அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/8/13

குலம்

தேவாங்கர்களுக்குள் குல விஷயங்கள் நடத்துவதற்காகப் பரம்பரையாகச் சிலருக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை 1. பட்டக்காரன் 2. நாட்டுஎஜமானன் 3. செட்டிமைக்காரன் 4. எஜமானன் 5. குடிகள் என்பனவாகும். இம்முறைப்படியே தாம்பூலம் மரியாதைகள் நடைபெறுகின்றன. திருமணம் ஈமச்சடங்குகள் மற்றுமுள்ள நலம் பொலம்காரியங்களை நடத்தச் சமூகத்திலேயே புரோகிதர்களும் கூட்டங்களில் தாம்பூலம் முதலியன வழங்கச் சேசராஜூ என்பவர்களும் உள்ளனர். முன்னைய நாட்களில் கோயிற் பணிகள் செய்யச் சில பெண்களும் கோயிலுக்கு விடப்பட்டனர். அவர்கள் மாணிக்கம் பங்காரு என்று அழைக்கப்பட்டனர். அப்பழக்கம் இப்போது இல்லை. இனிக் குலமக்கள் கோத்திரங்களாகப் பிரிந்துள்ளனர். ஒத்த கோத்திரங்களில் திருமண சம்பந்தம் செய்வதில்லை. வீட்டுப் பெயர்களும் தனித்தனியாக உள்ளன. கோத்திரங்களுக்கு மூலபுருடன் ஒரு ரிஷியாக இருப்பார்.

No comments:

Post a Comment