அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/31/14

165 .ம்ருகண்டு மகரிஷி கோத்ரம்

ம்ருகண்டு என்னும் சொல் தமிழில் மிருகண்டு என்று வழங்கப்பெரும். மார்க்கண்டேய மகரிஷியின் தகப்பனார் மிருகண்டு மகரிஷி. மிருகண்டு மகரிஷியின் தகப்பனார் மிருகண்டூயர் எனப்பெறும் கௌசிக மகரிஷியாவார். எனவே வம்சாவளி பின்கண்டவாறும். 
குச்சக மகரிஷி 
மிருகண்டூயர் எனப்பெறும் கௌசிக மகரிஷி. 
மிருகண்டு மகரிஷி. 
மார்க்கண்டேயர் 

அந்தலதாரு என்று வழங்கப்பெறும் ஏந்தேலாரின் கோத்ர ரிஷி மிருகண்டூயர் என்று பெயருள்ள கௌசிக மகரிஷியாவார். 

மிருகண்டூயர் பெயர்க்' காரணம் :- கௌசிக மகரிஷி கடுந்தவம் மேற்கொண்டார். தவத்தில் கௌசிகர் தம்மை மறந்தார். நீண்டகாலம் நின்று கொண்டே தவம் இயற்றினார். காட்டிலிருந்த மிருகங்கள் தம்உடல் தினவுதீர கௌசிகர் மீது தேய்த்துக்கொள்ளும். இந்நிலையிலும் கலையாத தவசித்தி உடையவர் இவர். இப்படி உலக நினைவே இல்லாமல் கடுந்தவம் செய்யும் கௌசிகர்மீது மிருகங்கள் உராய்ந்ததால் மிருகண்டூயர் என்ற காரணப்பெயர் பெற்றார். இதிலிருந்து கௌசிக மகரிஷியின் தவவன்மை புலப்படும். 

இத்தகைய கௌசிக மகரிஷியின் குமாரர்தான் மிருகண்டு மகரிஷி. இம்மிருகண்டு மகரிஷி முத்கல மகரிஷியின் மருத்துவதியை மணந்தார். நீண்ட காலம் புத்திரர் இல்லாமல் வருந்திய மிருகண்டு சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். 

சிவபிரான் தரிசனம் தந்தார். நோயும், அஞ்ஞானமும், தீர்க்காயுளும் உடைய அநேக குமாரர்கள் வேண்டுமா ? அல்லது பதினாறு ஆண்டு ஆயுளும், ஞானமும், ஒழுக்கமும் மிக்க ஒரே மகன் வேண்டுமா? எனச் சிவபிரான் கேட்க, பதினாறு ஆண்டு ஆயுளும், ஞானமும், ஒழுக்கமும் மிக்க ஒரே மகன் வேண்டும் என வரம் கேட்டார் மிருகண்டு. இவ்வரத்தின் பயனாக உதித்தவர்தான் மார்க்கண்டேயர். 

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தெலதவரு :- சிலம்பின் வடிவமாய் விளங்கும் ஒருவகைக் கழல். இதனை வீரத்தின் சின்னமாக ஒற்றைக் காலில் அணிவது வழக்கம். அந்தெலத்தைக் காலில் அணிபவர் அந்தெலதவரு. இப்பெயர் ஏந்தேலாரு என மருவி வழங்குகின்றது. 

அஜதவரு :- பிரம்மாவை வழிபடுபவர். 
கருடதவரு :- கருடாழ்வாரை வழிபாடு செய்பவர். 
கண்டதவரு :- அழகான கழுத்துடையவர். 
குண்டலிதவரு :- குண்டலிபுரத்தைப் பூர்வீகமாக உடையவர். படவீட்டிற்குதக் குண்டலிபுரம் என்று பெயர். 
தபம்தவரு :- தவத்தில் வல்லவர். 
தீபம்தவரு :- தீபவழிபாடு செய்பவர். 
தோனிபர்த்தினிதவரு :- தோனிபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
நாணதவரு :- பழிபாவங்களுக்கு நாணுபவர். 
பந்தாரதவரு :- பந்தாரை மரத்தின் கீழ் வழிபாடு செய்பவர்கள். 
பிஞ்சலதவரு :- பிஞ்சல என்னும் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
இண்டிதவரு :- வீடு கட்டி வாழ்ந்தவர். 
வஜ்ரதவரு :- வஜ்ரம் - வைரம்; வைராபரணம் அணிபவர். வைர வணிகர். 
கட்டுதவரு, கன்டுதவரு, காருடதவரு, குட்டுதவரு, கென்டுதவரு, கேன்டுதவரு, கொக்கிதவரு, கோக்கேதவரு, நார்கதவரு, நார்னதவரு, நானம்தவரு, ரெட்ளதவரு, ரொன்ட்ளாதவரு.

No comments:

Post a Comment