அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/15/14

கடவுள் மட்டும் எப்படி தானாக உருவாக முடியும்

 கேள்வி :  இந்த பூமி இந்த அண்ட வெளி இந்த நட்சத்திரங்கள் எல்லாமே தானாக உருவாக முடியாது என்பதை ஒத்துக்கொள்கிறோம். அப்படி இருக்கும்போது கடவுள் மட்டும் எப்படி தானாக உருவாக முடியும்  ? 

எனது சிந்தனை : 

இந்த அண்டத்தில் முதலில் உருவானது ’’ம்’’  மட்டுமே.  { நிசப்தத்தில் கேட்கும் ஒரே ஒலி தியானத்தில் அமர்ந்தால் கிடைக்கும் கடைசி ஒலி } பின்பு அது ’’ஓம்’’ ஆனது அதில் இருந்து உருவானவர்கள்தான் சிவன் ,பிரம்மா, விஸ்ணு ஆகியோர். இவர்களுக்கு படைத்தல்,காத்தல், அழித்தல் ஆகிய பொருப்புக்கள் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு துணையாக மூன்று தேவியர் உருவாக்கப்பட்டனர்.

அவர்கள் மூலமாக தேவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவர் அவர்களுக்கு தனித் தனி வேலைகள் கொடுக்கப்பட்டன. தங்களை உருவாக்கிய மும்மூர்த்திகளையும் தேவர்கள் வணங்கத்துவங்கினர்.

அப்போதுதான் மும்மூர்த்திகளுக்கும் தங்களை உருவாக்கிய ஓம் காரத்திற்கு உருவம் வேண்டும் என்ற எண்ணம் உதித்தது  .  தம்மை உருவாக்கியவரை தாம் உருவாக்க முடியாது என்பதை உணர்ந்த அவர்கள் . ஓம் காரத்திற்கு உருவம் வேண்டும் என்று ஓம் காரத்தையே வேண்டிநின்றனர்.

அந்த வேண்டுதலுக்கு இணங்கி சிவ பார்வதி மைந்தனாக வினாயகப்பெருமானாக உருவமெடுத்தார்.
அது முதல் முழு முதற் கடவுளாக வினாயகப் பெருமானை வணங்கிவருகிறோம் .

அறிவியல் விளக்கம் :  அணு எப்படி வெடிப்பின் மூலம் உருவானதோ அதே போலத்தான் கடவுள் ஒலியின் மூலம் உருவானார். 

அணுவில் உள்ள புரோட்டான் ,எலக்ரான் , நியூட்ரான் ஆகியவை  சிவன் ,விஸ்ணு, பிரம்மாவின் புதிய பெயர்கள் அவ்வளவுதான் . தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும்  கருப்பு துகள் நமது கருமைநிற யானை உருவம் கொண்ட வினாயகப் பெருமான்தான்.

நமது சித்தர்கள் பல யுகங்களுக்கு முன்பு சொன்னதை நாம் இப்போதுதான் கண்டுபிடித்ததாக கூறிக்கொண்டு உள்ளோம்.

                                                                                                                                              சிந்தனை...
                                                                                                                                              வெ.ரா.பூபாலன்.
                                                                                                                                               15/03/2014.
      
                                                     

No comments:

Post a Comment