அதர்வ என்னும் மகரிஷிக்கும் சாந்திக்கும் உதித்த குமாரர் ததீசி மகரிஷி. இவருக்குத் தத்தியங்கர் எனவும் பெயர் உண்டு. இவர் குதிரை முகம் உடைய மகரிஷி எனவும் கூறுகின்றனர். துவஷ்டாவிற்கு நாராயண கவசம் உபதேசித்தவர் இவர்.
இந்திரன் பிரம்மஹத்யா தோஷம் பெற்றுத் துன்புற்றான். இதனால் இந்திரனைக் கொல்ல விருத்திராசுரன் பிறந்தான். இந்திரன் அசுரனிடம் போர் புரிந்து தோல்வியுற்றான். அசுரனை வெல்ல வேண்டும் எனில் புதிய வஜ்ராயுதம் பெற வேண்டும் என எண்ணினான்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைய வருகையில் இருதிறத்தாரும் ஆயுதங்களுடன் வந்தனர். அவ்வாயுதங்கள் எல்லாவற்றையும் ஸ்ரீ மகாவிஷ்ணு வாங்கி ததீசி முனிவரிடம் கொடுத்தார். முனிவர் அவ்வாயுதங்கள் அனைத்தையும் வாயிலிட்டு விழுங்கினார். அவை அனைத்தும் முனிவரின் முதுகுத் தண்டில் தங்கி இருந்தன. எனவே அவரின் முதுகுத்தண்டு பெருவன்மை பெற்று இருந்தது.
அதனை இந்திரன் உணர்ந்தான். முனிவரிடம் சென்றான். அவரின் முதுகெலும்பை யாசித்தான். " அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு " என்ற தெய்வப் புலவர் வாக்கினுக்கு ஏற்பத் ததீசி முனிவரும் தம் உயிரைப் பற்றிக் கவலை கொள்ளாது, தம்முதுகெலும்பை இந்திரனுக்குத் தானம் தந்து, தபோமகிமையால் உடலையும் உயிரையும் பிரித்துக் கொண்டார். அவரின் முதுகெலும்பில் வஜ்ஜிராயுதம் செய்து அகத்திய மகரிஷியின் துணையுடன் இந்திரன் விருத்திராசுரனைக் கொன்றான். கருணாமூர்த்தி இம்முனிவர்.
சூன்யதவரு :- ஏவல், பில்லி, சூன்யம் இவற்றை நிவர்த்தி செய்பவர்.
மிஞ்சலதவரு :- கால் விரலில் மிஞ்சு - மெட்டி அணிபவர்.
மிதேதவரு, கச்சிசதவரு.
இந்திரன் பிரம்மஹத்யா தோஷம் பெற்றுத் துன்புற்றான். இதனால் இந்திரனைக் கொல்ல விருத்திராசுரன் பிறந்தான். இந்திரன் அசுரனிடம் போர் புரிந்து தோல்வியுற்றான். அசுரனை வெல்ல வேண்டும் எனில் புதிய வஜ்ராயுதம் பெற வேண்டும் என எண்ணினான்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைய வருகையில் இருதிறத்தாரும் ஆயுதங்களுடன் வந்தனர். அவ்வாயுதங்கள் எல்லாவற்றையும் ஸ்ரீ மகாவிஷ்ணு வாங்கி ததீசி முனிவரிடம் கொடுத்தார். முனிவர் அவ்வாயுதங்கள் அனைத்தையும் வாயிலிட்டு விழுங்கினார். அவை அனைத்தும் முனிவரின் முதுகுத் தண்டில் தங்கி இருந்தன. எனவே அவரின் முதுகுத்தண்டு பெருவன்மை பெற்று இருந்தது.
அதனை இந்திரன் உணர்ந்தான். முனிவரிடம் சென்றான். அவரின் முதுகெலும்பை யாசித்தான். " அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு " என்ற தெய்வப் புலவர் வாக்கினுக்கு ஏற்பத் ததீசி முனிவரும் தம் உயிரைப் பற்றிக் கவலை கொள்ளாது, தம்முதுகெலும்பை இந்திரனுக்குத் தானம் தந்து, தபோமகிமையால் உடலையும் உயிரையும் பிரித்துக் கொண்டார். அவரின் முதுகெலும்பில் வஜ்ஜிராயுதம் செய்து அகத்திய மகரிஷியின் துணையுடன் இந்திரன் விருத்திராசுரனைக் கொன்றான். கருணாமூர்த்தி இம்முனிவர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கிண்டியதவரு ;- கிண்டி சாஸ்திரத்தில் வல்லவர். திருமணச் சடங்கினைப் பற்றிக் கூறுவது இச்சாஸ்திரம்.சூன்யதவரு :- ஏவல், பில்லி, சூன்யம் இவற்றை நிவர்த்தி செய்பவர்.
மிஞ்சலதவரு :- கால் விரலில் மிஞ்சு - மெட்டி அணிபவர்.
மிதேதவரு, கச்சிசதவரு.
No comments:
Post a Comment