அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/23/13

119 .பராசர மகரிஷி கோத்ரம்

வசிஷ்ட மகரிஷியின் குமாரர் சக்தி மகரிஷி. சக்தி மகரிஷியின் குமாரர் பராசரர். பராசரரின் தாயார் திரசந்தி. பராசரர் தம் தாய் வயிற்றில் கருவாக இருக்கும் பொழுதே, சக்தி மகரிஷி உதிரன் என்னும் அரக்கனால் கொல்லப்பட்டார். பராசரர் பிறந்து தம் தாயின் மடியில் இருக்கும்போது தம் தாய் அமங்கலியாக இருக்கக் கண்டு காரணத்தைக் கேட்டார். உதிரன் என்னும் அரக்கனால் உன் தந்தை இறந்தார் என அவள் கூறக் கேட்டு அரக்க இனத்தையே அழிப்பதற்காகச் சத்திரயாகம் செய்தார். 

யாகத்தின் பயனாய் அரக்கர் யாக குண்டத்தில் வந்து விழுந்து இறக்கலாயினர். பின் சிவபிரானும் புலஸ்திய பிரம்மாவும் வந்து வேண்டிக் கொள்ள யாகத்தை நிறுத்தினார். அதனால் மகிழ்ந்த புலஸ்தியர் பராசரருக்குப் புராணம் பாட அருள் செய்தார். 

விஷ்ணு புராணத்தை அருளினார் பராசரர். இவர் தம் தாய் வயிற்றில் பன்னிரண்டு ஆண்டுகள் கர்ப்பவாசம் செய்தார். இவரை எதிர்த்து வந்த அரக்கர் கூட்டம் விட்ட அஸ்திரங்களையும் சரங்களையும் பராஜயம் - தோல்வி அடையச் செய்தமையின் பராசரர் எனப்பட்டார். மன்மதனின் பஞ்ச பாணங்களையும் பராஜயம் அடையச் செய்தமையாலும் - காமத்தை வென்றவர் என்று பொருள் - பராசரர் எனப்பட்டார். 

பகைவர்களிடத்தும் கோபம் கொண்டு எதிரம்பு செலுத்தாமையாலும் பராசரர் எனப்பட்டார். தாயின் கர்ப்பத்தில் இருந்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டு வயிற்றைப் பீறிக் கொண்டு வந்ததாலும் பராசரர் எனப்பட்டார். 

தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணுமூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சி பூமியில் புதைத்தார். 

வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவரமுயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார். உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினிவீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்தது அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார். 

புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவானி கூடலில் உள்ளநதி இதுவாம். 

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சாதனதவரு ;- 
1) சரியை 
2) கிரியை வ் 3) யோகம் 
4) ஞானம் 
என்னும் சாதன சதுஷ்டயத்தில் ஊற்றமுடையவர்கள். 

துவாபாலகதவரு ;- அம்மன் திருவிழாவில் துவாரபாலகர்களாக திருத்தொண்டு செய்பவர். 

பில்வபத்ரதவரு ;- வில்வதளைகளால் வழிபாடு செய்பவர். 

பிண்டதவரு ;- பிதுரர்களுக்குத் தவறாது பிண்ட தர்ப்பணம் செய்பவர். 

போஜனதவரு ;- ஏழைகளுக்குப் போஜனம் வழங்கியவர். 

யெதலூரிதவரு ;- ஆந்திராவில் உள்ள யெதலூரு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

பக்கனதவரு ;- பக்கனபள்ளி என்னும் ஊர்க்காரர். 

சாமந்திதவரு ;- சாமந்தி மலர்களால் வழிபாடு செய்பவர். 

காஜிலதவரு, பூபெதவரு, பக்காதவரு, சும்மானதவரு.

No comments:

Post a Comment