தேவல மகரிஷி தேவாங்கரின் ஏழு அவதாரங்களில் முதல் அவதாரமாவார். இதன் பின் வித்யாதரர் முதலான ஆறு அவதாரங்கள் எடுக்கப்பட்டன. இவ்வவதார காலங்களுக்குப்பின் காளசேன மன்னன் காலத்தில் வம்ச விருத்தி அற்றுப் போனது. கௌதமர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்ய, யாகத்தின் பயனாய் காளசேனனுக்கு 10,000 குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகளுக்கு 700 மகரிஷிகளைக் கொண்டு உபநயனம் முதலான வைதீக காரியங்களையும் தீட்சைகளும் செய்விக்கப்பட்டன. எந்தெந்த மகரிஷிகள் எந்தெந்தக் குழந்தைகளுக்குத் தீட்சை செய்வித்தார்களோ அக்குழந்தைகளும் அவரின் வழிவந்தோர்களும் அந்தந்த மகரிஷிகளின் கோத்ரங்களைச் சார்ந்தவர்.
ஒருவேளை மகரிஷிகள் தீட்சை தருங்கால் தம் குலத்தோரை ஆசீர்வத்திக்க ஆதி தேவாங்கரான தேவல மகரிஷி வருகை தந்து இருக்கலாம். அவரும் ஒரு மகரிஷியாதலின் சில குழந்தைகளுக்குத் தீட்சை செய்து இருக்கலாம். இக்கோத்ர மகரிஷி தேவலரின் பெயரைத் தாங்கிப் பிற்காலத்து விளங்கிய ஒரு மகரிஷியாக இருக்கலாம்.
கோமுகதவரு :- பசுவின் முகம் போல் உள்ள கமண்டலத்தால் அபிஷேகம் செய்து செய்து சிவ வழிபாடு செய்பவர்கள்.
ஜிடாதவரு :- சேராங்கொட்டை மரத்தின் கீழ் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்கள். சேராங்கொட்டை கொண்டு பலவகை வைத்தியம் செய்பவர்கள்.
ரெப்பகதவரு, ரெப்பிதவரு.
ஒருவேளை மகரிஷிகள் தீட்சை தருங்கால் தம் குலத்தோரை ஆசீர்வத்திக்க ஆதி தேவாங்கரான தேவல மகரிஷி வருகை தந்து இருக்கலாம். அவரும் ஒரு மகரிஷியாதலின் சில குழந்தைகளுக்குத் தீட்சை செய்து இருக்கலாம். இக்கோத்ர மகரிஷி தேவலரின் பெயரைத் தாங்கிப் பிற்காலத்து விளங்கிய ஒரு மகரிஷியாக இருக்கலாம்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
சல்லாதவரு :- நீர்மோர் தானம் வழங்குபவர்கள்.கோமுகதவரு :- பசுவின் முகம் போல் உள்ள கமண்டலத்தால் அபிஷேகம் செய்து செய்து சிவ வழிபாடு செய்பவர்கள்.
ஜிடாதவரு :- சேராங்கொட்டை மரத்தின் கீழ் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்கள். சேராங்கொட்டை கொண்டு பலவகை வைத்தியம் செய்பவர்கள்.
ரெப்பகதவரு, ரெப்பிதவரு.
No comments:
Post a Comment