அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/21/14

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்[ 2 ]

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்[ 2 ]
சித்ராவதியில் இருந்து கிளம்பிய சிகண்டி ஐம்பதுநாட்கள் நதிகளையும் கோதுமைவயல்களையும் தாண்டி திரிகர்த்தர்கள் ஆண்ட ஹம்ஸபுரம் வந்துசேர்ந்தான். பசுங்கடல்வயல்கள், நீலமொழுகிய நதிகள், மக்கள் செறிந்த கிராமங்களைத்தாண்டி வந்துகொண்டிருந்த நாட்களில் ஒருமுறைகூட அவன் எவரிடமும் பேசவில்லை. அவனைக் கண்டதுமே கிராமங்களில் தலைமக்கள் எழுந்துவந்து வணங்கி ஊருக்குள் அழைத்துச்சென்றனர். அவனை வராஹியின் ஆலயமுகப்பில் அமரச்செய்து ஊனுணவளித்தனர். அவன் கைகாட்டியதும் படகுக்காரர்கள் வந்து பணிந்து அவனை ஏற்றிக்கொண்டனர். உடம்பெங்கும் சேறுபடிந்திருக்க, தலை புழுதியில் காய்ந்த புல்லாக ஆகியிருக்க அவன் நகர்ந்துசெல்லும் சிறு மண்குன்றுபோலிருந்தான். உறுமலே அவன் மொழியாக இருந்தது.
அஷிக்னி நதிக்கரையில் இருந்த காசியபபுரத்தைச்சுற்றி வண்டல்படிந்த வயல்வெளி பரவியிருந்தது. முற்றத்தொடங்கிய கோதுமைக்கதிர்கள் அடர்நீலநிறத் தாள்களுடன் செறிந்து நின்றன. வயல்வெளிகளை ஊடுபாவாக வெட்டிச்சென்ற வாய்க்கால்களின் நீரின் ஒலியும் சதுப்புகளில் படுத்திருந்த எருமைகளின் முகரியொலியும் நீர்ப்பறவைகளின் சிறகோசைகளும் அந்நிலத்தின் மொழியாக ஒலித்துக்கொண்டிருந்தன. வெயில்பரவிய வயல்வெளிக்கு நடுவே வணிகப்பாதையில் அஷிக்னி நோக்கிச் சென்ற பொதிவண்டிகள் நீரில் மிதப்பவை போலத் தெரிந்தன. அவற்றைத்தொடர்ந்து சென்ற சிகண்டி அஷ்கினியின் கரையை அடைந்தான்.
அஷிக்னியில் பாய்விரித்த படகுகள் சிறகசையாமல் மிதக்கும் பருந்துகள் போல அசையாத பாய்களுடன் தெற்குநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. மீன்பிடிப்பவர்களின் தோணிகள் மெல்ல அலைகளில் எழுந்தமர்ந்து நிற்க அவ்வப்போது அவற்றிலிருந்து தவளை நாக்குநீட்டுவதுபோல வலைகள் எழுந்து நீரில் பரவி விழுந்தன. அலைகள் மோதிக்கொண்டிருந்த அஷிக்னியின் கரையை உறுதியாக கல்லடுக்கிக் கட்டியிருந்தனர். கல்லடுக்குகளின் பொந்துகளுக்குள் புகுந்த நீர் எண்ணிஎண்ணிச் சிரிப்பதுபோல ஒலியெழுப்பியது.
நதிக்கரைமேலேயே வண்டிப்பாதை அமைந்திருந்தது. வண்டிகளின் பின்னால்சென்ற சிகண்டி தூரத்தில் ஹம்ஸபுரத்தின் கோட்டையைக் கண்டான். மலைப்பாறைகளை நீர்வழியாகவே உருட்டிவந்து ஏற்றி யானைகளைக்கொண்டு அடுக்கி உருவாக்கப்பட்ட உயரமான அடித்தளம் மீது சிறிய உருளைக்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட அந்தக்கோட்டை மழையில் கறுக்காத மஞ்சள்நிறமான கல்லடுக்குகளுடன் செதில்கள் நிறைந்த சாரைப்பாம்பு போலத் தோற்றமளித்தது. அதன்மேல் மரத்தாலான காவல்கோபுரங்களில் வெண்பட்டில் செந்நிறமாகத் தீட்டப்பட்ட சூரியனின் சின்னம் இருந்தது.
கோட்டைக்கு முன்பக்கம் மிகப்பெரிய படகுத்துறை இருந்தது. அதன் இருபக்கமும் வண்டிப்பாதைகள் வந்து இணைந்தன. நதியில் வடக்கில் இருந்தும் தெற்கில் இருந்தும் வந்த படகுகளும் இருபக்கச் சாலைகளும் சந்திக்கும் நான்மையமாக இருந்தது அந்தத் துறை. நதியில் அலைகளில் எழுந்து விழுந்து நெருங்கி வந்த படகுகள் பாய்களைச் சுருட்டியபடி அணுகி பெரிய துறையைச் சேர்ந்தபோது கரையிலிருந்து கூச்சல் எழுந்தது. கயிறுகளை வீசி படகுகளை பிடித்துக்கட்டுபவர்களும் படகிலிருந்த துடுப்புக்காரர்களும் மாறி மாறி கூவிக்கொண்டனர். கயிற்றை பிடித்து இழுப்பவர்கள் உரக்கப்பாடினர். நெருங்கி வந்த படகு கரையில் இருந்த பெரிய மூங்கில்சுருள்களில் மோதி அதிர்வை இழந்து மெல்ல அமைதியடைந்தது.
படகுத்துறைக்கு அருகிலேயே மரக்கூரை போடப்பட்ட பண்டகசாலைகள் வரிசையாக நின்றன. நூற்றுக்கணக்கான வண்டிகள் அங்கே சுமைகளை ஏற்றிக்கொண்டும் இறக்கிக்கொண்டும் நின்றன. உயரமற்ற பெருங்களர்வா மரங்கள் பரவிநின்ற கோட்டைமுற்றம் முழுக்க வண்டிமாடுகள் நின்று கோதுமைவைக்கோலை மென்றுகொண்டிருக்க அவற்றின் கழுத்துமணிகள் சேர்ந்து ஒற்றை முழக்கமாகக் கேட்டன. மீன்மெழுகு பூசப்பட்ட கரியகூரைகொண்ட கூண்டுவண்டிகள் வெயிலில் வளைவுகள் மின்ன நுகம் ஊன்றி நின்றிருந்தன. தலைப்பாகைகளை அவிழ்த்துவிட்ட வணிகர்கள் மரத்தடிகளில் பாய்கள் விரித்து படுத்தபடியும் கழஞ்சும் தாயமும் விளையாடியபடியும் இருந்தனர்.
வெயிலுக்குக் கண்கள்கூச சிகண்டி கோட்டையை ஏறிட்டுப் பார்த்தான். பின்பு உள்ளே நுழைந்த அவனை நோக்கி வந்த வீரன் ஒருவன் முகத்தில் இழிவுச்சிரிப்புடன் “நீ எப்படி ஆயுதம் ஏந்தியிருக்கிறாய்? யார் உனக்கு ஆயுதமளித்தது?” என்றபடி சிகண்டியின் வில்லை பிடிக்கவந்தான். அவனுடைய இருகால்கள் நடுவே தன் காலைக்கொடுத்து ஒற்றைக்கையால் தூக்கிச் சுழற்றி வீசிவிட்டு சிகண்டி முன்னால் நடந்தான். புழுதியில் விழுந்தவன் எழுந்து ஆவேசமாக தன் வேலை எடுக்க மேலே இருந்த தலைவன் அவர்களின் மொழியில் ஏதோ சொல்ல அவன் வேலைத்தாழ்த்தினான்.
சிகண்டியை நோக்கி வந்த தலைவன் “வீரரே, இந்நகரில் எவருக்கும் அனுமதி உண்டு. ஆனால் ஷத்ரியர்கள் அல்லாதவர்கள் ஆயுதமேந்த அனுமதி இல்லை” என்றான். சிகண்டி “எந்த ஷத்ரியனுக்காவது என் ஆயுதத்தை பிடுங்க முடிந்தால் அதைச்செய்யலாம்” என்றான். தலைவன் சிகண்டியின் கண்களைக் கூர்ந்து சில கணங்கள் நோக்கினான். “வீரரே, இனி இந்நகருக்குள் செல்வது தங்கள் விருப்பம். தங்களை எந்த ஷத்ரியன் கொன்றாலும் இந்நகரம் அதை அனுமதிக்கும்” என்றான். சிகண்டி ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றான்.
மொத்தநகரமும் களிமண் நிறத்தில் இருந்ததை சிகண்டி கண்டான். உயரமில்லாத சிறிய சதுரவடிவ கட்டடங்கள். அஷிக்னியின் களிமண்ணை குழைத்துக் கட்டப்பட்டவை. கூரைகள் சாய்வாக இல்லாமல் சதுரமாக இருந்ததனால் அவை விதவிதமாக அடுக்கப்பட்ட பெட்டிகள் என்ற பிரமையை அளித்தன. சீரான நேர்கோடுபோலச் சென்ற அகன்றசாலைகளில் பெரும்பாலும் கோவேறு கழுதைகளில்தான் மக்கள் பயணம் செய்தனர். கழுதைகள் சிறிய பொதிகளுடன் சென்றன. அவையும் புழுதி நிறமாகவே இருந்தன. ஆனால் அதற்கு மாறாக மக்கள் சிவப்பு நீலம் பச்சை மஞ்சள் நிறங்களில் உடையணிந்து பெரிய பூக்கள் போல நடமாடினர். ஆண்கள் வண்ண உடைகள் அணிவதை சிகண்டி அங்குதான் முதல்முறையாக பார்த்தான்.
பல பகுதிகளாக பிரிந்துபிரிந்து சென்ற நகரமெங்கும் மக்கள் நெரிசலிட்டுக்கொண்டு நடமாடினர். நகரில் ஏன் அந்த நெரிசல் என்று சிகண்டி சற்று நேரம் கழித்து உணர்ந்தான். ஹம்ஸநகரம் அப்பகுதியில் இருந்த முக்கியமான வணிக மையம். அஷிக்னி நதியின் கரையில் இருந்த அத்தனை விவசாய கிராமங்களுக்கும் அப்பால் வறண்ட மலையடுக்குகளுக்குள் அமைந்திருந்த பல்லாயிரம் சிற்றூர்களுக்கும் அது ஒன்றே வெளியுலகம். அங்கே வாய்திறந்து விழிவிரிய நோக்கியபடி முண்டிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு வாழ்பவர்கள் அல்ல என்று தெரிந்தது.
நகரின் நடுவே வலப்பக்கம் அஷிக்னிக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட உருளைக்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட சிறிய உள்கோட்டை இருந்தது. அதற்கப்பால் ஏழடுக்கு அரண்மனையும் சமதளக் கூரையுடன் ஒரு மண்திட்டு போல எழுந்து தெரிந்தது. அதன் சாளரங்களில் மட்டும் செம்பட்டுத்திரைச்சீலைகள் ஆடின. கோட்டைக்கு முன்னால் ரதங்கள் சில நின்றன. காவல்வீரர்கள் மேலே ஒளிரும் ஈட்டியுடன் நின்றிருந்தனர். பெரிய முரசின் தோல்பரப்பில் பட்ட வெயில் கண்ணை அரைக்கணம் கூசச்செய்தது. இடப்பக்கம் சென்ற சாலை உயர்குடிகளின் சிறிய அரண்மனைகள் இருந்த பகுதியை நோக்கிச் சென்றது. நேர் முன்னால் உயர்ந்த முகடுடன் தெரிந்தது சூரியதேவனின் ஆலயம்.
சிகண்டி அந்தக் கோயிலைப்பார்த்தபடி சாலையில் நின்றான். பெரிய பாறைகளைக் குவித்து உருவாக்கப்பட்ட செயற்கைக் குன்றுக்குமேல் இருந்தது அந்த ஆலயம். குன்றின் மேல் ஏறிச்சென்ற பெரிய படிக்கட்டுகளால் மேலிருந்த கட்டடத்தின் காலடியில் கொண்டுசென்று சேர்க்கப்பட்ட மனிதர்கள் கைவிரல்கள் அளவேயுள்ள சிறிய பாவைகளாக அசைந்தனர். அவர்களின் தலைக்குமேல் பேருருவமாக எழுந்து நின்றன சுதையாலான ஏழு வெண்குதிரைகள். பெருங்கடல் அலை ஒன்று அறைவதற்கு முந்தைய கணத்தில் உறைந்ததுபோல, மலைச்சரிவில் இறங்கிய நதி நிலைத்தது போல அவை வேகமே அசைவின்மைகொண்டது போல விழித்த கண்களும் திறந்த வாயும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டு விதவிதமாகத் திரும்பிய நீள்கழுத்துகளுமாக துள்ளி நின்றன. அவற்றின் கனத்த குளம்புகள் அங்கிருந்த மனிதர்களின் தலைக்குமேல் நீட்டி நின்றன.
அவற்றின் பிடரிமயிரின் வண்ணங்கள் வேறுபட்டன. ஊதா, செந்நீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன்னிறம், சிவப்பு நிறங்களில் தழல்போல நீண்டு நெடுந்தூரம் பின்பக்கம் பறந்த பிடரிமயிரை மட்டும் மரத்தால் செய்திருந்தனர். குதிரைகளுக்குப்பின்னால் சுதையாலான பெரிய ஆலயத்தின் கூரை வெண்கலத்தகடுகளாலானது. மதியவெயிலில் பொன்னிறமாக அது ஒளிர்ந்தது. அதன் கீழே சுதைச்சுவர் இளஞ்சிவப்பு நிறமாகவும் வட்டமாகத் திறந்திருந்த வாயில் செந்நிறமாகவும் இருந்தது. சாலையிலிருந்து பார்த்தபோது பொன்னிறமான மேகங்களை மணிமுடியாக அணிந்து சூரியவட்டம் ஏழுகுதிரைகளில் வருவதுபோலிருந்தது அக்கோயில்.
சிகண்டி படிகளில் ஏறி மேலே சென்றான். அவனுடைய மண்படிந்த உடலைக்கண்ட மக்கள் அஞ்சி விலகி சுருங்கிய கண்களால் பார்த்தனர். தங்களுக்குள் கிசுகிசுவென பேசி பிறருக்கு சுட்டிக்காட்டினர். கோயிலைச்சுற்றி இருந்த பெரிய வட்டப்பாதையில் அண்ணாந்து சிலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவனைக்கண்டதும் அஞ்சி சிறிய கூச்சலுடன் விலகினர். கோயிலின் சுவர்களிலும் கூரைச்சரிவிலும் சுதையாலும் மரத்தாலும் செய்யப்பட்ட சிலைகள் நிறைந்திருந்தன. இதமான வண்ணங்கள் பூசப்பட்ட அழகிய சிலைகளின் கண்கள் நீலநிறமான சிப்பிகளால் அமைக்கப்பட்டு மெல்லிய ஒளியுடன் பார்ப்பவர்களின் கண்களைச் சந்தித்தன. உதடுகள் உயிரசைவு கொண்டு எக்கணமும் பேசமுற்படுபவை போலிருந்தன.
வலப்பக்கச் சுவரில் இருந்த பெரிய சிற்பத்தொகை காசியப பிரஜாபதிக்கு அதிதிதேவியில் சூரியன் பிறப்பதைக் காட்டியது. காசியபரின் வெண்ணிறத் தலைமயிர் விரிந்து மேகங்களாகப் பரவியிருந்தது. அந்த மேகங்களில் முனிவர்களும் தேவர்களும் அமர்ந்திருந்தனர். அவரது தலைக்குமேல் குனிந்துநோக்கி அருள்புரிந்தபடி பிரம்மனும் விஷ்ணுவும் பறந்துகொண்டிருந்தனர். காசியபரின் தாடி அருவிபோல வெண்ணிறமாகக் கொட்டி கீழே வழிந்து இரண்டு பக்கமும் அலைகளாக ஓடிக்கொண்டிருக்க அதில் நாகங்களும் மீன்களும் நீந்தின. அவரது உடல் பொன்னிறமானதாக இருந்தது.
அவர் அருகே இருந்த தட்சனின் மகளாகிய அதிதிதேவி பெண்ணின் தலையும் தோள்களும் மார்பகங்களும் கொண்டிருந்தாள். இடைக்குக் கீழே கரிய சுருள்களாக அவளுடைய பாம்புடல் விரிந்திருக்க அதன்மேல்தான் காசியபர் அமர்ந்திருந்தார். ஒரு கையால் அவள் இடையைத் தழுவி மறுகையை விரித்து அதில் நீர்க்குடம் வைத்திருந்தார். அதிதியின் ஒரு கையில் தழல் இருந்தது. மறுகையில் அவள் குழந்தையான சூரியனை வைத்திருந்தாள். செந்தழல்மகுடம் அணிந்த பொன்னிற உடலுடன் சூரியக்குழந்தை ஒருகையால் ஒளிச்சின்னமும் மறு கையால் அருள்சின்னமும் காட்டி புன்னகை செய்தது.
VENMURASU_EPI_44
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அதிதியின் மைந்தர்களான பன்னிரண்டு ஆதித்யர்களும் அவர்களுக்கு இருபக்கமும் ஒளிமுத்திரையும் தழல்முடியுமாக நின்றனர். அவர்கள் காலடியில் அதிதிபெற்ற பன்னிரு ருத்ரர்களும் நீலநிறமான உடலும் பறக்கும் செந்தழல் உடல்களுமாக வீற்றிருக்க மேலே எட்டு வசுக்களும் வெண்ணிற உடலும் நீலநிறமான கூந்தலுமாக பறந்துகொண்டிருந்தனர்.
ஆலயத்தின் பின்பக்கச் சுவரில் சூரியன் பன்னிரு கைகளுடன் அர்க்க வடிவில் செதுக்கப்பட்டிருந்தான். ஏழுவண்ணம் கொண்ட ஏழு குதிரைகள் அவன் ரதத்தை இழுத்தன. அது செந்தழல்வடிவமாக இருந்தது. தேர்முனையில் தேரோட்டியான மாதலி அமர்ந்திருந்தான். சூரியனின் பன்னிரண்டு கரங்களில் கீழ் வலக்கை அஞ்சல் முத்திரையும் கீழ் இடக்கை அருளல் முத்திரையும் கொண்டிருந்தது. மேல் இருகைகளில் மலர்ந்த தாமரைகள் இருந்தன. மற்ற கைகளில் வஜ்ரம், பாசம், அங்குசம், கதை, தனு, சக்கரம், கட்கம், மழு ஆகிய ஆயுதங்கள் இருந்தன.
இடப்பக்கச் சுவரில் சூரியனின் மித்ர வடிவச் சிலை இருந்தது. ஒளிவிடும் பொற்தாமரை மீது பச்சைநிறமான உடலுடன் வலது மடியில் பொன்னிறமான சம்ஞாதேவியும்  இடது மடியில் நீலநிறமான சாயாதேவியுமாக செந்தழல் முடி சூடி மித்ரன் அமர்ந்திருந்தான். ஒளிதேவி பெற்ற மைந்தர்களான மனு, யமன், யமி ஆகிய குழந்தைகள் அவளுடைய காலடியில் அமர்ந்திருந்தனர். நிழல்தேவி பெற்ற சனைஞ்சரன், மனு, தபதி என்னும் மூன்று குழந்தைகள் அவள் காலடியில் அமர்ந்திருந்தனர்.
கருவறை முன்னால் வந்து சிகண்டி நின்றான். உள்ளே பழமையான ஒரு பட்டைக்கல் நாட்டப்பட்டிருந்தது. அதில் மிகமழுங்கலான புடைப்புச்சிற்பமாக சூரியனின் சிலை இருந்தது. இரு கைகளிலும் தாமரைகளுடன் அவன் பன்றிமீது அமர்ந்திருந்தான். இருபக்கமும் தொங்கிய வெண்கல விளக்குகளில் நெய்ச்சுடர்கள் மலர்க்கொத்துக்கள் போல அடர்ந்திருக்க கருமையாக ஒளிவிட்ட அச்சிலைக்கு செந்நிற, பொன்னிற, வெண்ணிற மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. பூசகர்கள் மூவர் உள்ளே அமர்ந்து வேதமந்திரங்களால் சூரியனை துதித்துக்கொண்டிருந்தனர்.
சிகண்டி அங்கே சிலகணங்கள் மட்டும் நின்றான். அவன் கண்கள் வராகத்தைத்தான் பார்த்தன. கல்லின் இருட்டுக்குள் இருந்து அது எழுவதுபோலிருந்தது. இருளுக்குள் சூரியன் அதை மிதித்துத் தாழ்த்துவது போலவும் அதன்மேல் பீடம்கொண்டு அமர்ந்திருப்பதுபோலவும் ஒரேசமயம் எண்ணச்செய்தது.
சிகண்டி திரும்பி படிகளில் இறங்கி கீழே வந்தான். விரிந்த சாலை இருபக்கமும் பெரியமுற்றங்களை நோக்கிச் சென்றது. அம்முற்றங்கள் சந்தையாகவும் கேளிக்கையிடங்களாகவும் ஒரேசமயம் திகழ்ந்தன. தோளோடு தோள்முட்டியபடி மக்கள் அங்கே கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். விதவிதமான பொருட்களைக் குவித்துப்போட்டு சிறுவணிகர்கள் விற்றுக்கொண்டிருந்தனர். கனத்த கட்டிகளாக அடுப்புக்கரிதான் அதிகமும் விற்கப்பட்டது. அவர்கள் அங்கே அதிகமும் நுகரும் அப்பொருள் வெளியே மலைகளில் இருந்துதான் வரவேண்டும் என சிகண்டி நினைத்தான்.
விதவிதமான தோல்கள் ஆடைகளாக மாற்றப்படாதவை. மரவுரிநார்கள், புல்நார்கள், கையால்பின்னப்பட்ட ஆடைகள், மீனிறகுகள், உலோக ஆயுதங்கள், சுறாமீன்பற்களாலான கத்திகள், பலவகையான மூலிகைவேர்கள், வண்ணப்பொருட்கள், மரத்தில் செதுக்கப்பட்ட பாவைகள். கூவியும் சிரித்தும் வசைபாடியும் அவற்றை வாங்கிக்கொண்டிருந்தவர்கள் நடுவே குரங்குகளை கயிற்றிலும் கோலிலும் தாவச்செய்து வித்தைகாட்டினர் சிலர். ஒரு வட்டத்துக்குள் வெண்குதிரை ஒன்று வாலைச்சுழற்றியபடி தலைப்பாகைக்காரனின் மத்தளத்தின் தாளத்துக்கு ஏற்ப நடனமிட்டது.
பெரிய கூட்டம் கூடிநின்ற இடத்தில் சிறிய கண்களும் வெண்களிமண் குடம் போன்ற முகமும் கொண்ட பீதர் இனத்து வீரன் ஒருவன் அம்புகளால் வித்தை காட்டிக்கொண்டிருந்தான். மேலே ஒரு கயிற்றில் கட்டப்பட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த பனையோலையால் ஆன கிளிகளை சிறிய அம்புகளால் சிதறடித்தான். “அறைகூவல்….அறைகூவல்…அந்த நீலக்கிளியை ஏழு அம்புகளுக்குள் சிதறடிப்பேன். என்னால் முடியாதென்பவர்கள் பந்தயம் வைக்கலாம்….” என்றான். அவன் தாடி பாறையின் தொங்கும் வேர்கொத்து போல நீளமாகத் தொங்கியது.
இருபது வெள்ளி நாணயங்கள் பந்தயமாக கீழே விரிக்கப்பட்டிருந்த மான் தோலில் விழுந்தன. சிகண்டி தன் வில்லின் நாணை மெல்லச் சுண்டினான். அனைவரும் திரும்பிப்பார்த்தனர். “ஒரே அம்பால் அந்தக் கிளியை நான் வீழ்த்துகிறேன். இந்த நாணயத்தை நான் எடுத்துக்கொள்ளலாமா?’ என்றான். கூட்டம் கூக்குரலெழுப்பி அவனை ஆதரித்தது. சிகண்டி முன்னால் சென்று அவர்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குள் அந்தக்கிளியை தன் அம்பால் சிதறடித்தான். கூட்டம் களிவெறிகொண்டு கூச்சலிட்டது. இருகைகளையும் வீசி எம்பிக்குதித்தது. வெள்ளிநாணயங்கள் மீன்கள் துள்ளுவதுபோல வந்து மான்தோலில் விழுந்தன.
சிகண்டி அந்த பீதர் இன வீரனிடம் “இருபது நாணயங்கள் எனக்குப்போதும்” என்றபின் குனிந்து எடுத்துக்கொண்டான். எஞ்சிய நாணயங்களைப் பொறுக்கியபடி அவன் “வீரரே நீர் பரசுராமரின் மாணவரா?” என்றான். சிகண்டி பேசாமாலிருந்தான். “அல்லது பீஷ்மரின் மாணவர், இல்லையா?” சிகண்டி பதில் சொல்லாமல் சென்றான். பீதன் பின்னால் வந்து “அக்னிவேசரின் மாணவர், ஐயமே இல்லை” என்றான். சிகண்டி திரும்பிப்பார்க்காமல் நடந்தான். “வீரரே, என் பெயர் ஜிங் சாங். ஷாங் மன்னர்களின் குடிமகன். யாங் பள்ளியிலும் த்ஸு பள்ளியிலும் வில்வித்தை பயின்றவன். நான் அக்னிவேசரை வணங்கியதாகச் சொல்லுங்கள்.”
தெருவில் சிகண்டி நடந்தபோது ஒரு ஒல்லியான பிராமணன் பின்னால் ஓடி வந்தான். “நான் கஸ்யப கோத்திரத்தவனான அக்னிவர்ணன் வீரரே. இங்கே வரும் மலைமக்களுக்கு நான் இந்நகரத்தைப்பற்றிச் சொல்கிறேன்… நான் உங்களுக்கு அரிய தகவல்களைச் சொல்லமுடியும்.” சிகண்டி திரும்பிப்பார்க்காமல் சென்றான். “நீங்கள் ஆண் என்றால் நான் சிறந்த பரத்தையரின் வீடுகளைப்பற்றிக்கூடச் சொல்வேன். பிராமணனை மதிப்பவர்கள் அவர்கள். அவர்களைப்பற்றி நான் கவிதைகள்கூட எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இப்போதே பாடிக்காட்டுகிறேன்.”
விடாது சிகண்டியைப் பின்தொடர்ந்தபடி “திரிகர்த்தர்கள் ஆளும் இந்த நாடு திரிகர்த்தம் என்றழைக்கப்படுகிறது. காசியபவம்சத்தில் பிறந்தவர்கள் எங்கள் அரசர்கள். இவர்களின் வம்சம் வடக்கே மலைகளுக்குள் சைத்ரபீடம் என்னும் கிராமத்தை ஆண்டுவந்தது. அதைச்சேர்ந்த விராடன் என்ற அரசர் அஷிக்னி நதியில் படகில் வரும்போது இந்தக் கரையில் ஆயிரக்கணக்கான அன்னப்பறவைகளைக் கண்டார். இது புனிதமான மண் என்று உணர்ந்து இங்கே அவரது நகரத்தை அமைத்தார். அன்றுமுதல் இது ஹம்சநகரம் என அழைக்கப்பட்டது” என்றான்.
தலையை அசைத்தபடி சிகண்டி நடந்தான். “ஸமுகியும் ஜனமுகியும் பேசும் மக்கள் இங்கே வாழ்கிறார்கள். தேவமொழியின் அபபிரம்சமான மூலத்வனி என்னும் மொழியை இங்குள்ள உயர்குடியினர் பேசுகிறார்கள். இது காசியபர் திரேதாயுகத்தில் உருவாக்கிய நகரத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டிருப்பதனால் இதை காசியபநகரம் என்கிறார்கள். இதற்கு சம்பாபுரி என்றும் வேகபுரி என்றும் பெயர்கள் உண்டு. இங்குள்ள சூரியகோயில் எங்கள் முதல் மன்னராகிய விராடரால் அமைக்கப்பட்டது. ஏனென்றால் இது சூரியன் தன் உக்கிரமான செங்கோலை ஊன்றி சற்றே இளைப்பாறிச்செல்லும் இடம். ஆகவே இதை மூலஸ்தானநகரி என்றும் அழைப்பதுண்டு…மேலும்…”
சிகண்டி கையை அசைத்து அவனிடம் செல்லும்படி சொன்னான். “இருபது வெள்ளியை வைத்திருக்கும் கொடைவள்ளலான நீங்கள் அப்படிச் சொல்வது அழகல்ல. நான் மனைவிகளும் குழந்தைகளும் உடைய பிராமணன். அதேசமயம் பசுக்களும் வேதஅதிகாரமும் இல்லாதவன்.” சிகண்டி அவனைப் பார்த்தபோது அவன் பார்வையை விலக்கி சற்றே நெளிந்து “அத்துடன் மது அருந்துபவனும்கூட” என்றான். சிகண்டி மெல்லிய உறுமலால் அவனை தன்னைத் தொடரும்படிச் சொல்லி நடந்தான்.
“என் பெயர் ஸுக்திகன். நாங்கள் மீன் உண்ணும் பிராமணர் என்பதனால் எங்களுக்கு வைதிக அதிகாரம் இல்லை. வைதிகபிராமணர்கள் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் சண்டிபூசை செய்யும்போது மீன் உண்கிறார்கள். நாங்கள் அனைவருமே தெற்கே கூர்ஜரத்தில் கடலோரமாக வாழ்ந்தவர்கள். அங்கே மீன் மட்டும்தான் கிடைக்கும். என்பெயரேகூட சிப்பி என்றுதான் பொருள்படுகிறது…” என்றபடி அவன் பின்னால் வந்தான்.
“சிறந்த மதுவை உங்களுக்கு வாங்கித்தருவது என் பொறுப்பு வீரரே” என்றான் ஸுக்திகன். “இங்கே மலையோரத்து மக்கள் ஹந்தா என்ற மதுவை காய்ச்சுகிறார்கள். அரிசிக்கஞ்சியில் பதினேழுவகையான மூலிகைகள் அடங்கிய மாத்திரைகளைப்போட்டு ஏழுநாட்கள் புதைத்துவைத்து எடுக்கிறார்கள்” என்றான். “உண்மையில் இதிலுள்ள முக்கியமான மூலிகையை அஹிஃபீனா என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பாம்பின்எச்சில் என்று பொருள். சிறிய குட்டையான செடி. அதை வறண்ட மலைச்சரிவுகளில் வளர்க்கிறார்கள். அதன் இலைகள் பூ கனி எல்லாமே விஷம். நினைவை மறக்கச்செய்யும். அதை உடலில் செலுத்தியபின் நம் கையை நாமே வாளால் அறுத்துக்கொள்ளலாம். வலியே இருக்காது. அதன் இலைகளைத்தான் இந்த மதுவிலே போடுகிறார்கள்.”
பெரிய பாதையில் இருந்து இறங்கிச்சென்ற இடுங்கிய படிகள் ஓர் ஓடைக்குள் சென்று சேர்ந்தன. அதன் வழியாகத்தான் நகரின் கழிவுநீர் முழுக்க நதியைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நகருக்குள் புதைக்கப்பட்ட மண்குழாய்கள் வழியாகச் சேர்ந்த நீர் கருமையாக நாற்றத்துடன் சரிவுகளில் நுரைத்தபடி சென்றது. அந்த நீர்வழி நடமாடும் வழியாகவும் இருந்தது. அதன் கிளை ஒன்று ஒரு மரவீட்டுக்குள் சென்றது. அதை நெருங்கும்போதே உரத்த பேச்சொலிகளும் குழறல்களும் சிரிப்புகளும் கேட்டன.
மரவீட்டுக்கு முன்பு கற்களிலும் தரையிலுமாக பலர் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். சிகண்டியைக் கண்டதும் நாலைந்துபேர் எழுந்துவந்தனர். அவனுடைய உடலைக் கூர்ந்து நோக்கிய ஒருவன் “நீ நபும்சகம்தானே?” என்றான். சிகண்டி உறுமல் ஒலி எழுப்பி அவனைத் தள்ளிவிட்டு அங்கே சென்று அமர்ந்தான். ஸுக்திகன் அங்கு பெரிய மரக்குடுவையில் புளித்து நுரைத்துக்கொண்டிருந்த வெண் திரவத்தை சுரைக்கொப்பரை அகப்பையால் அள்ளி விதவிதமான கொப்பரைக்குவளைகளில் பரிமாறிக்கொண்டிருந்தவனிடம் “அண்ணா இவர் நம்மில் ஒருவர். ஆனால் இருபது வெள்ளி நாணயங்களுக்கு சொந்தக்காரர். இவரை மகிழ்விக்கவேண்டியது நம் பொறுப்பு” என்றான்.
ஒற்றைக்கண் கொண்டிருந்த அந்தக் கரிய பேருடல் மனிதன் மஞ்சள்நிறப் பற்களைக் காட்டி நகைத்துக்கொண்டு “முதலில் ஒருகுவளை அருந்தச்சொல் பிராமணனே, அதன்பின் இருபது வெள்ளிக்கும் குடிப்பார். வெளியே சென்று மேலும் இருபது வெள்ளிக்காக கொள்ளை அடிப்பார்” என்றான். கூடி நின்ற அனைவரும் சிரித்தனர். இருவர் எழுந்து சிகண்டியை நெருங்கி ஆவலுடன் நின்றனர். சிகண்டி மொத்த நாணயத்தையும் எடுத்து அவன் முன் வைத்து “மது” என்றான். கூட்டம் உரக்கக் கூச்சலிட்டது. அனைவருமே குவளைகளுடன் நெருங்கி வந்தனர்.
கடும்புளிப்புடனும் மூலிகைநெடியுடனும் இருந்தது அது. “வீரரே, இதற்கு கொலைகாரன் என்ற பெயர் வந்தது ஏன் தெரியுமா?” என்றான் ஸுக்திகன். சிகண்டி தலைகுனிந்தபடி குடித்தபடியே இருந்தான். அவனைச்சுற்றி பேச்சொலிகளும் சிரிப்பொலியும் முழங்கின. சற்றுநேரத்தில் அத்தனை குரல்களும் நீருக்குமேலே ஒலிப்பதுபோலவும் அழுத்தம் மிக்க ஆழத்தில் அவன் மூழ்கி அமர்ந்திருப்பதாகவும் தோன்றியது.
ஸுக்திகன் அவனை குனிந்து நோக்கி ஏதோ கேட்டான். சிகண்டி உறுமினான். அவன் மீண்டும் இருமுறை கேட்டபின்புதான் அவனுக்கு அச்சொற்கள் புரிந்தன. “நீங்கள் உங்கள் எதிரியைத் தேடிச்செல்கிறீர்கள். அவனைக் கொல்வதாக வஞ்சினம் உரைத்திருக்கிறீர்கள் என்று சொன்னேன்… நான் சொல்வது உண்மையா இல்லையா?” என்றான் ஸுக்திகன். சிகண்டி உறுமலுடன் மீண்டும் குடித்தான். “ஆம் என்கிறார்!” என்றான் ஸுக்திகன்.
“வீரரே, நீங்கள் எங்கு செல்லவேண்டும்?” என்று ஒருவன் குனிந்து கேட்டான். சிவந்து எரிந்த கண்களால் சிகண்டி நிமிர்ந்து நோக்கி “என் எதிரி பாரதவர்ஷத்தின் மாபெரும் வீரர். அவரை ஒருவர் ஒரே ஒருமுறை வென்றிருக்கிறார். அவரைத் தேடிச்செல்கிறேன். என் எதிரியைப்பற்றி அவர்தான் எனக்குச் சொல்லமுடியும்” என்றான். “யார் அவர்?” என்று நாலைந்துபேர் குனிந்தனர். “சிபிநாட்டின் பிதாமகராகிய அவர் பெயர் பால்ஹிகர்” என்றான் சிகண்டி.

No comments:

Post a Comment