அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/20/14

154 .மாண்டவ்ய மகரிஷி கோத்ரம்

சாளுவ மன்னன் பொக்கிஷத்தைக் கள்வர் சிலர் கொள்ளையிட்டனர். கொள்ளையரைத் துரத்திக்கொண்டு காவலர் சென்றனர். காவர்க்கு அஞ்சி ஓடிய கள்வர்கள் மாண்டவ்ய மகரிஷியின் ஆசிரமத்துனுள் நுழைந்தனர். காவலர் ஆசிரமத்தினுள் வந்து கள்வரைப் பிடித்தனர். களவு போன பொருட்களைக் கள்வர் ஆசிரமத்தினுள் போட்டு வைத்திருந்தனர். கள்வர்களும், களவு போன பொருள்களும் ஆசிரமத்துள் இருந்தமையால், யோகத்தில் ஆழ்ந்திருந்த முனிவரையும் கள்வன் எனக் காவலர் எண்ணி யோகநிலையிலிருந்த அவரையும், கள்வர்களையும் மன்னன்முன் கொண்டு சென்றனர் காவலர். விசாரணையில் முனிவர் வாய் பேசாது இருந்தார். கள்வர்களும்; பொருள்களும் ஆசிரமத்தினுள் இருந்ததைக் காவலர் மன்னனுக்கு அறிவித்தனர். அனைவரயும் கழுவில் ஏற்றுமாறு மன்னன் ஆணையிட்டான். 

அனைவரும் கழுவில் ஏற்றப்பட்டனர். யோகம் கலைந்து முனிவர் நினைவிற்கு வந்தபோது தாம் கழுவில் ஏற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தார். மீண்டும் யோகத்தினால் தம் உடம்பினைக் காற்றைப் போல் லேசானதாக மாற்றிக் கொண்டு முனிவர் கழுவில் இருந்தார். 

இந்நிலையில் தன் கணவர் மௌத்கல்யரைக் கூடையில் ஏந்திக்கொண்டு வந்தாள் நளாயினி. கூடை மாண்டவ்யரின் காலில் பட்டது. கழுவில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த முனிவருக்கு இதனால் வருத்தம் ஏற்பட்டது. 

" இந்த இரவு விடிந்தவுடன் உன் மாங்கல்யம் அறக்கடவது " என முனிவர் சாபம் இட்டார். " விடிந்தால் தானே மாங்கல்யம் அறும்; விடியாமல் இருக்கக் கடவது, " என நளாயினி மரு சாபம் இட்டாள். 

இதனால் எந்தக் காரியங்களும் நிகழவில்லை. தேவ காரியங்கள் தடைபட்டன. திரிமூர்த்திகளும் இந்திராதி தேவர்களும் வந்து இருவரையும் சமாதானப் படுத்தி இருவருக்கும் நன்மை ஏற்படும் வண்ணம் ஓர் ஏற்பாட்டினைச் செய்தனர். பொழுது விடிந்தது மௌத்கல்யர் இறந்து பின் பிழைத்தார். 

இதனைச் சாளுவ மன்னன் உணர்ந்து வருந்தினான். முனிவருக்கு இழைத்த பிழைக்கு வருந்தி அவரைக் கழுவிலிருந்து இறக்கினான். கழுமுனை அவர் பிடரி வழியே பொத்துக்கொண்டு வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. அதனை எடுக்க வழியில்லாது அப்படியே விட்டனர். 

முனிவர் அவ்வாணியில் பூக்கடலையைத் தொங்க விட்டுக் கொண்டார். இதனால் அவருக்கு ஆணிமாண்டவ்யர் என்ற பெயர் உண்டாயிற்று. 

ஆணிமாண்டவ்யர் யமனை அழைத்தார். எந்தத் தவரும் இழைக்காத எனக்குக் கழுவில் தொங்கும் தண்டனையை ஏன் விதித்தாய் எனக் கேட்டார். சிறுவயதில் தும்பிகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் அவற்றின் பின்புறத்தில் முள்ளால் குத்தி விளையாடியதை நினைவுறுத்தி அதனாலேயே இத்தண்டனை என்றான் எமன். 

" யமனே! அறியாப் பருவத்தில் செய்த தவ்ற்றினுக்குக் கடுந்தண்டனை விதித்தாய்; எனவே நீயும் மனிதனாய்ப் பிறப்பாய் " என்று சபித்து, இனி பாலகர் செய்யும் தவறுகளை பாவமாகக் கருத் வேண்டாம் என ஆணையிட்டார். 

மாண்டவ்யரின் சாபத்தினை ஏற்ற யமன் விதுரனாகப் பிறந்தான் என்பது பாரதத்தினுள் காணப்படும் வரலாறு.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பக்திமால்யதவரு - பஹூத்மல்லனாரு :- பக்தியையே மாலையாக அணிந்தவர். பக்திமால்யதவரு என்ற பெயர்தான் பஹூத்மல்லனாரு என்று அழைக்கப்படுகின்றது. 

கட்டியதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் அம்மனுடைய திருக்குணங்களையும் வீரதீர பராக்கிராமங்களையும் கட்டியமாக கூறுபவர். 

குச்சுதவரு :- மலர்க் குச்சுகட்டி வாழ்ந்தவர். 

குஜ்ஜலதவரு :- கர்நாடகாவில் உள்ள குஜ்ஜலம் என்னும் ஊர்க்காரர். 

சரிகெதவரு :- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகைச் சாதனகங்களுள் சரியைச் சாதனத்தில் வல்லவர். 

சீதளாதவரு :- பதினாறு வகைச் சக்திகளுள் ஒரு சக்தியான சீதளாதேவியை வழிபடுபவர். 

ஸ்தம்பிதவரு :- சுவாசத்தைத் தம்பிக்கச் செய்பவர். இது யோக முறைகளுள் ஒன்று. 

தர்க்கதவரு :- தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர். 

துளசதவரு :- துளசிச்செடி அடியில் வழிபாடு நிகழ்த்துபவர். 

நிதானதவரு :- அமைதியானவர். 

பஞ்சரதவரு :- கிளியை வளர்ப்பவர். 

பண்ணசரதவரு :- சிவத்த உடல் கொண்டவர். 

பிரசங்கதவரு :- பிரசங்கம் செய்பவர். 

மன்னாதவரு :- மண்ணேதவரு என்று வழங்கப்படுகின்றது. தவறுகளை மன்னிக்கும் இயல்புடையவர். 

மிஞ்சுதவரு :- கால் விரலில் மிஞ்சு அணிபவர். 

மீமாம்சதவரு :- மீமாம்ச சாஸ்திரங்களில் வல்லவர். 

மெட்லதவரு :- கால் விரலில் மிஞ்சு அணிபவர். 

மேடம்தவரு :- மேடை அமைத்துக் கம்பளி விரித்து அமர வேண்டிய செட்டிகாரர். 

யெல்லஇண்டிதவரு :- எல்லை வீட்டுக்காரர். 

மேதனம்தவரு :- மேதாவி, மேதை. 

வெகுளிதவரு :- வெள்ளை உள்ளம் கொண்டவர். 

வியாபமானிதவரு :- வேப்பமரத்துக்காரர். 

கஞ்சியதவரு :- காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

பெள்ளியதவரு :- வெள்ளை உள்ளம் கொண்டவர். 

ஸ்ரீ தாளதவரு :- பனையில் ஆண்பனை, பெண்பனை என இருவகை உண்டு. இவர்கள் பெண்பனை மரத்தடியில் வீட்டுத் தெய்வ வணக்கம் செய்பவர். 

பர்ணதவரு :- பர்ணக சாலை கட்டி தவவாழ்க்கை வாழ்ந்தவர். இவர்கள் இன்று ஆந்திராவில் அதிகமாக வசிக்கின்றனர். 

கிட்டிதவரு, கிட்டதவரு, கிட்டெம்தவரு, கிண்டானதவரு, கிண்டிதவரு, சீதாதவரு, துனியாதவரு, தொலதவரு, மிண்டுலதவரு, வெஜூலதவரு, ஜூஜஜூதவரு, எஞ்ஜலதவரு, தொகலதவரு, ஜூஜிலதவரு.

No comments:

Post a Comment