் கண்டு ஆனந்தம் கொள்ளுங்கள்.

 

 

 பெருவிழா சேலம் கருங்கல்பட்டி வீரக்குமாரர்களால் நடத்தி வைக்கப்படுகிறது .

நன்றி சாவக்கட்டுப்பாளையம் விழா குழுவினர்

No comments:

Post a Comment