அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/12/14

146 .மதங்க மகரிஷி கோத்ரம்

மதங்க மகரிஷிக்கும் அவர் தம் சீடர்களுக்கும் சபரி சேவை செய்து வந்தாள். இம் மகரிஷியின் தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மதேவர் இவரை சத்தியலோகத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் சபரியோ சத்தியலோகத்திற்குச் செல்லாமல் அவ்வுலகத்தை வேண்டாம் என மறுத்தாள். ஆசிரமத்தில் தங்கியிருந்த இராமபிரானை உபசரித்து அவனால் பரமபதம் பெற்றாள். 

மதங்கமாமுனிவரின் மாதவச் செல்வியாக, மகளாகக் காளிதேவி கருதப்படுகின்றனர். பிரியம்வதன் என்னும் கந்தருவனை; அவன் செய்த தவற்றிற்காக யானையாகச் சபித்தார் முனிவர். சூரியனிடமிருந்து இந்திரத்தநு என்னும் வில்லைப் பெற்று அதனைப் பரசுராம மூர்த்திக்குத் தந்தார் இம்முனிவர். 

துந்துபி என்னும் அசுரனுடன் போர்புரிந்து அவனைக் கொன்றான் வாலி. பின் அசுரன் உடலைத் தூக்கி எரிய இரத்தம் முதலியன இம்முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது கோபம் கொண்ட முனிவர், இனி ஆசிரமத்தின் எல்லையை, ரிஷ்ய முக பர்வதத்தின் எல்லையை மிதித்தால் தலை வெடித்து இறப்பாய் என வாலியைச் சபித்தார். இச்சாபம்தான் வாலியிடமிருந்து சுக்ரீவன் உயிர் பிழைத்து வாழ்வதற்குக் காரணமாய் அமைந்தது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தாசரிதவரு :- திருமால் அடியார்களை வழிபடுபவர். பஞ்ச சமஸ்காரம் செய்து கொண்டு தாசராக தாசாங்கம் மேற்கொண்டவர். 
தெளரிஜன்யதவரு :- தைரியம் மிக்கவர். 
லக்கிம்செட்டிவவரு :- இவ்வம்சத்தில் லக்கிம்ஸ்ரேஷ்டி என்பவர் புகழ்பெற்றவர். அவர் வம்சத்தினர். அதிர்ஷ்டசாலிகள். ஜானதவரு :- குயுக்தி மிக்கவர், தந்திரசாலிகள். லிங்கதவரு :- லிங்க தீட்சை பெற்றுக்கொண்டவர்.

No comments:

Post a Comment